rambal
21-05-2003, 03:57 PM
இளசுவின் புண்ணகவராளியும்.. கருவேல முட்களும்...
இளசு அவர்கள் எழுதியது கவிதை அல்ல..
அத்தனையும் சிறுகதைகள்..
எளிமையாய் நெஞ்சில் குத்தி..
ஆழமாய் இறங்கி.. நிரந்தரமாய் தங்கிவிடும் ஆணிகள்..
கடைசி வரியில் ஒரு பூகம்பம் இருக்கும்...
இளசு.. தனி நிறம்.. தனி வடிவம்...
இளசு.. தனி கற்பனா சக்தி.. எதார்த்த உண்மைகளை வாழைப்பழத்தில் ஊசியாய்...
இதுதான் இளசா? என அறுதியிட்டுக் கூறமுடியா..
அதுதான் இளசு...
முதலில் நான் ரசித்த வரிகள்...
இன்னும் கொஞ்சம் உற்றுப்பார்க்க
என்ன இது கொடுமை!
தென்றல் வீசும் பூங்காவில்
ஒன்றாக உலாவிவிட்டு
புயல் அடித்த பொழுதில் எல்லாம்
அயலாய் என்னை விட்டதென்ன?
பாதச் சுவடுகள்...
<span style='color:blue'>
"எப்படி சாதித்தாய் டெர்மாட்?"
" உயிரோடிருக்கும் ஒவ்வொரு நாளும்
பரிசு நாள், பயன்படுத்த வேண்டிய நாள்.
காலையில் கண்ணாடிக்கு சொல்வேன்:
Think What You Can Do-
Not What You Can't Do "
முடியாததை அல்ல
முடிவதை மட்டும் நினை
</span>
முடிவதை மட்டும் நினை..
பூம்புகார் கரையில்
கிளிஞ்சல்கள் நீ சேர்க்க
ஆயிரம் ஆண்டாவது
இமைக்காமல் ரசிக்க வேண்டும்
ஒரு அலைக்கும் மறு அலைக்கும்
ஒரு வருடம்
இடைவெளி என்றால்
வெட்கம் விலக்கி விடு..
முதலில் எனக்குப் பிடித்த காதல் கவிதை..
உன்னில் என்னைக் கண்டேன்.. ஆகையால் தன்னையேக் காதலிக்கும் ஒரு வித்யாசமான காதலனின் காதல்..
அவள் போன பின்னும் என் மேல் கொண்ட காதலை நேசித்தேன்.. இறுதியாக
அவள் இல்லை எனும் பொழுது அந்தக் காதலை நேசிக்கிறார் கவிஞர்.. அந்த கவிதை...
யாரைக் காதலித்தேன்..
காதலி போனபின்னும்
காதலை நேசித்தேன்... என் மேல் கொண்ட
காதலை நேசித்தேன்...
மீண்டும் எனைப் புடம்போட
உலை தரும்
காதலை நேசித்தேன்...
புண்ணாக்கி பொன்னாக்கும்
அந்தப் பொல்லாக்
காதலை நேசித்தேன்....
அளவிற்கு அதிகமாய் வெட்கப்படுபவளைக் கண்டு புலம்பும் வித்யாசமான காதலன்..
அதுவும் எப்படி?
<span style='color:blue'>
பிரளயம் பிரிக்கும் வரை - உன்
இருதயம் என் பள்ளியறை
அத்தனை காலம் வேண்டும்
உன்னை ஆராதிக்க - என்
அன்பை நிரூபிக்க
'ஒரு நாள் குறையேண்டா.'
இறைவனே கேட்டாலும்
மாட்டேன் சம்மதிக்க
"என்னவளைப் பழகிப்பார்
இன்னும் நாள் கொடுப்பாய்"
வாதிடுவேன் சாதிக்க
..............
.............
............
..............
காலம் உள்ளவரை
காலம் நமக்கிருந்தால்
உன்
வெட்கம் குற்றமில்லை
</span>
வெட்கம் விலக்கிவிடு..
என்றபடியாக முடிகிறது இந்தக் க(வி)தை..
இப்படி வெட்கப்படுபவளுக்காக கவிஞர் வரிந்து கட்டி எழுதியிருப்பது சொற்பம்தான்..
இல்லையெனில் காலம் உள்ளவரை காலம் நமக்கிருந்தால் எழுதியிருப்பார் இதன் தொடர்ச்சியை..
இவரின் புறநானூற்றுக் கவிதைகள் அலாதியானது..
பூர்வாங்கமும் கெடாமல்.. எளிமையும் சிதையாமல்..
