PDA

View Full Version : பிரிவின் வேதனை



இனியவள்
04-07-2007, 09:23 AM
தேனமுதம் தந்த
உன் அன்பு இன்று
முள்ளாய் மாறி
என் இதயத்தைக்
குத்திக் குத்தி
கிழிக்கின்றது

என் கூட வரும் நிழல்
கூட இன்று உன் பிரிவு
தந்த வலியால் உதிரம்
கொட்டுதடா

அனல் கக்கும் சூரியன்
பனியாய் உருகினான்
நீ என் அருகில்
இருக்கும் போது

குளிராய் வந்து தழுவும்
தென்றல் கூட இன்று
அனலாய் சுடுகின்றதடா
நீ என்னை விட்டு
விலகிய பின்

கூடலில் உண்டான்
இன்பத்தை அனுபவித்த
நான் இன்று
பிரிதலினால் உண்டான்
வேதனையை தாங்க முடியாமல்
நெருப்பில் விழுந்த புழுவாய்
இன்று நான்

ஆதவா
04-07-2007, 09:45 AM
காதலினால் ஏற்படும் மாற்றம். அதே பிரிதலில் உண்டானால்??

இது காதலில் மட்டுமல்ல எதிலும்...


கிழித்த இதயத்தை தைக்க அந்த பிரிவின் முடிவு போதும். நடுங்கும் குளிரும் நடுங்க வெப்பம் ஏந்திய அவன் வருகை வேண்டுமல்லவா. பரிணாமமே மாறும் என்று அழுத்தமாய் சொல்லப்படும் காதலின் பிரிவால் உலகமே மாறும்...( ஹி ஹி இது ஜெஸிகா கதையின் அடுத்த பாகம்... காப்பிரைட்: ஆதவன் 2007 )

நல்ல பிரிவை மென்மையாக சொன்ன இனியவளுக்கு என் வாழ்த்துக்கள்

மனோஜ்
04-07-2007, 09:55 AM
பிரிவின் வலிமை பரிவில் தான் தெரியும்
அருமையான கவிதைக்கு நன்றி இனியவள் அவர்களே

அமரன்
05-07-2007, 10:21 AM
தேனமுதம் தந்த
உன் அன்பு இன்று
முள்ளாய் மாறி
என் இதயத்தைக்
குத்திக் குத்தி
கிழிக்கின்றது

தேனுண்ட மயக்கத்தில்
அழுந்திபிடித்தால்
குத்தத்தான் செய்யும்
ரோஜா முட்கள்.


பாராட்டுகள் இனியவள்.

இனியவள்
05-07-2007, 12:12 PM
தேனுண்ட மயக்கத்தில்
அழுந்திபிடித்தால்
குத்தத்தான் செய்யும்
ரோஜா முட்கள்.


பாராட்டுகள் இனியவள்.

ரோஜா முட்கள்
குத்தினால் கூட
என் இதயம் தாங்கும்
அன்பே பிரிவென்ற
அமிலத்தையல்லவா
என் இதயத்தில் ஊற்றி
விட்டுச் செல்கின்றாய்..

நன்றி அமர்

இனியவள்
05-07-2007, 12:13 PM
காதலினால் ஏற்படும் மாற்றம். அதே பிரிதலில் உண்டானால்??

இது காதலில் மட்டுமல்ல எதிலும்...

நல்ல பிரிவை மென்மையாக சொன்ன இனியவளுக்கு என் வாழ்த்துக்கள்

நன்றி ஆதவா


பிரிவின் வலிமை பரிவில் தான் தெரியும்
அருமையான கவிதைக்கு நன்றி இனியவள் அவர்களே

நன்றி மனோஜ்

ஷீ-நிசி
07-07-2007, 03:05 AM
என் கூட வரும் நிழல்
கூட இன்று உன் பிரிவு
தந்த வலியால் உதிரம்
கொட்டுதடா

அனல் கக்கும் சூரியன்
பனியாய் உருகினான்
நீ என் அருகில்
இருக்கும் போது

குளிராய் வந்து தழுவும்
தென்றல் கூட இன்று
அனலாய் சுடுகின்றதடா
நீ என்னை விட்டு
விலகிய பின்


அன்று அனல் கக்கும் வெயில் கூட இதமாய் தான் இருந்தது..
நீ என்னருகில் இருந்ததால்...

இன்று உடல் குத்தும் குளிர் காற்று கூட அனலாய் தான் உள்ளது...
நீ என்னருகில் இல்லாததால்...

காதலிக்கின்ற தருணங்களில் நாம் நிஜவுலகில் இருப்பதில்லை..... அது ஒரு தனிக்காலம்...