PDA

View Full Version : காதலனே



இனியவள்
26-06-2007, 01:21 PM
அதெப்படி?
இரவில் என்னை
உறங்கிப்போக செய்யும்
உன் நினைவுகளே
காலையில் என்னை
எழுப்பி விடவும் செய்கின்றன...


உலகில் மற்றவர்கள் எல்லாம்
எனக்கு உறவு...
நீ மட்டுமே
உயிர்...

உலகத்தில் ஒரு முறை மட்டுமே
நிகழ்ந்துவிட்ட அதிசயம்
உன் பிறப்பு...


பூமிக்கு நிலாவிடமிருந்துதான்
ஒளி கிடைக்கிறது!
எனக்கு மட்டும்
உன்னிடமிருந்துதான் கிடைக்கிறது...


உன்னை கை பிடிக்க வேண்டும்
என்ற ஆசை எல்லாம்
எனக்கு அறவே இல்லை...
நீ சுவாசித்த காற்றை
பிடிக்க வேண்டும் என்ற
ஆசை மட்டுமே!

அன்புரசிகன்
26-06-2007, 01:33 PM
வெற்றி காதலுக்கில்லை.
தோல்வி காதலில் இல்லை
வெற்றி தோல்வி துறந்தால்
தோல்வி உனக்கில்லை.

ஒன்றைத்துறந்தால்
பலதைத்தருவது
காதலில் (மட்டும்) நடக்கும் அதிசயம்.
அதிசயம் நிகழ்த்தும் இனியவளே
என் வாழ்த்துக்களை ஏற்றுக்கொள்.

ஷீ-நிசி
26-06-2007, 03:59 PM
பூமிக்கு நிலாவிடமிருந்துதான்
ஒளி கிடைக்கிறது!
எனக்கு மட்டும்
உன்னிடமிருந்துதான் கிடைக்கிறது...


உன்னை கை பிடிக்க வேண்டும்
என்ற ஆசை எல்லாம்
எனக்கு அறவே இல்லை...
நீ சுவாசித்த காற்றை
பிடிக்க வேண்டும் என்ற
ஆசை மட்டுமே!

கடைசி இரண்டு பகுதிகளும் மிக அருமை......

அமரன்
26-06-2007, 04:31 PM
இனியவளில் அழகுகவிதைக்கு பாராட்டுகள்.

இனியவள்
27-06-2007, 07:08 AM
வெற்றி காதலுக்கில்லை.
தோல்வி காதலில் இல்லை
வெற்றி தோல்வி துறந்தால்
தோல்வி உனக்கில்லை.
ஒன்றைத்துறந்தால்
பலதைத்தருவது
காதலில் (மட்டும்) நடக்கும் அதிசயம்.
அதிசயம் நிகழ்த்தும் இனியவளே
என் வாழ்த்துக்களை ஏற்றுக்கொள்.

நன்றி அன்புரசிகன்
உங்கள் அனைவருடைய பின்னூட்டங்கள் என்னை மென்மேலும் கவி எழுத தூண்டுகின்றது
எனது மனமார்ந்த நன்றிகள் அனைவருக்கும்

இனியவள்
27-06-2007, 07:09 AM
கடைசி இரண்டு பகுதிகளும் மிக அருமை......

நன்றி ஷீ-நிசி


இனியவளில் அழகுகவிதைக்கு பாராட்டுகள்.

நன்றி அமரன்

சூரியன்
27-06-2007, 07:13 AM
உங்களின் ஒவ்வொரு கவிதையும் அருமையாக இருக்கிறது