View Full Version : புரிந்து கொள்(ல்).
அமரன்
05-07-2007, 11:38 AM
இதயவாசல் திறக்கும்போதே
சொர்க்கவாசல் திறக்கிறது
புரிந்து கொள்(ல்)
ஓவியன்
05-07-2007, 11:44 AM
புரிந்து கொள் என்றால்
பிரிந்து கொல்கிறாயே?
அமரன்
05-07-2007, 11:48 AM
புரிந்து கொள் என்றால்
பிரிந்து கொல்கிறாயே?
இதயவாசல் திறக்கும்போது
சொர்க்கவாசல் திறக்கிறது
புரிந்து கொல் காதலை.
இனியவள்
05-07-2007, 11:53 AM
இதயவாசல் திறக்கும்போது
சொர்க்கவாசல் திறக்கிறது
புரிந்து கொல் காதலை.
இதயம் என்னும்
வாசல் கொண்டு
சொர்க்க வாசலைத்
திறந்த நீயே
பிரிவு என்னும்
பூட்டு போட்டு
நரகத்தில் தள்ளிவிட்டாய்
ஓவியன்
05-07-2007, 11:54 AM
பரிந்து வந்ததை
புரிந்து வந்ததாய்
புரிந்து கொண்டது.
புரிதலின் தப்புத்தான்!.
இனியவள்
05-07-2007, 11:54 AM
புரிந்து கொள் என்றால்
பிரிந்து கொல்கிறாயே?
புரிந்து கொள் என்றால்
புரியாமல் கொல்கின்றாய்
அமரன்
05-07-2007, 11:55 AM
பரிந்து வந்ததை
புரிந்து வந்ததாய்
புரிந்து கொண்டது.
புரிதலின் தப்புத்தான்!.
புரிந்து கொள்ளாமல்
பரிந்து வந்தது
பரிந்தவள் தப்பு.
அமரன்
05-07-2007, 11:56 AM
புரிந்து கொள் என்றால்
புரியாமல் கொல்கின்றாய்
புரிந்தும் கொல்கிறாய்
புரியாமல் கொல்கிறாய்
இதுதான் காதலா?
இனியவள்
05-07-2007, 11:58 AM
புரிந்தும் கொல்கிறாய்
புரியாமல் கொல்கிராய்
இதுதான் காதலா?
புரிந்து கொண்டதால்
விலகிச் செல்கின்றேன்
அது புரியாமல் என்னை
பின் தொடர்வது நிஜாயமா
இனியவள்
05-07-2007, 11:59 AM
புரிந்து கொள்ளாமல்
பரிந்து வந்தது
பரிந்தவள் தப்பு.
புரியாமல் விரைந்து
வந்த காதல்
புரிந்துணர்வு இல்லாமல்
பறந்து சென்றது
ஓவியன்
05-07-2007, 12:01 PM
பிரியாமல் இருந்தாலே புரிதல்
புரியாமல் இருந்தால் பிரிதல்!.
அமரன்
05-07-2007, 12:02 PM
புரிந்து கொண்டதால்
விலகிச் செல்கின்றேன்
அது புரியாமல் என்னை
பின் தொடர்வது நிஜாயமா
புரிந்துகொண்டதால்
பிரிந்து செல்கிறேன்
நீ ஜமாய் என்கிறாய்
நியாயமா?
அமரன்
05-07-2007, 12:05 PM
பிரியாமல் இருந்தாலே புரிதல்
புரியாமல் இருந்தால் பிரிதல்!.
புரிந்து கொள்ளாது
வரிந்து கொண்டு
பிரிந்து கொல்கிறாய்.
பரிவு இல்லையா உனக்கு.?
இனியவள்
05-07-2007, 12:08 PM
புரிந்துகொண்டதால்
பிரிந்து செல்கிறேன்
நீ ஜமாய் என்கிறாய்
நியாயமா?
நிஜமாய் பிரிகின்றோம்
ஒன்றாய் இருந்து
புரிதல் இன்றி எம்
அன்பை புதைப்பதையும்
பார்க்க பிரிதல் மூலம்
அன்பை வளர்ப்போம்
உன்னை நான் புரிந்ததால்
பிரிகின்றேன் என்னை நீ
புரியாததால் தடுக்கின்றாய்
இனியவள்
05-07-2007, 12:09 PM
புரிந்து கொள்ளாது
வரிந்து கொண்டு
பிரிந்து கொல்கிறாய்.
பரிவு இல்லையா உனக்கு.?
உடன் இருந்து
கொள்ளும் சந்தேகம்
உன்னைக் கொள்ளும்
வரை பிரிதலே சிறந்தது
வழி விடு என்னை
வாழ விடு
அமரன்
05-07-2007, 08:16 PM
உடன் இருந்து
கொள்ளும் சந்தேகம்
உன்னைக் கொள்ளும்
வரை பிரிதலே சிறந்தது
வழி விடு என்னை
வாழ விடு
கொள்ளும் சந்தேகம்
கொல்லும்
புரிந்துகொல்(ள்)
இனியவள்
05-07-2007, 08:52 PM
கொள்ளும் சந்தேகம்
கொல்லும்
புரிந்துகொல்(ள்)
சந்தேகத்தைகொல்
பிறகு புரிந்து
கொள்வாய் என்னை
அமரன்
05-07-2007, 09:36 PM
சந்தேகத்தைகொல்
பிறகு புரிந்து
கொள்வாய் என்னை
கொல்லும்
சந்தேகம்
கொல்
காதலில்
இனியவள்
05-07-2007, 09:38 PM
கொல்லும்
சந்தேகம்
கொல்
காதலில்
காதலைக் கொன்று
விட்டு சந்தேகத்தை
தீ மூட்டி வளர்த்து
குளிர்காய்கின்றான்
அமரன்
06-07-2007, 08:47 AM
கொல்லும் சந்தேகம்
கொல்லாவிட்டால்
கொல்லும் வாழ்க்கை
புரிந்துகொ(ள்)ல்.
ஓவியன்
06-07-2007, 12:09 PM
எள் என்றால்
எண்ணையாகிறாய்!
கொள் என்றால்
கொல்கிறாய்!
அன்பே!
என்றுதான்
சரியாகப் புரிந்து
கொள்ளப் போகிறாயோ?
ஷீ-நிசி
06-07-2007, 01:15 PM
என்னபா... புரிந்துகொள் என்ற வார்த்தையை வைத்து இவ்வளவு தூரம் பிழிந்துவிட்டீர்கள்! அமரா ஓவியரே....
அமரன்
06-07-2007, 01:18 PM
நன்றி ஷீ. ஒரு சின்னதாக ஒன்றைக்கிறுக்கினால் இந்த ஓவியனும் இனியவளும் சண்டைக்கு வந்து கொல்கின்றனர். தாங்க முடியலை.
இனியவள்
06-07-2007, 06:15 PM
எள் என்றால்
எண்ணையாகிறாய்!
கொள் என்றால்
கொல்கிறாய்!
அன்பே!
என்றுதான்
சரியாகப் புரிந்து
கொள்ளப் போகிறாயோ?
சரியாக புரிந்து
கொண்டதால் தான்
உன்னை அன்பு என்னும்
மலர் கொண்டு பூஜிக்கின்றேன்
புரிந்து கொள்ளாததால்
தான் நீ சந்தேகம் என்னும்
அம்பு கொண்டு என்னைக்
கொல்கின்றாய்