namsec
10-07-2007, 11:28 AM
சிங்கப்பூரில் மருந்தில்லா மருத்துவம்
உடலில் மறைந்துள்ள பிராண சக்தியைப் பயன்படுத்தி நோயைக் குணமாக்கும் மருந்தில்லா மருத்துவ முறை சிங்கப்பூரில் செய்து காட்டப்பட்டது. மருந்தில்லா மருத்துவ முறை என்பது, உடல் தன்னைத்தானே சீரமைத்துக் கொள்ள உதவும் ஒரு பயிற்சியாகும். இந்த முறை மூலம் உயிர்ச் சக்தி அதிகரிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட உடல் பகுதியை சீர் செய்கிறது.
இந்த மருத்துவ சிகிச்சை முறைக்கு மருந்துகளோ கருவிகளோ தேவையில்லை. இந்த முறையைப் பயிற்சி செய்பவர் தனது பிராண சக்தியைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள சக்தி கோளாறுகளை நீக்கி, புத்துயிர் ஊட்டுகிறார். இதன் மூலம் உடலில் பாதிக்கப்பட்ட பகுதி விரைவில் குணம் அடைகிறது.
யிஷுன் ஸ்ரீ புனிதமரம் பாலசுப்ரமணியம் கோயிலில் இந்த மருத்துவ முறைக்கான இலவச செயல்முறை விளக்கத்தை தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திரா ராமமூர்த்தி செய்து காட்டினார். இந்த பயிற்சி முகாமில் பலர் ஆர்வத்துடன் பங்கேற்று பயன் பெற்றனர்.
நன்றி தினமலர்
உடலில் மறைந்துள்ள பிராண சக்தியைப் பயன்படுத்தி நோயைக் குணமாக்கும் மருந்தில்லா மருத்துவ முறை சிங்கப்பூரில் செய்து காட்டப்பட்டது. மருந்தில்லா மருத்துவ முறை என்பது, உடல் தன்னைத்தானே சீரமைத்துக் கொள்ள உதவும் ஒரு பயிற்சியாகும். இந்த முறை மூலம் உயிர்ச் சக்தி அதிகரிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட உடல் பகுதியை சீர் செய்கிறது.
இந்த மருத்துவ சிகிச்சை முறைக்கு மருந்துகளோ கருவிகளோ தேவையில்லை. இந்த முறையைப் பயிற்சி செய்பவர் தனது பிராண சக்தியைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள சக்தி கோளாறுகளை நீக்கி, புத்துயிர் ஊட்டுகிறார். இதன் மூலம் உடலில் பாதிக்கப்பட்ட பகுதி விரைவில் குணம் அடைகிறது.
யிஷுன் ஸ்ரீ புனிதமரம் பாலசுப்ரமணியம் கோயிலில் இந்த மருத்துவ முறைக்கான இலவச செயல்முறை விளக்கத்தை தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திரா ராமமூர்த்தி செய்து காட்டினார். இந்த பயிற்சி முகாமில் பலர் ஆர்வத்துடன் பங்கேற்று பயன் பெற்றனர்.
நன்றி தினமலர்