பாமரர்க்கும் புரியும் வகையில் அட்சரசுத்தமாய்.. (இதை இன்னும் தொடரலாம்)
<span style='color:blue'>
கருப்புக் கொடி
மூலம்: புலவர் கல்லாடனார்
கருப்புக்கொடி கண்டா போர் நிறுத்தினாய்
ஓ...கணவனை இழந்தவளின்
கலைந்த கூந்தல்
மகன் எங்கே
மூலம் : புலவர் காவற்பெண்டு
"புலி போர்க்களத்தில் - அது
குடிருந்த மலைக்குகை மட்டுமே வீட்டில்".
உண்மையான புரட்சித்தாய்.
வறுமையில் செம்மை
மூலம் : புலவர் மதுரைக்குமரனார்
வரகுச்சோற்றோடு வயிற்றை நிரப்பும்
கீரை இன்று குறைகிறதே.....
"மான் மேய்ந்து ஓய்ந்த மீதி"
வறுமை சொல்ல நாணம்
மூலம்: புலவர் ஆவுர் மூங்கில்கிழார்
வறுமையா யார் சொன்னது
செம்பட்டு மறைக்குமே என் மனைவி மேனி
நாணமே ஆடை
படைத்தவன் கணக்கு
மூலம்: புலவர் நன்கணியார்
ஒரு வீட்டில் சாவு மேளம்
மறு வீட்டில் மண மேளம்
இடம் மாறும் கூந்தல் பூ
</span>
இப்படியாக சங்கத்தமிழை மன்றத்தில் வளர்க்க இவர் எடுத்துக் கொண்ட பிரயத்தனங்களுக்காகவே சிலை வைக்கலாம்..
தப்பாய் இருக்கும் தன் முகம் பற்றி கவலை கவிஞருக்கு.. அதிலே அழகாய் ஓடும் வார்த்தை ஆறு..
முகம்
எப்படி வரைவது என் முகத்தை....
கண்ணாடி பார்த்தபடி....?
இடவலம் மாற்றம்...
நண்பர்கள் உணர்ந்தபடி....?
ஆனை - குருடர் கதை போல்....
அம்மா நினைத்தபடி.......?
இன்னுமா கூட்டுப்புழு.....
அவளின் கனவுப்படி.....?
சிறகின் கீழ் பாறை......
எப்படி வரைந்தாலும்
தப்பு மட்டும்
தப்பாது........
தன்னைப் பற்றிய சுயம் தேடுகிறார் கவிஞர்..
ஆதியில் ஆரம்பித்த வேட்டை..
ஆதியில் காட்டில் வேட்டை
அடுத்து கழனியில் உழவு
இன்று சூப்பர்மார்க்கெட்டில்
தள்ளுவண்டியில்.....
...............
...............
...........
வாரிசு வளர்ந்தபின்னும்
சாகாமல் இருப்பவை
மனிதனும்
திமிங்கிலமும் தான்
.............
.............
.............
...........
காட்டின் பேர் : இணையம்
களத்தின் பேர் : மன்றம்
0
எதிர்பார்ப்பு இல்லாத நண்பர் மன்றம்
இவனும் நம்மில் ஒருவன் என்னும் உள்ளம்
0
உணவு தேடி வந்தவன் உண்டபின்
உணவாகிப் போனான்
பசியோடு வந்தவன் பரிமாறுவதிலேயே
பசியாறிப் போனான்
0
களம் மாறுமா
காலம் கூறும்.
மனித வாழ்வில் தந்தை மகன் எனும் பதங்களின் கூட்டுச்சிக்கலை.. புரிதலை.. புரியாமல் போய் விட்ட பல தந்தை மகன்களுக்காக இந்தக் கவிதை.. ஓடமும் வண்டியில் ஏறும்..வண்டியும் ஓடத்தில் ஓர் நாள் ஏறும்...
ஆரமும் வட்டமும்
...........
..........
இருபத்தாறு வயதில்
அப்பா , அவள் சொல்றதுதான் சரி
அந்தக்கால ஆசாமி நீங்க
வாயை மூடிட்டு இருங்க...
.......
...........
.........
நாற்பத்தாறு வயதில்...
பெரியவன் போக்கே சரியில்ல
சின்னவன் என் பேச்சை கேக்குறதே இல்ல
பொண்ணுக்கு வந்த வரன் குழப்பமா இருக்கு
அப்பா மட்டும் இப்ப இருந்தா...
அவருக்கு தெரியாத விஷயமே இல்ல,
தெரியுமா உங்களுக்கு!
