இனியவள்
10-07-2007, 09:41 AM
கல கலவென சிரிப்பு சத்தம்
உண்டியலில் இருந்து கொட்டிடும்
காசுகளைப் போல் மண்டபம் முழுதும்
எதிரொலித்தது....
சூரியனைக் காணாது குனிந்து
வாடி நிற்கும் சூரிய காந்திப்
பூப் போல் மணப் பெண்
தலை குனிந்திருந்தால்....
சந்திரனை நோக்கி ஈர்க்கப்
படும் காந்தக் கற்கள் போல்
மணமகன் நாடி வந்தான் அவள்
அருகே....
டும் டும் கொட்டி மேளம் முழங்க
நாதஸ்வரம் இசைக்க சங்கு போன்ற
கழுத்தில் மணமாங்கல்யம் அணிவித்தான்...
இரு மனம் சேர்ந்து ஒரு மனம்
ஆவதாம் திருமணம்..இவள் மனம் எங்கோ
நினைவினில் மூழ்கி இருக்க அவன் மனமோ
சிற்பிக்குள் இருக்கும் முத்துப் போல் இவளிடத்தில்
மூழ்க்கி இருந்தது.........
நண்பர்களின் கிண்டல்களுடன் கூடிய வாழ்த்துக்கள்
உற்றார் உறவினர் புடை சுழ கன்னியிவள்
கரம் பிடித்தான் காளையவன்....
மழையை எதிர் பார்த்துக் காத்திருக்கும்
பயிர் போல் பால் பொழியின் நிலவின்
வெளிச்சத்தில் பளிங்கு போல் இருக்கும்
துணைவியவள் முகம் பார்க்க காத்திருந்தான்
துணைவன்.....
மனதிலே ஒரு சுமையை சுமந்து கண்ணாளன்
முகம் நோக்க அச்சம் கொண்டு
அன்று தன்னை அனைத்துக் கொள்ள
மறுத்த பூமித் தாய் மீது கண்ணீர்
அபிஷேகம் செய்து கொண்டு இருந்தாள்
கன்னியிவள்...
அருவி போல் வழிந்தோடும் கண்ணீரோடும்
குறுகுறுக்க்கும் விழியோடும் பட படக்கும்
நெஞ்சோடும் அன்று உலர்ந்த பூப் போல்
அவன் முகம் பார்த்தாள்.....
குளிரில் நடுங்கும் தன் சேய்க்கு
ஆதரவாய் இறக்கை விரித்து
அரவணைக்கும் கோழி போல்
இவன் அரவணைக்க தைரியம்
பெற்ற குஞ்சு போல் சுமை இறக்கி
வைக்கும் தொழிலாளி போல் தன்
கடந்த கா(தல்)லத்தை கணவரிடம்
ஒப்புவித்தாள்.......
கண்கள் பேசி மெளனம் விளையாட
புன்னகைகள் ததும்பி குதுகலம்
அரும்பி ஓட வேண்டிய இடத்தில்
நிசப்தம் நிலவிக் கொண்டிருந்தது.....
சிறு குண்டுசீ மெளனத்தைக் கலைப்பது
போல் அவன் வார்ததைகள் அந்த
நிசப்தத்தைக் கலைத்தது....
கண்மணியே உலகை விட்டு சென்ற
உயிர்களைப் போன்றது கடந்த கால
காலங்கள் அதனை நினைத்து உன்
எதிர் காலத்தை விரயமாக்கதே...
இனி பிறக்கும் உயிரைப் போன்றது
நிகழ்காலமும் எதிர்காலமும்
அதனை சிறப்பாகவோ அல்லது
சிறப்பற்றதாகவோஆக்குவது
நம் கையில் அல்லவா இருக்கின்றது....
இன்றில் இருந்து நீயல்லவா என்
எதிர்காலமும் நிகழ்காலமும்
நானல்லவா உன் எதிர்காலமும்
நிகழ்காலமும் கடந்தவை கடந்தவையாகவே
இருக்கட்டும்......
நீ என் உயிரில் கலக்க வந்த
உறவல்லவா வந்து விடு அன்பே
என் உயிரில் கலந்து விடு....
கண்ணாடியில் தெளிவுறத் தெரியும்
முகம் போல் கண்ணாளவன் முகம்
பளிங்கு போல் தெரிய கலையும்
மேகம் போல் அவள் வாழ்வில்
ஏற்பட்ட கசப்புக்கள் மறைய
அவனுள் இரண்டறக் கலந்தால்
பதியவள்....
(மன்றத்தில் எனது 1000மாவது பதிவு இது...இங்கு வந்தே கிறுக்கத் தொடங்கினேன் உங்கள் ஆதரவுகள் என்னை மென்மேலும் கிறுக்கத் தூண்டியது தூண்டிக் கொண்டிருக்கின்றது நன்றிகள் நண்பர்களே :nature-smiley-002: :icon_08: :music-smiley-008: )
உண்டியலில் இருந்து கொட்டிடும்
காசுகளைப் போல் மண்டபம் முழுதும்
எதிரொலித்தது....
