இனியவள்
12-07-2007, 08:37 AM
என்னை ஏதோ செய்து விட்டாள்
நெஞ்சைப் பூப்போல் கொய்து விட்டாள்
என்று எனது தொலைபேசி இசைக்கத்
தொடங்க எனது தூக்கம் கலைந்தது......
இசையை ரசித்தபடியே நேரத்தைக்
கண்ணுற்றேன் அதிகாலை மூன்று மணி
விமான நிலையம் செல்வதற்கு ஆயத்தமாகிக்
கொண்டேன் கனவுகள் நிஜமாகப் போவதை
நினைத்து உள்ளம் ஆனந்தக் கூச்சல் போட்டது
அம்மா பெயரை உச்சரிக்கும் போதே
உடல் புல்லரித்தது....
இறக்கை கட்டிப் பறக்கும் மனதை
அடக்கிக் கொண்டு அதிகாலை
நேரக்காற்று என்னை உற்சாகமூட்ட
வாகனத்தில் ஏறிக்கொண்டேன்....
குப்பை கூலங்களால் நிறைக்கப்பட்டு
அலங்கோலமாக இவ்வளவு நாட்களும்
காட்சியளித்துக் கொண்டிருந்த வீதிகள்
இன்று மேகங்கள் செங்கம்பலமாய் மாறி
வீதிகளில் விரித்துக் காட்சியளித்தது எனது
கண்களுக்கு.....
சூரியன் தனது கதிர்களை விரித்து
அனைவருக்கும் காட்சியளிக்க வந்த
கோலம் எனதன்னை வருகைக்காய்
வானவேடிக்கை காட்டுவதைப் போல்
காட்சியளித்தது....
காதலியை காதலன் தழுவுவது போல்
தென்றல் இலைகளைத் தழுவ ஆனந்தக்
கூச்சல் போட்ட இலைகளின் சத்தம் ஒர்
அழகிய இன்னிசையைப் படைத்து என்
காதுகளுக்கு விருந்து படைத்துக் கொண்டிருந்தது......
விமான நிலையம் நெருங்க நெருங்க
கடவுளைக் கண்ட பக்தன் போல்
எனதுள்ளம் பூரிப்படைந்தது.....
வாகனத்தை மறித்து எனது சிறு வயதுக்
கனவு நிறைவேறப் போகும் நேரத்தை
விரயப் படுத்திய பொலிஸ்காரன் மனம்
அக்கினித் தீயை வீசிகொண்டிருந்தது
அதையறியாத அவன் எனது அடையாள
அட்டையை வாங்கி பறிசோதித்து கோமத(நலமா)
என கேட்க சூழ்நிலையால் வாய் பொய்
புன்னகை உதிர்த்தது....
ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாய் கடக்க
நான் இருந்த இடத்தை நோக்கி என்
அன்னை என்னும் தெய்வம் வந்து
கொண்டிருந்தது......
பறவை இறக்கை விரிப்பது போல்
என் கரங்களை விரித்து அம்மா
என்றழைத்துக் கொண்டு ஒடினேன்.....
என்னை ஏதோ செய்து விட்டாள்
நெஞ்சைப் பூப்போல் கொய்து விட்டாள்
என்று என் தொலைபேசி மீண்டும் அலறி
என்னை வெறுப்பேற்றி என்னை சுய
நினைவுக்கு கொண்டு வந்தது அலறிய
இசையை நிறுத்தி கண்ட இக் கனவு
இன்னும் சிறிது நேரத்தில் நிஜமாகப்
போவதை எண்ணி மனம் குளிர்ந்து
குளியலறை நோக்கி விரைந்தேன்...
நெஞ்சைப் பூப்போல் கொய்து விட்டாள்
என்று எனது தொலைபேசி இசைக்கத்
தொடங்க எனது தூக்கம் கலைந்தது......
இசையை ரசித்தபடியே நேரத்தைக்
கண்ணுற்றேன் அதிகாலை மூன்று மணி
விமான நிலையம் செல்வதற்கு ஆயத்தமாகிக்
கொண்டேன் கனவுகள் நிஜமாகப் போவதை
நினைத்து உள்ளம் ஆனந்தக் கூச்சல் போட்டது
அம்மா பெயரை உச்சரிக்கும் போதே
உடல் புல்லரித்தது....
இறக்கை கட்டிப் பறக்கும் மனதை
அடக்கிக் கொண்டு அதிகாலை
நேரக்காற்று என்னை உற்சாகமூட்ட
வாகனத்தில் ஏறிக்கொண்டேன்....
குப்பை கூலங்களால் நிறைக்கப்பட்டு
அலங்கோலமாக இவ்வளவு நாட்களும்
காட்சியளித்துக் கொண்டிருந்த வீதிகள்
இன்று மேகங்கள் செங்கம்பலமாய் மாறி
வீதிகளில் விரித்துக் காட்சியளித்தது எனது
கண்களுக்கு.....
சூரியன் தனது கதிர்களை விரித்து
அனைவருக்கும் காட்சியளிக்க வந்த
கோலம் எனதன்னை வருகைக்காய்
வானவேடிக்கை காட்டுவதைப் போல்
காட்சியளித்தது....
காதலியை காதலன் தழுவுவது போல்
தென்றல் இலைகளைத் தழுவ ஆனந்தக்
கூச்சல் போட்ட இலைகளின் சத்தம் ஒர்
அழகிய இன்னிசையைப் படைத்து என்
காதுகளுக்கு விருந்து படைத்துக் கொண்டிருந்தது......
விமான நிலையம் நெருங்க நெருங்க
கடவுளைக் கண்ட பக்தன் போல்
எனதுள்ளம் பூரிப்படைந்தது.....
வாகனத்தை மறித்து எனது சிறு வயதுக்
கனவு நிறைவேறப் போகும் நேரத்தை
விரயப் படுத்திய பொலிஸ்காரன் மனம்
அக்கினித் தீயை வீசிகொண்டிருந்தது
அதையறியாத அவன் எனது அடையாள
அட்டையை வாங்கி பறிசோதித்து கோமத(நலமா)
என கேட்க சூழ்நிலையால் வாய் பொய்
புன்னகை உதிர்த்தது....
ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாய் கடக்க
நான் இருந்த இடத்தை நோக்கி என்
அன்னை என்னும் தெய்வம் வந்து
கொண்டிருந்தது......
பறவை இறக்கை விரிப்பது போல்
என் கரங்களை விரித்து அம்மா
என்றழைத்துக் கொண்டு ஒடினேன்.....
என்னை ஏதோ செய்து விட்டாள்
நெஞ்சைப் பூப்போல் கொய்து விட்டாள்
என்று என் தொலைபேசி மீண்டும் அலறி
என்னை வெறுப்பேற்றி என்னை சுய
நினைவுக்கு கொண்டு வந்தது அலறிய
இசையை நிறுத்தி கண்ட இக் கனவு
இன்னும் சிறிது நேரத்தில் நிஜமாகப்
போவதை எண்ணி மனம் குளிர்ந்து
குளியலறை நோக்கி விரைந்தேன்...