இனியவள்
09-07-2007, 10:24 AM
வீட்டின் அமைதியான தோற்றம்
என்னுள் கலக்கத்தை
ஏற்படுத்த தாகம் எடுத்த
தொண்டைக்கு புத்துணர்ச்சி
கொடுக்க சமையல் பக்கம்
சென்றேன் தண்ணீர்
குடிப்பதற்கு தக தகவென
எறிந்து கொண்டிருந்த அடுப்பை
பொங்கி வழிந்த சோற்று நீர்
அணைத்து இருந்தது...
நிலவை மறைத்து இருக்கும்
மேகங்கள் போல் பெரியம்மாவின்
விழிகளை பொங்கிய கடல் போல்
கண்ணீர் மறைத்திருந்தது குளிரில்
உறைந்த நீர் போல் அந்த காட்சியை
பார்த்த என் இதயம் உறைந்து போனது..
மென்மையாய் தாலாட்டும் தென்றல்
போல் கைகளை வருடி ஆசுவாசப்
படுத்து கொண்டேன் மின்சாரம்
தாக்கியதோ என்னும் அளவிற்கு
திடுக்கிட்டு என்னை நோக்கினர்...
கண்களில் அருவி மாதிரி கொட்டும்
கண்ணீருக்கு காரணம் வினாவினேன்
சிவாவுக்கு விபத்து உயிருக்கு
போரடிக் கொண்டிருக்கின்றான்
சிவாவா யாரது என நான்
ஆச்சரியப்பட்டேன் நாடகத்தில்
தாமரையின் கணவன் என்று கேட்ட
அந்த நொடி எனக்கு மின்சாரம்
தாக்கிய உணர்வு என்னுள்....
கோபத்துடன் தொ(ல்)லைக் காட்சியை
முறைத்துப் பார்த்தேன் என் கோபம்
அறியாமல் பரமசிவன் கழுத்தில் இருந்து
பாம்பு கேட்டது கருடா சவுக்கியமா
என் பாடல் ஒலித்துகொண்டிருந்தது
என்னை கொஞ்ச நொடி பதற வைத்தது
அறியாமல்........
(பல வீட்டில் நடக்கின்ற உண்மைச் சம்பவமும் கூட :icon_wink1: :icon_wink1: )
என்னுள் கலக்கத்தை
ஏற்படுத்த தாகம் எடுத்த
தொண்டைக்கு புத்துணர்ச்சி
கொடுக்க சமையல் பக்கம்
சென்றேன் தண்ணீர்
குடிப்பதற்கு தக தகவென
எறிந்து கொண்டிருந்த அடுப்பை
பொங்கி வழிந்த சோற்று நீர்
அணைத்து இருந்தது...
நிலவை மறைத்து இருக்கும்
மேகங்கள் போல் பெரியம்மாவின்
விழிகளை பொங்கிய கடல் போல்
கண்ணீர் மறைத்திருந்தது குளிரில்
உறைந்த நீர் போல் அந்த காட்சியை
பார்த்த என் இதயம் உறைந்து போனது..
மென்மையாய் தாலாட்டும் தென்றல்
போல் கைகளை வருடி ஆசுவாசப்
படுத்து கொண்டேன் மின்சாரம்
தாக்கியதோ என்னும் அளவிற்கு
திடுக்கிட்டு என்னை நோக்கினர்...
கண்களில் அருவி மாதிரி கொட்டும்
கண்ணீருக்கு காரணம் வினாவினேன்
சிவாவுக்கு விபத்து உயிருக்கு
போரடிக் கொண்டிருக்கின்றான்
சிவாவா யாரது என நான்
ஆச்சரியப்பட்டேன் நாடகத்தில்
தாமரையின் கணவன் என்று கேட்ட
அந்த நொடி எனக்கு மின்சாரம்
தாக்கிய உணர்வு என்னுள்....
கோபத்துடன் தொ(ல்)லைக் காட்சியை
முறைத்துப் பார்த்தேன் என் கோபம்
அறியாமல் பரமசிவன் கழுத்தில் இருந்து
பாம்பு கேட்டது கருடா சவுக்கியமா
என் பாடல் ஒலித்துகொண்டிருந்தது
என்னை கொஞ்ச நொடி பதற வைத்தது
அறியாமல்........
(பல வீட்டில் நடக்கின்ற உண்மைச் சம்பவமும் கூட :icon_wink1: :icon_wink1: )