இப்படியாக ஆரம்பித்த இடத்தில் முடிக்கிறார் கவிஞர்..
அப்பாக்களுக்காக கவிஞர் எழுதிய இந்தக் கவிதை ஒரு வகையான மறைமுக துதிதான்..
மற்றொரு கவிதையில் நேரிடையாக அப்பா புகழ் பாடுகிறார்..
அப்பாயணம்..
<span style='color:blue'>
நீ எனக்கு வாங்கித் தந்த
இனிப்புகளை விட
புத்தகங்களே அதிகம்
"உன் குழந்தையை அடிக்கும்போது
ஒரு புகைப்படம் எடுக்கச்சொல்லிப் பார்"
ரஸ்ஸல் படித்து நீ எழுதியது பழைய டைரியில்
அப்படி ஒரு படமே இல்லை உன் வாழ்க்கை டைரியில்
.............
..............
..............
.............
என்னைப் பெற்றது பெருமை என்பாய்
இல்லை அப்பா
உனக்குப் பிறந்தது
நான் வாங்கி வந்த வரம்
முடிக்க முடியவில்லை........
</span>
இப்படியாக மகன் தந்தைக்கு ஆற்றும்.. என்ன எழுதி விளக்குவேன்.. இது மாதிரி சில சமயங்களில் என்னை
சில துளிகள் சிந்தவைப்பதுண்டு..
அடுத்து வேடிக்கையாய் முகத்தில் உண்மையை அடிக்கும் கவிதை..
நடராசன் நடக்கிறான்..
இரண்டு வயதில்:
-----------------------
நடராசன் நடக்கிறான்
கால் சட்டை பனியனுடன்
தாத்தா வாங்கித் தந்த
நடை வண்டி பிடித்தபடி
நடராசன் நடக்கிறான்
............
...............
..............
ஐம்பது வயதில்:
--------------------
ஏறிவிட்ட சர்க்கரையாம், பி.பியாம்.
எக்கச்சக்க கொலஸ்ட் -ராலாம்
பத்தியமாம் மாத்திரையாம்
பட்டினி கூட வைத்தியமாம்
கதைவைத் திறந்துவிட்டு காரோட்டி காத்திருக்க
கடற்கரைக் காலைக் காற்றில்
கால் சட்டை பனியனுடன்
நடராசன் நடக்கிறான்.
இது போன்ற பல கவிதைகள் இவரிடம் உண்டு..
அண்ணனின் வ(வி)சனக்கவிதை, சுட்டு விரல், துப்பார்க்கு தூவும் மழை..
ஏன் தோழி? எனும் ஒரு பெண்ணின் அவலக் கதையை நிறைய எதார்த்த சம்பவங்களோடும் கொஞ்சம் அதிர்ச்சி முடிவோடும் பதித்திருக்கிறார்..
பாதச்சுவடுகள், முடிவதை மட்டும் நினை.. தொடரும் இவரது பட்டியல்...
இளசு அவர்கள் இசைத்தது புண்களைத்தாங்கி புண்ணாகவராளி பாடும் புல்லாங்குழலின் சங்கீதம்..
அவர்கள் எழுதியது கருவேல முட்களாய் குத்திக் கிழிக்கும் கூர்மையான கவிதைகள்..
இளசு அவர்கள் எழுதியது கவிதை அல்ல..
அத்தனையும் சிறுகதைகள்..
எளிமையாய் நெஞ்சில் குத்தி..
ஆழமாய் இறங்கி.. நிரந்தரமாய் தங்கிவிடும் ஆணிகள்..
கடைசி வரியில் ஒரு பூகம்பம் இருக்கும்...
இளசு.. தனி நிறம்.. தனி வடிவம்...
இளசு.. தனி கற்பனா சக்தி.. எதார்த்த உண்மைகளை வாழைப்பழத்தில் ஊசியாய்...
இதுதான் இளசா? என அறுதியிட்டுக் கூறமுடியா..
அதுதான் இளசு...
முதலில் நான் ரசித்த வரிகள்...
இன்னும் கொஞ்சம் உற்றுப்பார்க்க
என்ன இது கொடுமை!
தென்றல் வீசும் பூங்காவில்
ஒன்றாக உலாவிவிட்டு
புயல் அடித்த பொழுதில் எல்லாம்
அயலாய் என்னை விட்டதென்ன?
பாதச் சுவடுகள்...
<span style='color:blue'>
"எப்படி சாதித்தாய் டெர்மாட்?"
" உயிரோடிருக்கும் ஒவ்வொரு நாளும்
பரிசு நாள், பயன்படுத்த வேண்டிய நாள்.
