PDA

View Full Version : நீடிக்குமா?



நிரன்
02-07-2007, 10:48 PM
உன்னுள் நானும்
என்னுள் நீயும்
கலக்கும் இம் மணித்துளிகள்
மரணம் வரை நீடிக்குமா?

ஓவியன்
03-07-2007, 04:44 AM
சாதல் வரை
தொடர்வது தான்
காதல்!
இல்லையெனின்
அது வெறும்
கூடல்!.

வரிகள் தந்த அன்பு உறவுக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!.

அமரன்
03-07-2007, 07:44 AM
கண்கள் கலந்து உள்ளங்கள் கலந்த
மணித்துளிகள் நிலைத்திருக்குமா
நாடி அடங்கும் வினாடி வரை...
கலக்கத்துடன் கேட்ட நிரஞ்சன்
கவிதையில் கலக்கிவிட்டார்.
பாராட்டுகள் நிரஞ்சன்.

ஓரெழுத்து மாற்றி காதல்பற்றி
கருத்துரைத்து தொடர்ந்த
ஓவியனுக்கும் வாழ்த்துகள்

அரசன்
09-07-2007, 01:23 PM
உன்னுள் நானும்
என்னுள் நீயும்
கலக்கும் இம் மணித்துளிகள்
மரணம் வரை நீடிக்குமா?

மரணமே வந்தாலும்
மடிய காத்திருப்போம் −
இந்த மணித்துளிகளில்!

அப்படித்தானே.

இனியவள்
09-07-2007, 01:28 PM
உன்னுள் நானும்
என்னுள் நீயும்
கலக்கும் இம் மணித்துளிகள்
மரணம் வரை நீடிக்குமா?

கவிதை அருமை நிரஞ்

மரணம் கூட
நெருங்க அஞ்சுகின்றது
அன்பே நாங்கள் ஒர்
உயிர் ஈருடலாய் இருக்கும்
போது கலக்கம் எதுக்கு அன்பே
என் உயிர் கொடுத்தாவது
உன் உயிர் காப்பேன் :icon_08:

அக்னி
10-07-2007, 08:30 AM
நம் காதல் நீடிக்கும் வரை,
மரணமும் காத்திருக்கும்...
மரணம்...
காதலரின் உடலிலிருந்து,
உயிரை மட்டுமே பறிக்கும் சாதனம்...
ஆனால்,
காதல் மரணத்தின் பின்னும்
காக்கப்படும் சாசனம்...
நீடிக்கும் சாசுவதம்...

ஆதவா
10-07-2007, 08:36 AM
அது உங்கள் வாழ்(ய்)வைப் பொறுத்து..... ஹி ஹி. கவிதை அழகு..