PDA

View Full Version : இனியவளின் கவிதைகளுக்கு விமர்சனம்



ஆதவா
30-06-2007, 03:29 PM
இன்றைய பிரிதலில்
நாளை ஓர் உறவுப்புஷ்பம்
உலகில் மலரலாம்.
கணவுகள் ஒரு நாள்
நனவாகிப்போகலாம்

பிரிவு என்ற* த*லைப்பு...
இருக்க*லாம்.... பிரித*லில் இத்த*னை வ*லிமை இருக்கிற*தா என்ப*து என*க்குத் தெரியாது.... இருப்பினும் க*விதை அழ*கு... −−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−
காதல்


காதல்
என் னோடு நீ..
இருக்கும் வரை
உன்னிடம் தந்த
காதல்
எனக்கு இனிமை.
என்னை விட்டு நீ..
பிரியும் போது
என்னை மரணிக்க
வைக்கும் காதல்
விஷம்.

இதென்ன* இருவ*கைக் காத*ல்.. இருக்கும் வ*ரை இனிமை. பிரிந்த* பிற*கு விஷ*மென்றால் முன்ன*ர் சொன்ன* க*விதைக்கு இந்த* க*விதை ஒத்து வ*ர*வில்லையே??
−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−


எங்கிருந்து வந்தது தோல்வி

எங்கிருந்து வந்தது தோல்வி

உனக்குள் நீயே போட்டதுதான்
தோல்வி

மனம் என்ற கடலுக்குள்
வேதனைக்கப்பல் மூழ்கும் போது
தோல்விப்பாதைக்குள் நீ கால் பதிக்கின்றாய்

அத்தோல்வியே உனக்கு
வெற்றியின் ஒளியை மறைக்கின்றது

முடிவுற்றது என நிமிர்ந்துவிடு

மீண்டும் உனைத் தொடர்ந்தால்...
தொடர்கின்றதே என முடங்கிடாதே

மானிடாசெதுக்கிய சிற்பம் அழிந்ததே தவிர
உன்கையில் இருக்கம் உளி தவறவில்லையே

சிரிப்போடு கையில் எடுக்கையில்
துணிவோடு உன் கால்கள் வெற்றி நடைபோடும்

நீதி கூறும் போது உனக்கு புரிகின்றதோ இல்லையோ
நீ போராடிய அனுபவம் பேசும் போது
மானிடா என்றும் வெற்றி மாலை உன்கையில்....

கொஞ்ச*ம் எழுத்துப் பிழைக*ளோடு வார்த்தை ஒட்டாம*ல் இருப்ப*தையும் ம*ன*தில் வையுங்க*ள் இனிய*வ*ள்... செதுக்கிய* சிற்ப*ம், உளி, ந*ல்ல* உதார*ண*ம். சுவை மிகுந்த* கார*ம் குறைந்த* க*விதை,..,. வாழ்த்துக்க*ள்.
−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−


கோபம்


உன் கோபத்தை
என் இதயத்தில்
சேமித்து சேமித்து
எனக்கு கோபம்
போய் விட்டது

அட*டே! இது நல்ல* பாலிஸி யா இருக்கே!! ந*ல்ல* குறுங்க*விதை... இருந்தாலும் ஏனோ ம*ன*தை தொட்ட*மாதிரி இராம*ல் கொஞ்ச*ம் ந*ழுவிச் செல்லுகிற*து க*விதை...

−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−

காதல்
அத்தனை சோகத்தையும்
துடைக்கும்
ஒற்றைக் கைக்குட்டை.

காதல்
அத்தனை கைக்குட்டைகளையும்
நனைக்கும்
ஒற்றை சோகம்

உனது
சிரிப்பை மொழிபெயர்க்கும்
கலை
வாய்த்திருந்தால்
ஆயிரம்
கவிதைத் தொகுதிகள் போட்டிருப்பேன்.

விழித்து விடக் கூடாதே
என்னும்
நினைப்பில் தூங்கப் போகிறேன்,
தூங்கவே விடாமல்
விழிக்கின்றன உன் நினைவுகள்

பிரசுரத்துக்கு அனுப்பாத
முத்தம் ஒன்று
என்னிடம் காத்திருக்கிறது.
உன் இதழ்களில் பிரசுரிக்கும் ஆசையுடன்.

அதிகாலைக் கதிரவனும்,
கை நீட்டும் கடலலையும்,
மனம் நனைக்கும் மழைச்சாரலும்,
இருள் கவிதை வான் வெளியும்
எதையும் விட
அழகானவன் நீயென்று
தோன்றிய தருணத்தில்
நான் உன்னைக் காதலிக்கத் துவங்கியிருக்கலாம்.


அட*டே! ம*ழைத்துளி போல* க*விதை.... ம*ன*தில் ஏறி இற*ங்கும் ப*னித் துளி போல*. ந*ல்ல* க*விதை வ*ள*ம் உங்க*ளுக்கு....

காதல்
அத்தனை கைக்குட்டைகளையும்
நனைக்கும்
ஒற்றை சோகம்

இந்த* வ*ரிக*ள் மிக*வும் அருமை.... கைக்குட்டைக*ள் இல்லாத* காத*லும் ம*ழையில் ந*னையாத* க*விதையும் உல*கில் உண்டா?

பிரசுரத்துக்கு அனுப்பாத
முத்தம் ஒன்று
என்னிடம் காத்திருக்கிறது.
உன் இதழ்களில் பிரசுரிக்கும் ஆசையுடன்

சூப்ப*ர்... முன்ன*ர் குறிப்பிட்ட* க*விதைக*ளைவிட* இந்த* க*விதை டாப்... க*ற்பனையா ய*தார்த்த*மா? அல்ல*து இர*ண்டு கல*ந்த* க*ல*வையா? ஒன்றும் புரியாம*ல் த*விக்கிறேன்....

வாழ்த்துக்க*ள் இனிய*வ*ள்....


மீதிக் க*விதைக*ளை நேர*ம் கிடைக்கும்போது விம*ர்சிக்கிறேன்.... வாழ்த்துக்க*ள்... :aktion033: :sport009:

இனியவள்
30-06-2007, 03:39 PM
மீதிக் க*விதைக*ளை நேர*ம் கிடைக்கும்போது விம*ர்சிக்கிறேன்.... வாழ்த்துக்க*ள்... :aktion033: :sport009:

நன்றி ஆதவா
நான் இவ் மன்றத்தில் நுழைந்ததும் எனக்கு முதல் கிடைத்த பின்னூட்டம் உங்களுடையதே..உங்கள் ஊக்கம் என்னை இன்னும் எழுத தூண்டியது..எழுதிக் கொண்டும் இருக்கின்றேன்
நன்றி நண்பனே:)

அறிஞர்
30-06-2007, 03:40 PM
தனி விமர்சனம் அருமை ஆதவா...

நேரம் கிடைக்கும்பொழுது.. நானும் சில வரிகள் எழுதுகிறேன்.

அமரன்
30-06-2007, 07:57 PM
நானும் இணைந்துகொள்ளலாமா ஆதவா.