rambal
26-05-2003, 04:24 PM
ஜாதியியல்..
பிறந்த பொழுது
பரீச்சயமில்லை
எதுவும்..
தவழ்ந்த பொழுதும்
அறிமுகமில்லை..
நடை வண்டி
பழகியபோதும்
உறவு இல்லை..
பின் எப்போது?
வண்ணத்துப் பூச்சிகள்
கண்டு
மகிழ்ந்த பின்புதான்..
ஆம்,
வண்ணத்துப் பூச்சிகள்
வாத்தியாராய் இருந்து
வண்ணங்களின் பிரிவு மூலம்
சொல்லிக்கொடுத்தது
ஜாதியியல்..
பிறந்த பொழுது
பரீச்சயமில்லை
எதுவும்..
தவழ்ந்த பொழுதும்
அறிமுகமில்லை..
நடை வண்டி
பழகியபோதும்
உறவு இல்லை..
பின் எப்போது?
வண்ணத்துப் பூச்சிகள்
கண்டு
மகிழ்ந்த பின்புதான்..
ஆம்,
வண்ணத்துப் பூச்சிகள்
வாத்தியாராய் இருந்து
வண்ணங்களின் பிரிவு மூலம்
சொல்லிக்கொடுத்தது
ஜாதியியல்..