PDA

View Full Version : பொது அறிவை வளர்க்க... எடக்கு முடக்கு சிந்தன&#



rambal
25-05-2003, 11:43 AM
பொது அறிவை வளர்க்க... எடக்கு முடக்கு சிந்தனைகள்...

1. லொள்ளு என்பது என்ன?
அ. அளவிற்கதிகமாய் நக்கல் செய்வது
ஆ. கொள்ளு போன்ற ஒரு பதார்த்தம்
இ. ஜொள்ளின் ஒரு வகை
ஈ. மேற்கூரியவைகளில் எதுவும் இல்லை

2. கடலை போடுவது என்றால்?
அ. நிலக்கடலையை கீழே போடுவது
ஆ. கடலில் அமர்ந்து தண்ணீர் போடுவது
இ. பெண்களிடம் வழிந்து கொண்டே பேசுவது
ஈ. கடலைப் பருப்பை உடைத்துப் போடுவது

3. ரவுசு என்றால் என்ன?
அ. இளசு
ஆ. அடாவடித்தனம்
இ. கிண்டல் கலந்த விமர்சணம்
ஈ. மேற்கூரியவைகளில் எதுவும் இல்லை

4. வயிற்றுக் கடுப்பு என்பது என்ன?
அ. அழகான பிகரை டொச்சு ஒருத்தன் தள்ளிக் கொண்டு போகும் பொழுது ஏற்படுவது
ஆ. கல்யாணவீட்டில் அளவிற்கதிகமாய் சாப்பிட்டால் வருவது
இ. பக்கத்துவீட்டு நபர் கார் வாங்கினால் வருவது
ஈ. இதில் எதுவும் இல்லை

5. நண்பர்களை மரியாதையாக அழைப்பது எப்படி?
அ. மாப்பிள்ளை
ஆ. மாம்ஸ்
இ. மச்சி
ஈ. அனைத்தும்


விடைகள்:

1. அ
2. இ
3. அ
4. அ
5. ஈ

நீங்கள் சொன்னதில் மூன்றிற்கு மேல் சரியான விடைகள் இருந்தால்..
நீங்கள் பெரிய டோனாதாங்கோ..

poo
25-05-2003, 03:39 PM
டோனான்னா இன்னா தலீவா?!!!!!!!!!!!

முத்து
25-05-2003, 11:28 PM
ஆகா .... என்ன ஒரு பொது அறிவுச்சிந்தனைகள்.......... பாராட்டுக்கள்...

இளசு
26-05-2003, 06:31 AM
ஆஹா .... புதிய பாணி... கலகலப்பு...
அருமை ராம்...
பாராட்டுகள்...
எனக்கும் "டோனா" ரேஞ்சுக்கு ஸ்கோர் வர்தே...
அப்டீனா என்னா?

அறிஞர்
26-05-2003, 07:39 AM
ரவுசு என்றால்... இளசா... நல்ல பதில்.......

karikaalan
26-05-2003, 01:09 PM
ராம்பால்ஜி!

நேத்துதான் IIT-க்கு பரீட்சை; அதுலயும் உங்களை விட்டு கேள்வி தொகுக்கச் சொல்லியிருக்கணும். வுட்டுட்டாங்களே!!

===கரிகாலன்

பி.கு.: நீங்கள் கூடவா 'ர', 'ற', வித்தியாசம் பார்க்காமல் தட்டச்சுகிறீர்கள்?
"மேற்கூரியவைகளில் எதுவும் இல்லை" -- இங்கே 'ரி' எவ்வாறு வரலாம்?

suma
26-05-2003, 03:21 PM
super

Dinesh
26-05-2003, 04:25 PM
மிக வித்தியாசமான கேள்விகள்களின் தொகுப்பு!!
மிகுந்த சுவாரசியத்தை ஏற்படுத்துகின்றது...
நன்றி ராம்பால் அவர்களே!
(பூ வின் சந்தேகம் எனக்கும்தான்)

தினேஷ்.

தென்னாட்டு சிங்கம்
27-01-2009, 05:51 PM
அட கொக்கமக்கா.. இங்கே இப்புடியெல்லாம் பொதுஅறிவு படிச்சி தராங்களேயா.. இதை படிக்கிறத் உட்டுட்டு ஜி.கேன்னு 3 கிலோ புத்தகத்தை கையில தந்து படிக்க சொல்றானுங்களே.. படு பாவிகள்..:D:D