இனியவள்
26-06-2007, 01:21 PM
அதெப்படி?
இரவில் என்னை
உறங்கிப்போக செய்யும்
உன் நினைவுகளே
காலையில் என்னை
எழுப்பி விடவும் செய்கின்றன...
உலகில் மற்றவர்கள் எல்லாம்
எனக்கு உறவு...
நீ மட்டுமே
உயிர்...
உலகத்தில் ஒரு முறை மட்டுமே
நிகழ்ந்துவிட்ட அதிசயம்
உன் பிறப்பு...
பூமிக்கு நிலாவிடமிருந்துதான்
ஒளி கிடைக்கிறது!
எனக்கு மட்டும்
உன்னிடமிருந்துதான் கிடைக்கிறது...
உன்னை கை பிடிக்க வேண்டும்
என்ற ஆசை எல்லாம்
எனக்கு அறவே இல்லை...
நீ சுவாசித்த காற்றை
பிடிக்க வேண்டும் என்ற
ஆசை மட்டுமே!
இரவில் என்னை
உறங்கிப்போக செய்யும்
உன் நினைவுகளே
காலையில் என்னை
எழுப்பி விடவும் செய்கின்றன...
உலகில் மற்றவர்கள் எல்லாம்
எனக்கு உறவு...
நீ மட்டுமே
உயிர்...
உலகத்தில் ஒரு முறை மட்டுமே
நிகழ்ந்துவிட்ட அதிசயம்
உன் பிறப்பு...
பூமிக்கு நிலாவிடமிருந்துதான்
ஒளி கிடைக்கிறது!
எனக்கு மட்டும்
உன்னிடமிருந்துதான் கிடைக்கிறது...
உன்னை கை பிடிக்க வேண்டும்
என்ற ஆசை எல்லாம்
எனக்கு அறவே இல்லை...
நீ சுவாசித்த காற்றை
பிடிக்க வேண்டும் என்ற
ஆசை மட்டுமே!