காலையில் கண்ணாடிக்கு சொல்வேன்:
Think What You Can Do-
Not What You Can't Do "
முடியாததை அல்ல
முடிவதை மட்டும் நினை
</span>
முடிவதை மட்டும் நினை..
பூம்புகார் கரையில்
கிளிஞ்சல்கள் நீ சேர்க்க
ஆயிரம் ஆண்டாவது
இமைக்காமல் ரசிக்க வேண்டும்
ஒரு அலைக்கும் மறு அலைக்கும்
ஒரு வருடம்
இடைவெளி என்றால்
வெட்கம் விலக்கி விடு..
முதலில் எனக்குப் பிடித்த காதல் கவிதை..
உன்னில் என்னைக் கண்டேன்.. ஆகையால் தன்னையேக் காதலிக்கும் ஒரு வித்யாசமான காதலனின் காதல்..
அவள் போன பின்னும் என் மேல் கொண்ட காதலை நேசித்தேன்.. இறுதியாக
அவள் இல்லை எனும் பொழுது அந்தக் காதலை நேசிக்கிறார் கவிஞர்.. அந்த கவிதை...
யாரைக் காதலித்தேன்..
காதலி போனபின்னும்
காதலை நேசித்தேன்... என் மேல் கொண்ட
காதலை நேசித்தேன்...
மீண்டும் எனைப் புடம்போட
உலை தரும்
காதலை நேசித்தேன்...
புண்ணாக்கி பொன்னாக்கும்
அந்தப் பொல்லாக்
காதலை நேசித்தேன்....
அளவிற்கு அதிகமாய் வெட்கப்படுபவளைக் கண்டு புலம்பும் வித்யாசமான காதலன்..
அதுவும் எப்படி?
<span style='color:blue'>
பிரளயம் பிரிக்கும் வரை - உன்
இருதயம் என் பள்ளியறை
அத்தனை காலம் வேண்டும்
உன்னை ஆராதிக்க - என்
அன்பை நிரூபிக்க
'ஒரு நாள் குறையேண்டா.'
இறைவனே கேட்டாலும்
மாட்டேன் சம்மதிக்க
"என்னவளைப் பழகிப்பார்
இன்னும் நாள் கொடுப்பாய்"
வாதிடுவேன் சாதிக்க
..............
.............
............
..............
காலம் உள்ளவரை
காலம் நமக்கிருந்தால்
உன்
வெட்கம் குற்றமில்லை
</span>
வெட்கம் விலக்கிவிடு..
என்றபடியாக முடிகிறது இந்தக் க(வி)தை..
இப்படி வெட்கப்படுபவளுக்காக கவிஞர் வரிந்து கட்டி எழுதியிருப்பது சொற்பம்தான்..
இல்லையெனில் காலம் உள்ளவரை காலம் நமக்கிருந்தால் எழுதியிருப்பார் இதன் தொடர்ச்சியை..
இவரின் புறநானூற்றுக் கவிதைகள் அலாதியானது..
பூர்வாங்கமும் கெடாமல்.. எளிமையும் சிதையாமல்..
பாமரர்க்கும் புரியும் வகையில் அட்சரசுத்தமாய்.. (இதை இன்னும் தொடரலாம்)
<span style='color:blue'>
கருப்புக் கொடி
மூலம்: புலவர் கல்லாடனார்
கருப்புக்கொடி கண்டா போர் நிறுத்தினாய்
ஓ...கணவனை இழந்தவளின்
கலைந்த கூந்தல்
மகன் எங்கே
மூலம் : புலவர் காவற்பெண்டு
"புலி போர்க்களத்தில் - அது
குடிருந்த மலைக்குகை மட்டுமே வீட்டில்".
உண்மையான புரட்சித்தாய்.
வறுமையில் செம்மை
மூலம் : புலவர் மதுரைக்குமரனார்
வரகுச்சோற்றோடு வயிற்றை நிரப்பும்
கீரை இன்று குறைகிறதே.....
"மான் மேய்ந்து ஓய்ந்த மீதி"
வறுமை சொல்ல நாணம்
மூலம்: புலவர் ஆவுர் மூங்கில்கிழார்
வறுமையா யார் சொன்னது
செம்பட்டு மறைக்குமே என் மனைவி மேனி
நாணமே ஆடை
படைத்தவன் கணக்கு
மூலம்: புலவர் நன்கணியார்
ஒரு வீட்டில் சாவு மேளம்
மறு வீட்டில் மண மேளம்
இடம் மாறும் கூந்தல் பூ
</span>
இப்படியாக சங்கத்தமிழை மன்றத்தில் வளர்க்க இவர் எடுத்துக் கொண்ட பிரயத்தனங்களுக்காகவே சிலை வைக்கலாம்..
