இனியவள்
03-07-2007, 01:12 PM
ஈரைந்து மாதம்
எனைச் சுமந்து
பூமித் தாயின்
முகம் பார்க்க
வைத்த அன்னையே
உன் முகம் காட்ட
ஏனோ தவறி விட்டாய்
தென்றல் என்னை தழுவும் போது
அன்னையின் தழுவல் இதை
விட எவ்வளவு மென்மையாய்
இருக்கும் என மனம் தவித்தது
கனவு தவிப்பை போக்கியது
கனவில் கண்ட அரவணைப்பை
உணர என் உடல் துடிக்கின்றது
தாயே வந்து என்னை உன்
அன்பால் அரவணைத்து விடு
தந்தையினை பூமித்தாய்
அரவணைதுக் கொண்டதும்
பசியறியாமல் நாம்
இருக்க உன்னை
உருக்கி எமக்கு
உணவளித்த தாயே
என் பசி போக்கினாய்
ஆடை அணிகலன்
வாங்கித் தந்தாய்
என் ஆசைகளை
என்னைக் கேளாமலே
நிறைவேறி வைத்த என் தெய்வமே
உன்னை என் பதினாறாம்
வயதில் பார்த்ததும்
சிறு வயது முதல்
உன் மேல் நான் தேக்கி
வைத்த அன்பை உன் மீது
காட்ட முயற்சித்தேன் ஆனால்
உழைத்து உழைத்து
ஓடாய்த் தேய்ந்த உன்
முகத்தில் கண்ட இறுக்கத்தை
கண்டதும் தேக்கி வைத்த அன்பு
தேங்கிய படியே இருந்தது
வறுமையை போக்கி
பசியைப் போக்கிய
தாயே ! உன்னால்
என் மனதில் இருக்கும்
அன்பு என்னும் வறுமையை
போக்க முயற்ச்சிக்க வில்லையே
எதிர் பார்புக்களோடு
காத்திருக்கின்றேன் அன்னையே
உன்னைச் சந்திக்க போகும்
இன்னும் ஒரு நாளுக்காய்
அன்பு கலந்த ஆவலோடு
உன்னை முதல் முதல்
பார்த்த அந்த இனிமையான
நொடிப் பொழுது இன்னும்
பசுமையாய் அழகான நாதமாய்
இசைத்து உன் அடுத்த வருகைக்காய்
என்னை உயிர்போடு காத்திருக்க
வைத்திருக்கின்றது வந்து விடு
அன்னையே உழைத்தது போதும்
உன் அன்புக்காக ஏங்கும் உன்
மகளின் ஆவலை பூர்த்தி செய்ய
எனைச் சுமந்து
பூமித் தாயின்
முகம் பார்க்க
வைத்த அன்னையே
உன் முகம் காட்ட
ஏனோ தவறி விட்டாய்
தென்றல் என்னை தழுவும் போது
அன்னையின் தழுவல் இதை
விட எவ்வளவு மென்மையாய்
இருக்கும் என மனம் தவித்தது
கனவு தவிப்பை போக்கியது
கனவில் கண்ட அரவணைப்பை
உணர என் உடல் துடிக்கின்றது
தாயே வந்து என்னை உன்
அன்பால் அரவணைத்து விடு
தந்தையினை பூமித்தாய்
அரவணைதுக் கொண்டதும்
பசியறியாமல் நாம்
இருக்க உன்னை
உருக்கி எமக்கு
உணவளித்த தாயே
என் பசி போக்கினாய்
ஆடை அணிகலன்
வாங்கித் தந்தாய்
என் ஆசைகளை
என்னைக் கேளாமலே
நிறைவேறி வைத்த என் தெய்வமே
உன்னை என் பதினாறாம்
வயதில் பார்த்ததும்
சிறு வயது முதல்
உன் மேல் நான் தேக்கி
வைத்த அன்பை உன் மீது
காட்ட முயற்சித்தேன் ஆனால்
உழைத்து உழைத்து
ஓடாய்த் தேய்ந்த உன்
முகத்தில் கண்ட இறுக்கத்தை
கண்டதும் தேக்கி வைத்த அன்பு
தேங்கிய படியே இருந்தது
வறுமையை போக்கி
பசியைப் போக்கிய
தாயே ! உன்னால்
என் மனதில் இருக்கும்
அன்பு என்னும் வறுமையை
போக்க முயற்ச்சிக்க வில்லையே
எதிர் பார்புக்களோடு
காத்திருக்கின்றேன் அன்னையே
உன்னைச் சந்திக்க போகும்
இன்னும் ஒரு நாளுக்காய்
அன்பு கலந்த ஆவலோடு
உன்னை முதல் முதல்
பார்த்த அந்த இனிமையான
நொடிப் பொழுது இன்னும்
பசுமையாய் அழகான நாதமாய்
இசைத்து உன் அடுத்த வருகைக்காய்
என்னை உயிர்போடு காத்திருக்க
வைத்திருக்கின்றது வந்து விடு
அன்னையே உழைத்தது போதும்
உன் அன்புக்காக ஏங்கும் உன்
மகளின் ஆவலை பூர்த்தி செய்ய