PDA

View Full Version : உன் பிரிவால்



theepa
02-07-2007, 11:25 PM
உன் பிரிவால்

சுகமானதை எல்லாம் சோகமாக்கினாய்...!
சுவையானதை எல்லாம் கசப்பாக்கினாய்..!
அழகானதை எல்லாம் தூரமாக்கினாய்...!
சோலைகளை எல்லாம் சருகாக்கினாய்..!
பூக்களை எல்லாம் நெருப்பாக்கினாய்...!
தூக்கத்தை எல்லாம் வெறுப்பாக்கினாய்...!
துடிக்கவிட்டு தூரவிளகினாய்......!
உடல் இருக்க உயிரைப்பறித்தாய்...!
மொத்தத்தில் உன் பிரிவால் என்னை
உணர்ச்சியற்ற பொம்மை யாக்கினாய்...!!!

அன்புடன்,
நட்புக்கு சொந்தக்காரி
லதுஜா

நெருப்பாக நீயும் மாறினால் அதில் சாம்பல் ஆகும் வரம் கேட்பேன்...

theepa
02-07-2007, 11:38 PM
புரியாத புதிர்

காதல் எனும் கடலில் இதயம் எனும்
தூண்டிலால் பார்வை எனும் புலுவாய்
என்னை கரையேற வைத்தவனே
உன் வார்த்தைகளுக்கு கட்டுப் பட்டேன்
நீயோ போலி நட்பு வைத்தாய் நானும்
உன் நடிப்பை நம்பினேன் காலங்கள்
ஓடியது அப்போது தான் தெரிந்தது நீ
ஒரு கன்னி வேட்டை யாடும் கயவன்
என்று கன்னி இவள் இதயத்தை உன்னிடம்
இழந்து விட்டு மீட்க முடியாமல் தவிக்கிறாள்
என் வாழ்க்கையோ புரியாத புதிர்

அன்புடன் ,
நட்புக்கு சொந்தக்காரி
லதுஜா

விகடன்
03-07-2007, 03:47 AM
இதே கவிதையைத்தானே இங்கேயும (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10554)் பிரசுரித்திருக்கிறீர்கள்?

ஓவியன்
03-07-2007, 06:26 AM
உன் பிரிவால்

சுகமானதை எல்லாம் சோகமாக்கினாய்...!
சுவையானதை எல்லாம் கசப்பாக்கினாய்..!
அழகானதை எல்லாம் தூரமாக்கினாய்...!
சோலைகளை எல்லாம் சருகாக்கினாய்..!
பூக்களை எல்லாம் நெருப்பாக்கினாய்...!
தூக்கத்தை எல்லாம் வெறுப்பாக்கினாய்...!
துடிக்கவிட்டு தூரவிளகினாய்......!
உடல் இருக்க உயிரைப்பறித்தாய்...!
மொத்தத்தில் உன் பிரிவால் என்னை
உணர்ச்சியற்ற பொம்மை யாக்கினாய்...!!!

அன்புடன்,
நட்புக்கு சொந்தக்காரி
லதுஜா

நெருப்பாக நீயும் மாறினால் அதில் சாம்பல் ஆகும் வரம் கேட்பேன்...

இரவுகளெல்லாம்
மறு நாள் வரும் பகலிற்காக!
கோடை வருவதெல்லாம்
என்றோ வரப்போகும் மாரிக்காக!
இதுவே வாழ்க்கையின் நியதி!
அது இங்கும் பொருந்தும்
பிரிவு விளைந்ததே
சேர்ந்தே வரப்போகும்
வசந்தத்திற்காகவே!!!!

வரிகளுக்குப் பாராட்டுகள் லதுஜா!

namsec
03-07-2007, 06:29 AM
பாரட்டுக்கள்

அமரன்
03-07-2007, 08:02 AM
லதுஜா பாராட்டுகள். எழுத்துப்பிழை இல்லாமல் எழுத முயற்சித்து வெற்றிபெற்றிருகின்றீர்கள். கவிதையின் அழகுக்கு அது மேலும் அழகுசேர்க்கிறது.

இனியவள்
03-07-2007, 08:20 AM
உன் நட்பால்

சோகமானதை எல்லம் சுகமாக்கினாய்..
கசப்பானதை எல்லாம் சுவையாக்கினாய்...
தூரமான அழகை எல்லாம் அருகாக்கினாய்..
சருகான வாழ்வை பூஞ்சோலை ஆக்கினாய்...
புயலாய் இருந்த மனதை தென்றல் ஆக்கினாய்
மொத்ததில் வெறுப்போடு இருந்த என் வாழ்வை
நேசிக்க கற்றுத் தந்தாய்...

வசீகரன்
03-07-2007, 08:20 AM
தீபா உங்கள் எழுத்துக்கள்...குன்றின் மேலிட்ட தீபம் போல மின்னுகின்றது....
உங்கள் எழுத்துக்களை படிக்ககயில்.. அந்த காதல் வலிகள் மன போராட்டங்கள்.... உங்கள் எழுத்து வாயிலாக தெரிகிறது...!

சூரியன்
03-07-2007, 02:37 PM
நல்ல வரிகள் தீபா.

theepa
08-07-2007, 12:59 AM
என்னோட கவிதைய படிச்சு அதர்க்கு உங்கள் பாராட்டுக்கலை கொடுத்ததர்க்கு எனது அன்பான நன்றிகள்