PDA

View Full Version : இரு தலைக்கொல்லி



இனியவள்
13-07-2007, 01:44 PM
முடிவில்லா வானம் போல்
முடிய வில்லை நான்
போகும் வாழ்க்கைப் பாதை.....

காற்றைச் சுவாசிக்க வெறுக்கின்றேன்
உன் மூச்சுக் காற்றையும் தாங்கி
வருவதால்.....

கண்கள் காணும் காட்சிகள்
அனைத்திலும் உன் விம்பம்
காணுவதால் கண் மூடி
வாழ முயற்சிக்கின்றேன்.....

இருளில் ஒளியாய் மூடிய
விழிகளுக்குள் கள்ளமாய்ச்
சிரிக்கும் உன் விம்பம் என்
சிந்தையைக் கலைக்கின்றது....

விழிகளை மூடவும் முடியாமல்
திறக்கவும் முடியாமல் தவிக்கின்றேன்
இரு தலைக்கொல்லி எறும்பாய்......:traurig001: :traurig001:

தமிழ்
13-07-2007, 01:46 PM
இந்த நிலை மிகவும் பரிதாபகரமானது..
ஏனெனில் பயத்தையும், பதட்டத்தையும் ஒரு சேர அனுபவிப்பது இந்த நிலை..

அமரன்
13-07-2007, 02:44 PM
இரு தலைகொல்லி எறும்பு. தலைப்புக்கு ஏற்ப கவிதையில் அப்படியே காட்சியை கொண்டுவருகின்றீர்கள். பாராட்டுகள் இனியவள்.

இனியவள்
14-07-2007, 08:34 AM
இரு தலைகொல்லி எறும்பு. தலைப்புக்கு ஏற்ப கவிதையில் அப்படியே காட்சியை கொண்டுவருகின்றீர்கள். பாராட்டுகள் இனியவள்.

நன்றி அமர்

இனியவள்
14-07-2007, 08:36 AM
இந்த நிலை மிகவும் பரிதாபகரமானது..
ஏனெனில் பயத்தையும், பதட்டத்தையும் ஒரு சேர அனுபவிப்பது இந்த நிலை..

ம்ம் ஆமாம்

மிகவும் பரிதாபகரமானது

சிலர் உண்மையை தெரிந்து
கொண்டும் அதனை சொல்ல
முடியாமல் தவிப்பார்கள்
சிலர் காதலித்து காதலை
மறக்க முடியாமலும் மறக்க
முயன்று கொண்டும் இருப்பினம்

அமரன்
14-07-2007, 08:51 AM
இனியவள் நீங்கள் சொவதை விடக் கோரமானது தெரிந்தும் தெரியாத மாதிரி,காதலித்தும் காதலிக்காத மாதிரி மற்றவர்களை சங்கடபடுத்துவது.

இனியவள்
14-07-2007, 09:01 AM
இனியவள் நீங்கள் சொவதை விடக் கோரமானது தெரிந்தும் தெரியாத மாதிரி,காதலித்தும் காதலிக்காத மாதிரி மற்றவர்களை சங்கடபடுத்துவது.

ம்ம் ஆமாம் அமர்

மனோஜ்
14-07-2007, 09:10 AM
சந்தர்ப்ப சூழ்நிலைகளும் இப்படி ஆக்குவது உண்டு
அருமை கவிதை இனியவள் அவர்களே

அக்னி
14-07-2007, 09:13 AM
அகப்படும் பார்வைவீச்சில்,
தெரியும் உன்னைத் தவிர்க்க,
கண்மூடினால்,
மூடிய கண்களுக்குள்..,
முழுதாய் ஒளிர்கின்றாய்...

காற்றின் தழுவல் உன்னையும்
தழுவி என்னையும் தழுவுவதை,
உன் மூச்சை என்னிடம் காவுவதை,
தவிர்க்க நினைத்து,
காற்றைத் தள்ளிவைத்தால்,
என் நாசியில் வாசமாய் வீசுகின்றாய்...

சப்தத்தின் ஸ்வரங்களை விலத்தி,
செவிப்புலனை, அடைத்தால்,
மௌனமாய் இசைக்கின்றாய்...

என் உயிரை விட்டு,
முழுதும் விலகுவோம் என்றால்,
உயிரில் உன்னை கலந்துவிட்ட என்னால்,
அதனைக் கலைக்கவும் முடியவில்லை,
கொல்லவும் இயலவில்லை...

இருதலைக்கொள்ளி எறும்பா நான்..,
இல்லை,
ஜலதோஷமும், தலைவலியும் திருகும்,
10 தலை இராவணனா...
இருப்பது இரு கைகள் போல,
எப்படிச் சமாளிக்க முடியும்..?

இருப்பது ஓர் இதயம் என்றால்,
இப்படியே எப்படி வாழ இயலும்..?

பாராட்டுக்கள் இனியவளே...

இனியவள்
14-07-2007, 09:13 AM
சந்தர்ப்ப சூழ்நிலைகளும் இப்படி ஆக்குவது உண்டு
அருமை கவிதை இனியவள் அவர்களே

நன்றி மனோஜ்

aren
14-07-2007, 09:30 AM
காதலை மறக்க நினைக்கும் ஒருவரின் நிலமையை அழகாக எடுத்துக்காட்டியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

இனியவள்
14-07-2007, 09:39 AM
அருமை அக்னி வாழ்த்துக்கள்
நான் சுருக்கி சொல்ல நினைத்ததை
நீங்கள் விரிவாய் சொல்லி அசத்தீட்டீங்கள்

வாழ்த்துக்கு நன்றி அக்னி

இனியவள்
14-07-2007, 09:40 AM
காதலை மறக்க நினைக்கும் ஒருவரின் நிலமையை அழகாக எடுத்துக்காட்டியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

நன்றி ஆரென் அண்ணா