ரிஷிசேது
04-07-2007, 04:42 PM
1.
மிகவும் குழப்புகிறது
வழிகாட்டிகள்..
போகும் திசையறியாது
திரும்புகிறேன் புறப்பட்ட இடத்திற்கே
2,
இருப்பதும் இல்லாததுமாயிருக்கிறது
வானம் -
எனக்கு சொல்லப்பட்ட கடவுள்களைப்போல்
3.
இதை விருட்சமென மலைக்காதே
நேற்றைய விதையென்றறி
4.
இறப்பின் முகவரியை
எழுதிப்போயிற்று
முகச்சுருக்கமாயும்
நரைகளாயும்
காலம் -
அனுபவங்களெனவும் சொல்லலாம்
5.
இனி செய்ய ஒன்றுமேயில்லையென்ற
ஒரு முடிவிலா கணத்தில்
இறந்துபோனான் வழிப்போக்கன்
இருப்பவர்கள் கவலைப்பட்டனர்
அவனுடலை எரிப்பதா புதைப்பதாவென..
6.
என்னை துரத்தும்
எண்ணங்களிலிருந்து
என்னை விடுவித்தேன்
பறவைபோலானேன்...
7.
ஒரு புல்லைப்போல் புதிதாகவும்
பறவையைப்போல் எச்சரிக்கையாயும்
பாம்பைப்போல் தந்திரசாலியாகவும்
மாறியபோது மரணமானது என்
குழந்தைத்தனம்
பின் எப்போதும் நான் குழந்தையானதில்லை...
8. எல்லோரையும்
உன் பெயர் சொல்லியே அழைக்கிறேன்
உன் பெயர் தெரிந்தபின்
வேறொன்றும் அழகாயில்லை
9.
ஆம் பெயரிலென்ன
என்னை எப்படி வேண்டுமானாலும்
கூப்பிட்டுப்போ
உன் குரல் கேட்டால் போதும்
10.
பறவைகள் சொல்லும்
வாழ்வின் தத்துவம்
அந்த நொடிகளில்
வாழவும் மறக்கவும்
11.
உனக்கான ஒரு பாடல்
எழுதிய பிறகு நல்ல மழை
பாடல் படகானது
மழை நீரெல்லாம்
உன் பாடல்...
12.
புதுப்புத்தக வாசனையாய்
உன் நினைவுகள்
நடுவே வைக்கப்பட்ட
மயிலிறகும் அதன்
போடாகுட்டிகளுமாய்
நிஜம்...
மிகவும் குழப்புகிறது
வழிகாட்டிகள்..
போகும் திசையறியாது
திரும்புகிறேன் புறப்பட்ட இடத்திற்கே
2,
இருப்பதும் இல்லாததுமாயிருக்கிறது
வானம் -
எனக்கு சொல்லப்பட்ட கடவுள்களைப்போல்
3.
இதை விருட்சமென மலைக்காதே
நேற்றைய விதையென்றறி
4.
இறப்பின் முகவரியை
எழுதிப்போயிற்று
முகச்சுருக்கமாயும்
நரைகளாயும்
காலம் -
அனுபவங்களெனவும் சொல்லலாம்
5.
இனி செய்ய ஒன்றுமேயில்லையென்ற
ஒரு முடிவிலா கணத்தில்
இறந்துபோனான் வழிப்போக்கன்
இருப்பவர்கள் கவலைப்பட்டனர்
அவனுடலை எரிப்பதா புதைப்பதாவென..
6.
என்னை துரத்தும்
எண்ணங்களிலிருந்து
என்னை விடுவித்தேன்
பறவைபோலானேன்...
7.
ஒரு புல்லைப்போல் புதிதாகவும்
பறவையைப்போல் எச்சரிக்கையாயும்
பாம்பைப்போல் தந்திரசாலியாகவும்
மாறியபோது மரணமானது என்
குழந்தைத்தனம்
பின் எப்போதும் நான் குழந்தையானதில்லை...
8. எல்லோரையும்
உன் பெயர் சொல்லியே அழைக்கிறேன்
உன் பெயர் தெரிந்தபின்
வேறொன்றும் அழகாயில்லை
9.
ஆம் பெயரிலென்ன
என்னை எப்படி வேண்டுமானாலும்
கூப்பிட்டுப்போ
உன் குரல் கேட்டால் போதும்
10.
பறவைகள் சொல்லும்
வாழ்வின் தத்துவம்
அந்த நொடிகளில்
வாழவும் மறக்கவும்
11.
உனக்கான ஒரு பாடல்
எழுதிய பிறகு நல்ல மழை
பாடல் படகானது
மழை நீரெல்லாம்
உன் பாடல்...
12.
புதுப்புத்தக வாசனையாய்
உன் நினைவுகள்
நடுவே வைக்கப்பட்ட
மயிலிறகும் அதன்
போடாகுட்டிகளுமாய்
நிஜம்...