PDA

View Full Version : நீ..நான்..காதல்



shangaran
26-06-2007, 11:52 AM
எனை தாக்கிய புயலும் நீ,
எனை தழுவிய தென்றலும் நீ.

எனை சூழ்ந்த சோகம் நீ,
சோகம் தரும் சுக*மும் நீ.

என் தேகம் நீ,
தேகம் தாங்கும் உயிரும் நீ.

உன் விழியால் எனை சுட்டெரித்தவளும் நீ,
பின் சுண்டியிழுத்தவளும் நீ.

என் காதல் நீ,
காதல் தந்த கவிதையும் நீ.

என் காதல் மேகம் நீ,
மேகம் தரும் மழையாய் நீ.

ஜாடை பேசும் ஓடை நீ,
ஓடை தரும் குளிர் நீரும் நீ.

என் இதயத்தில் நீ,
என் இதயத்துடிப்பாய் நீ.

எனை கள்வனாக்கியதும் நீ,
கள்வனின் காதலியாய் நீ.

என் மனைவியும் நீ,
என் மழலையாய் நீ.

என் முதலும் நீ,
என் முடிவாய் நீ.

சூரியன்
26-06-2007, 11:57 AM
நீ நான் காதல், கவிதை அருமை

shangaran
26-06-2007, 12:15 PM
நன்றி சூரியன்.

ஓவியா
26-06-2007, 12:29 PM
இருடல் ஓருயிர் என்பது போல் உங்கள் அன்பும் ஆசையும் ரொம்பவே வழிந்தோடுகிறது. வாழ்த்துக்கள்.

இய*ற்கையை வ*லைத்து வ*லைத்து உங்க* அவ*ளை/அவ*னை வ*ர்ணித்து க*விதை அழ*கு ப*டுத்திவிட்டீர்க*ள். காண்ப*து எல்லாம் நீதானே என்று உருகி விட்டீர்க*ள். அவள், காதலி, மனைவி, மகள்....அடடா. ப*லே

கவிதை நன்று. பாராட்டுகிறேன்.

shangaran
26-06-2007, 12:38 PM
ஆழ்ந்து படித்து விமர்சித்ததற்கு மிக்க நன்றி ஓவியா...

இனியவள்
26-06-2007, 02:08 PM
அருமையான கவி சங்கரன் வாழ்த்துக்கள்

ஓவியன்
26-06-2007, 05:35 PM
சோகமும் நீ!
சோகம் தீர்க்கும் சுகமும் நீ!

வரிகள் அருமை சங்கரன்! − பாராட்டுக்கள்!

நோய்க்கான காரணியே நோயத் தீர்க்கும் மருந்தாவது காதலிலே மட்டும் தான்.

shangaran
27-06-2007, 03:51 AM
நன்றி இனியவள் & ஓவியன்.

வசீகரன்
27-06-2007, 05:21 AM
ஒவ்வொரு வரிகளும்.... காதல் இதயங்களில்.... மழை தூறல்களாய்.... தூவும் வரிகள்
அருமை.

shangaran
27-06-2007, 06:22 AM
வாழ்த்துக்களுக்கு நன்றி வசீகரன்.

அமரன்
27-06-2007, 03:44 PM
எல்லாமே நீதான் என்று யாரைப்பார்த்துங்க சங்கரன் சொல்கின்றீர்கள்.ரசனையான வரிகள். பாராட்டுகள்.♣

shangaran
28-06-2007, 03:10 AM
எல்லாம் என்னவளைப் பற்றித்தான் சொல்கிறேன்.