தங்கவேல்
06-07-2007, 03:15 AM
மணிக்கடை நூல்
இந்த கட்டுரை ஒரு வித்தியாசமான ஒன்று. அந்த காலத்தில் முன்னோர்கள் நமக்கு விட்டு சென்ற ஒரு பொக்கிஷம் இது. சரி விசயத்துக்கு வருவோம்.
இந்த முறைப்படி நோய் என்ன என்று கண்டு பிடித்து விடலாம் என்று நூலில் சொல்லப்பட்டு இருக்கிறது.
மணிக்கடைக்கு மேல் நான்கு விரல் தள்ளி கைச்சுற்றளவை கயிற்றினால் அளந்து கண்ட நீளம் அவரவர் கையினால் எத்தனை விரற்கடை இருக்கிறதோ அதற்கு உண்டான நோய் விபரங்கள் கீழே.
பத்து - உடல் வெதும்பி, வாயுனால் நெஞ்சு, கால், கையில் குத்தும். உளையும். வயிற்றில் வாயுத் திரட்சியும் குன்மமும் உண்டாகும்.
ஒன்பதேமுக்கால் - அரையாப்பு, பிளவை, மறட்சி, இருமல்
ஒன்பதரை - உடல் வெதும்பி வீங்கும், சூடு, விழி காந்தும், மேகம் வரும். அன்னத்தை தள்ளும்.
ஒன்பதேகால் - விழி காந்தும், நீர் கடுத்து சிறுத்திரங்கும். நித்திரை வராது. பீனிசம் உண்டாகும்.
ஒன்பது - செவி மந்தமாகும். கண் புகைச்சல், குருக்கில் வாயு இறங்கி வலிக்கும். இரு துடையும் அயரும். நடக்க இயலாது.
எட்டேமுக்கால் - உடல் காயும். சில விஷத்தால் குட்டம்போல் வரும். மூல வாயுவினால் வயிறு பொருமும்.
எட்டரை - தேக வெதுப்பு, வெட்டை, கிரந்தி, குட்டம், சொரி, குடல் வாதந்தாது நஷ்டம்.
எட்டேகால் - உடல் பொருத்து வலித்துளையும், தலை வரட்சி, வலி, பீனிசம், வியர்வை, விஷத்தினால் இளைப்பிருமல்
எட்டு - மேககாங்கை, வயிற்றில் மந்தம், பொருமல், வாயுந்திரட்சி அன்னம் தள்ளும்.
இது போல, ஆறு விரற்கடை வரையிலும் நோய்க்குறிகள் கண்டு பிடிப்பது பற்றி விளக்கமாக எழுதப்பட்டு இருக்கிறது மணிக்கடை நூலில்.
தமிழர்களின் ஆராய்ச்சியும், அவர்களின் முறைகளும்..ஒரு அதிசயமே.
இந்த கட்டுரை ஒரு வித்தியாசமான ஒன்று. அந்த காலத்தில் முன்னோர்கள் நமக்கு விட்டு சென்ற ஒரு பொக்கிஷம் இது. சரி விசயத்துக்கு வருவோம்.
இந்த முறைப்படி நோய் என்ன என்று கண்டு பிடித்து விடலாம் என்று நூலில் சொல்லப்பட்டு இருக்கிறது.
மணிக்கடைக்கு மேல் நான்கு விரல் தள்ளி கைச்சுற்றளவை கயிற்றினால் அளந்து கண்ட நீளம் அவரவர் கையினால் எத்தனை விரற்கடை இருக்கிறதோ அதற்கு உண்டான நோய் விபரங்கள் கீழே.
பத்து - உடல் வெதும்பி, வாயுனால் நெஞ்சு, கால், கையில் குத்தும். உளையும். வயிற்றில் வாயுத் திரட்சியும் குன்மமும் உண்டாகும்.
ஒன்பதேமுக்கால் - அரையாப்பு, பிளவை, மறட்சி, இருமல்
ஒன்பதரை - உடல் வெதும்பி வீங்கும், சூடு, விழி காந்தும், மேகம் வரும். அன்னத்தை தள்ளும்.
ஒன்பதேகால் - விழி காந்தும், நீர் கடுத்து சிறுத்திரங்கும். நித்திரை வராது. பீனிசம் உண்டாகும்.
ஒன்பது - செவி மந்தமாகும். கண் புகைச்சல், குருக்கில் வாயு இறங்கி வலிக்கும். இரு துடையும் அயரும். நடக்க இயலாது.
எட்டேமுக்கால் - உடல் காயும். சில விஷத்தால் குட்டம்போல் வரும். மூல வாயுவினால் வயிறு பொருமும்.
எட்டரை - தேக வெதுப்பு, வெட்டை, கிரந்தி, குட்டம், சொரி, குடல் வாதந்தாது நஷ்டம்.
எட்டேகால் - உடல் பொருத்து வலித்துளையும், தலை வரட்சி, வலி, பீனிசம், வியர்வை, விஷத்தினால் இளைப்பிருமல்
எட்டு - மேககாங்கை, வயிற்றில் மந்தம், பொருமல், வாயுந்திரட்சி அன்னம் தள்ளும்.
இது போல, ஆறு விரற்கடை வரையிலும் நோய்க்குறிகள் கண்டு பிடிப்பது பற்றி விளக்கமாக எழுதப்பட்டு இருக்கிறது மணிக்கடை நூலில்.
தமிழர்களின் ஆராய்ச்சியும், அவர்களின் முறைகளும்..ஒரு அதிசயமே.