சூரியனைக் காணாது குனிந்து
வாடி நிற்கும் சூரிய காந்திப்
பூப் போல் மணப் பெண்
தலை குனிந்திருந்தால்....
சந்திரனை நோக்கி ஈர்க்கப்
படும் காந்தக் கற்கள் போல்
மணமகன் நாடி வந்தான் அவள்
அருகே....
டும் டும் கொட்டி மேளம் முழங்க
நாதஸ்வரம் இசைக்க சங்கு போன்ற
கழுத்தில் மணமாங்கல்யம் அணிவித்தான்...
இரு மனம் சேர்ந்து ஒரு மனம்
ஆவதாம் திருமணம்..இவள் மனம் எங்கோ
நினைவினில் மூழ்கி இருக்க அவன் மனமோ
சிற்பிக்குள் இருக்கும் முத்துப் போல் இவளிடத்தில்
மூழ்க்கி இருந்தது.........
நண்பர்களின் கிண்டல்களுடன் கூடிய வாழ்த்துக்கள்
உற்றார் உறவினர் புடை சுழ கன்னியிவள்
கரம் பிடித்தான் காளையவன்....
மழையை எதிர் பார்த்துக் காத்திருக்கும்
பயிர் போல் பால் பொழியின் நிலவின்
வெளிச்சத்தில் பளிங்கு போல் இருக்கும்
துணைவியவள் முகம் பார்க்க காத்திருந்தான்
துணைவன்.....
மனதிலே ஒரு சுமையை சுமந்து கண்ணாளன்
முகம் நோக்க அச்சம் கொண்டு
அன்று தன்னை அனைத்துக் கொள்ள
மறுத்த பூமித் தாய் மீது கண்ணீர்
அபிஷேகம் செய்து கொண்டு இருந்தாள்
கன்னியிவள்...
அருவி போல் வழிந்தோடும் கண்ணீரோடும்
குறுகுறுக்க்கும் விழியோடும் பட படக்கும்
நெஞ்சோடும் அன்று உலர்ந்த பூப் போல்
அவன் முகம் பார்த்தாள்.....
குளிரில் நடுங்கும் தன் சேய்க்கு
ஆதரவாய் இறக்கை விரித்து
அரவணைக்கும் கோழி போல்
இவன் அரவணைக்க தைரியம்
பெற்ற குஞ்சு போல் சுமை இறக்கி
வைக்கும் தொழிலாளி போல் தன்
கடந்த கா(தல்)லத்தை கணவரிடம்
ஒப்புவித்தாள்.......
கண்கள் பேசி மெளனம் விளையாட
புன்னகைகள் ததும்பி குதுகலம்
அரும்பி ஓட வேண்டிய இடத்தில்
நிசப்தம் நிலவிக் கொண்டிருந்தது.....
சிறு குண்டுசீ மெளனத்தைக் கலைப்பது
போல் அவன் வார்ததைகள் அந்த
நிசப்தத்தைக் கலைத்தது....
கண்மணியே உலகை விட்டு சென்ற
உயிர்களைப் போன்றது கடந்த கால
காலங்கள் அதனை நினைத்து உன்
எதிர் காலத்தை விரயமாக்கதே...
இனி பிறக்கும் உயிரைப் போன்றது
நிகழ்காலமும் எதிர்காலமும்
அதனை சிறப்பாகவோ அல்லது
சிறப்பற்றதாகவோஆக்குவது
நம் கையில் அல்லவா இருக்கின்றது....
இன்றில் இருந்து நீயல்லவா என்
எதிர்காலமும் நிகழ்காலமும்
நானல்லவா உன் எதிர்காலமும்
நிகழ்காலமும் கடந்தவை கடந்தவையாகவே
இருக்கட்டும்......
நீ என் உயிரில் கலக்க வந்த
உறவல்லவா வந்து விடு அன்பே
என் உயிரில் கலந்து விடு....
கண்ணாடியில் தெளிவுறத் தெரியும்
முகம் போல் கண்ணாளவன் முகம்
பளிங்கு போல் தெரிய கலையும்
மேகம் போல் அவள் வாழ்வில்
ஏற்பட்ட கசப்புக்கள் மறைய
அவனுள் இரண்டறக் கலந்தால்
பதியவள்....
(மன்றத்தில் எனது 1000மாவது பதிவு இது...இங்கு வந்தே கிறுக்கத் தொடங்கினேன் உங்கள் ஆதரவுகள் என்னை மென்மேலும் கிறுக்கத் தூண்டியது தூண்டிக் கொண்டிருக்கின்றது நன்றிகள் நண்பர்களே :nature-smiley-002: :icon_08: :music-smiley-008: )