PDA

View Full Version : வெடிப்பு..!



அக்னி
28-06-2007, 07:06 PM
தடுமாறுகிறது...
என் காதல்...
தடம்மாறுகின்ற
உன் காதலால்...
வடம் பிடித்து
இழுத்தால் தான்,
உன் காதல்
என்னை வருமா...?
வெடிக்கும் என் இதயத்தை,
காட்டி விட,
உன் கண்கள் என்ன
படம் பிடிக்கும் கருவியா..?
உணர்வால் தொட்டுப்பார்...
படபடக்கும் என் இதயத்தின்,
இறுதி வெடிப்பை...

இனியவள்
28-06-2007, 07:17 PM
தடுமாறுகிறது...
என் காதல்...
தடம்மாறுகினற
உன் காதலால்...
வடம் பிடித்து
இழுத்தால் தான்,
உன் காதல்
என்னை வருமா...?


கவி அருமை அக்னி வாழ்த்துக்கள்

தடம்புரண்டு போகும் காதலை வடம்போட்டு இழுத்து வரவழைத்தாலும் அங்கு உண்மையான அன்பு நிலைக்குமா??

அமரன்
28-06-2007, 07:22 PM
இதயம் இழுக்கும்
காதல் தேருக்கு
தடம் போடுவது
புடம் போடுவதற்கே
தடம் மாறவில்லை
புரிந்து கொள் காதலே!

காதலின் மகத்துவத்தைச்சொன்ன அக்னியின் வரிகள் அருமை.
படித்தேன் காதல் பாடம். பாராட்டுகள் அக்னி.

அக்னி
30-06-2007, 01:27 AM
நன்றி இனியவள்...
நன்றி அமரன்...

சூரியன்
30-06-2007, 09:41 AM
அக்னி வரிகள் அருமை.........

ஓவியன்
30-06-2007, 10:57 AM
தடம் மாறாமல்
வடம் பற்றி,
பின்வருவோருக்கும்
தடம் வைத்துப்
போவது தானே காதல்!

விளக்கிய அக்னி வரிகளுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!.

அக்னி
30-06-2007, 11:12 PM
நன்றி சூரியன்...
நன்றி ஓவியன்...

theepa
01-07-2007, 01:39 AM
நன்பரே உங்கல் கவிதை மிகவும் அருமையாக உல்லது காதல் என்பது தானாக மனசில் வரவேண்டும் அதை நாமாக வரவலைத்தல் அது ரொம்ப நாலைக்கு நிலைக்காது

அக்னி
01-07-2007, 09:12 AM
நன்பரே உங்கல் கவிதை மிகவும் அருமையாக உல்லது காதல் என்பது தானாக மனசில் வரவேண்டும் அதை நாமாக வரவலைத்தல் அது ரொம்ப நாலைக்கு நிலைக்காது

அப்படி வரவழைப்பது மனங்கள் ஒன்றுபட்ட காதலே அல்ல.
மனங்களை கட்டிபோடும் வாதை...
நன்றி தீபா...

மனோஜ்
01-07-2007, 09:27 AM
காதல் ஒன்றானால் கட்டிகரும்பு
விலகிசென்றால் கட்டும் கயிரு
அருமை நண்பரே கவிதை

அக்னி
01-07-2007, 09:29 AM
காதல் ஒன்றானால் கட்டிகரும்பு
விலகிசென்றால் கட்டும் கயிரு
அருமை நண்பரே கவிதை

ஆகாகா...
இருவரிகளில் அற்புதமாக கூறிவிட்டீர்களே...
நன்றி மனோஜ்!

ஆதவா
03-07-2007, 03:27 PM
வெடிப்பைக் கண்ணால் காண படக் கருவியா?... நல்ல வரிகள் அக்னி.. அக்னியால் வெந்து இதயம் எழுதிய கவிதை போல.... துடிப்பை உணர்ந்தவள் காதலி,, வெடிப்பை உணருபவள் யார்?,. நல்ல கவி அக்னி.. வாழ்த்துக்கள்.

அக்னி
04-07-2007, 04:13 PM
வெடிப்பைக் கண்ணால் காண படக் கருவியா?... நல்ல வரிகள் அக்னி.. அக்னியால் வெந்து இதயம் எழுதிய கவிதை போல.... துடிப்பை உணர்ந்தவள் காதலி,, வெடிப்பை உணருபவள் யார்?,. நல்ல கவி அக்னி.. வாழ்த்துக்கள்.

நன்றி ஆதவா...