Log in

View Full Version : அம்மா



இனியவள்
27-06-2007, 06:46 AM
அன்பு அவள் மொழி
ஆறுதல் அவள் வார்த்தை
இன்முகம் அவள் முகவரி
ஈடில்லாதது அவள் பாசம்
உயர்வானது அவள் பண்புநலன்
ஊக்கமளிப்பாள் உயர்வு பெற
எதிரிக்கும் காட்டுவாள் கருணைமுகம்
ஏமாற்றம் நிகழும்போதும் இன்முகம்
ஐயங்களின் எல்லைக்கப்பால் அவள்ஆன்மா
ஒற்றுமையே அவள் வேதம்
ஓடம்போல்தான் கரைசேர்ப்பாள் நம்மை
ஔரவமானது அவள் சக்தி
அஃதே அவளே அம்மா.

அன்புரசிகன்
27-06-2007, 07:16 AM
நமக்கு உயிர்தந்தவளை உயிரெழுத்தால் வார்த்திருக்கிறீர்கள்.
பாராட்டுக்கள்.

அக்னி
27-06-2007, 09:51 AM
அகர வரிசையில் அம்மா...
மனதைத் தொடும் உண்மை வரிகளில்
மனதைத் தொலைத்துவிட்டேன்...

பாராட்டுக்கள்...

lolluvathiyar
27-06-2007, 01:47 PM
தாயை பற்றி அற்புதமான வரிகள்
அதுவும் உயிர் தந்த தாயை உயிரெழுத்திலேயே பாடி விட்டீர்கள்

அமரன்
27-06-2007, 02:20 PM
தமிழின் முதலெழுத்து அகரம்த்தில் ஆரம்பித்து அத்தனை உயிரெழுத்துகளிலும் அன்னையை பாடிய இனியவளுக்கு எனது நன்றிகள். அன்னையும் உயிரும் ஒன்றுதான் என்பதை உணர்த்துகின்றது கவிதை