View Full Version : ஆகாயக் கண்ணீர்
நிரன்
03-07-2007, 05:38 PM
ஆகாயக் கண்ணீர்
பாரிற்கு மழையானது
பாரின் கண்ணீர்
புற்களுக்கு பனியானது
எனது கண்ணீர்
உனக்கான கவி ஆனது
என்றும் அன்புடன்
நிரஞ்சன்
ஓவியன்
03-07-2007, 05:48 PM
கண்ணீரால்
கவி படைக்கும்
காவியனே!
உம் கவிக்கண்ணீர்
எங்களுக்கு விருந்தாகிறது!
தொடருங்கள் காத்திருக்கிறோம்!.
இனியவள்
03-07-2007, 05:56 PM
ஆகாயக் கண்ணீர்
பாரிற்கு மழையானது
பாரின் கண்ணீர்
புற்களுக்கு பனியானது
எனது கண்ணீர்
உனக்கான கவி ஆனது
என்றும் அன்புடன்
நிரஞ்சன்
உனக்காக கவி ஆன
எனது கண்ணீர் இன்று
காவியம் வடிக்கின்றது
உங்கள் கவி வரிகளில் லயித்துப் போனேன் நிரஞ்சன் வாழ்த்துக்கள்
இணைய நண்பன்
03-07-2007, 06:31 PM
நண்பா
உன் கண்ணீர்
காதலிக்கு கவியானது
நண்பா
உன் கண்ணீர்
எங்களுக்கு கடலானது
நண்பா உன் கவிவளத்தை பாராட்டுகிறேன்
அமரன்
03-07-2007, 07:20 PM
எத்தனையோ காவியங்கள் கண்ணீரில் முடிய
கான்ணீரிலே கவிக் காவியம் படைத்த
நிரஞ்சனுக்கு வாழ்த்துகள்.
ஒன்று மட்டும் புரிகின்றது யார் கண்ணீர் வடித்தாலும் அதற்குக் காரணம் மனிதனே.
இனியவள்
03-07-2007, 07:22 PM
எத்தனையோ காவியங்கள் கண்ணீரில் முடிய
கான்ணீரிலே கவிக் காவியம் படைத்த
நிரஞ்சனுக்கு வாழ்த்துகள்.
ஒன்று மட்டும் புரிகின்றது யார் கண்ணீர் வடித்தாலும் அதற்குக் காரணம் மனிதனே.
இயற்கை அன்னை
கண்ணீர் வடிக்கின்றாள்
மழையாக எம் எதிர்காலத்துக்கு
நாம் கண்ணீர் வடிக்கின்றோம்
எதிர்காலத்தை தொலைத்து
அழகிய தொடர்கற்பனை..
பாராட்டுகள் நிரஞ்சன்!