PDA

View Full Version : காதல் சிறகுகள்



இனியவள்
03-07-2007, 11:41 AM
காதல் என்னும்
வானத்தில்
சிறகடித்து பறந்து
சென்றேன்

நம்பிக்கை என்னும்
சிறகு ஒடிந்தது
அன்பு என்னும் சிறகு
வலுவிழந்தது அதனால்
சோகம் என்னும் கடலில்
விழுந்து தத்தளிக்கின்றேன்

அன்புரசிகன்
03-07-2007, 11:53 AM
ஒடிந்ததும் இழந்ததும்
சிறகும் அன்பும்
காதல் அல்லவே...

ஒடிந்தாலும் இழந்தாலும்
பரந்து பறப்பது
காதல் மட்டுமே.

காதல் வானத்தில்
நீ பட்சியாக
காதல் சமுத்திரத்தில்
நீ மச்சமாக
வாழ்த்துகிறேன் திகழ்ந்திட.

இனியவள்
03-07-2007, 11:59 AM
ஒடிந்ததும் இழந்ததும்
சிறகும் அன்பும்
காதல் அல்லவே...

ஒடிந்தாலும் இழந்தாலும்
பரந்து பறப்பது
காதல் மட்டுமே.

காதல் வானத்தில்
நீ பட்சியாக
காதல் சமுத்திரத்தில்
நீ மச்சமாக
வாழ்த்துகிறேன் திகழ்ந்திட.

அன்பு இல்லாத காதல்
இருந்தும் என்ன பயம்

ஒடிந்த மனதை ஒட்ட
வைத்து பழைய காதல் தனை
மனதில் செலுத்தினால் பட்ட
காயம் மாறினாலும் வடு மாறுமா
காதலில் காதலே கேள்விக்குறியானால்
காதலித்து என்ன பயன்
கேள்விக்குறியை
விடைக்குறியாய் மாற்ற
முயற்சிக்கின்றேன்
ஆச்சரியக் குறியைக் காட்டிவிட்டு
சென்றுவிட்டது

அன்புரசிகன்
03-07-2007, 12:06 PM
அம்மாடி உங்களுடன் போட்டி போட என்னால் முடியாதும்மா...

வரிகளில் உணர்வு துடிக்கிறது.

அமரன்
03-07-2007, 12:32 PM
காதல் என்னும்
வானத்தில்
சிறகடித்து பறந்து
சென்றேன்

சொலம்பு தாக்கியதால்-உன்
சிறகொடிந்து விழுந்துவிட்டேன்

இனியவள்
03-07-2007, 12:35 PM
சொலம்பு தாக்கியதால்-உன்
சிறகொடிந்து விழுந்துவிட்டேன்

விழுந்து விட்டேன் கால் தவறி
தாங்கிப் பிடிக்க நீ வருவாய்
என்றிருந்தேன்.

அமரன்
03-07-2007, 12:36 PM
விழுந்து விட்டேன் கால் தவறி
தாங்கிப் பிடிக்க நீ வருவாய்
என்றிருந்தேன்.

விழுது விட்டும்
விழுந்துவிட்டால்
தாங்க முடியாது.

இனியவள்
03-07-2007, 12:37 PM
விழுது விட்டும்
விழுந்துவிட்டால்
தாங்க முடியாது.

தாங்க முடியாது
தவிக்கின்றேன் உன்
அன்பு தரும் அவஸ்தையை

சூரியன்
03-07-2007, 02:25 PM
காதல் என்னும்
வானத்தில்
சிறகடித்து பறந்து
சென்றேன்

நம்பிக்கை என்னும்
சிறகு ஒடிந்தது
அன்பு என்னும் சிறகு
வலுவிழந்தது அதனால்
சோகம் என்னும் கடலில்
விழுந்து தத்தளிக்கின்றேன்


தத்தளிக்கும் உன்னை
காக்க நட்பு
என்னும் படகு வரும்
அது நிச்சயம்
உன்னை
கரை சேர்க்கும்

இளசு
03-07-2007, 08:36 PM
கருத்தை உள்வாங்கிய சொல்லாடல்கள் இப்போது அதிகம் காண்கிறேன்..

மகிழ்ச்சியாய் இருக்கிறது..

இனியவளுக்கும் இயைந்தவர்களுக்கும் வாழ்த்துகள்+ ஊக்கங்கள்!