தப்பாய் இருக்கும் தன் முகம் பற்றி கவலை கவிஞருக்கு.. அதிலே அழகாய் ஓடும் வார்த்தை ஆறு..
முகம்
எப்படி வரைவது என் முகத்தை....
கண்ணாடி பார்த்தபடி....?
இடவலம் மாற்றம்...
நண்பர்கள் உணர்ந்தபடி....?
ஆனை - குருடர் கதை போல்....
அம்மா நினைத்தபடி.......?
இன்னுமா கூட்டுப்புழு.....
அவளின் கனவுப்படி.....?
சிறகின் கீழ் பாறை......
எப்படி வரைந்தாலும்
தப்பு மட்டும்
தப்பாது........
தன்னைப் பற்றிய சுயம் தேடுகிறார் கவிஞர்..
ஆதியில் ஆரம்பித்த வேட்டை..
ஆதியில் காட்டில் வேட்டை
அடுத்து கழனியில் உழவு
இன்று சூப்பர்மார்க்கெட்டில்
தள்ளுவண்டியில்.....
...............
...............
...........
வாரிசு வளர்ந்தபின்னும்
சாகாமல் இருப்பவை
மனிதனும்
திமிங்கிலமும் தான்
.............
.............
.............
...........
காட்டின் பேர் : இணையம்
களத்தின் பேர் : மன்றம்
0
எதிர்பார்ப்பு இல்லாத நண்பர் மன்றம்
இவனும் நம்மில் ஒருவன் என்னும் உள்ளம்
0
உணவு தேடி வந்தவன் உண்டபின்
உணவாகிப் போனான்
பசியோடு வந்தவன் பரிமாறுவதிலேயே
பசியாறிப் போனான்
0
களம் மாறுமா
காலம் கூறும்.
மனித வாழ்வில் தந்தை மகன் எனும் பதங்களின் கூட்டுச்சிக்கலை.. புரிதலை.. புரியாமல் போய் விட்ட பல தந்தை மகன்களுக்காக இந்தக் கவிதை.. ஓடமும் வண்டியில் ஏறும்..வண்டியும் ஓடத்தில் ஓர் நாள் ஏறும்...
ஆரமும் வட்டமும்
...........
..........
இருபத்தாறு வயதில்
அப்பா , அவள் சொல்றதுதான் சரி
அந்தக்கால ஆசாமி நீங்க
வாயை மூடிட்டு இருங்க...
.......
...........
.........
நாற்பத்தாறு வயதில்...
பெரியவன் போக்கே சரியில்ல
சின்னவன் என் பேச்சை கேக்குறதே இல்ல
பொண்ணுக்கு வந்த வரன் குழப்பமா இருக்கு
அப்பா மட்டும் இப்ப இருந்தா...
அவருக்கு தெரியாத விஷயமே இல்ல,
தெரியுமா உங்களுக்கு!
இப்படியாக ஆரம்பித்த இடத்தில் முடிக்கிறார் கவிஞர்..
அப்பாக்களுக்காக கவிஞர் எழுதிய இந்தக் கவிதை ஒரு வகையான மறைமுக துதிதான்..
மற்றொரு கவிதையில் நேரிடையாக அப்பா புகழ் பாடுகிறார்..
அப்பாயணம்..
<span style='color:blue'>
நீ எனக்கு வாங்கித் தந்த
இனிப்புகளை விட
புத்தகங்களே அதிகம்
"உன் குழந்தையை அடிக்கும்போது
ஒரு புகைப்படம் எடுக்கச்சொல்லிப் பார்"
ரஸ்ஸல் படித்து நீ எழுதியது பழைய டைரியில்
அப்படி ஒரு படமே இல்லை உன் வாழ்க்கை டைரியில்
.............
..............
..............
.............
என்னைப் பெற்றது பெருமை என்பாய்
இல்லை அப்பா
உனக்குப் பிறந்தது
நான் வாங்கி வந்த வரம்
முடிக்க முடியவில்லை........
</span>
இப்படியாக மகன் தந்தைக்கு ஆற்றும்.. என்ன எழுதி விளக்குவேன்.. இது மாதிரி சில சமயங்களில் என்னை
சில துளிகள் சிந்தவைப்பதுண்டு..
அடுத்து வேடிக்கையாய் முகத்தில் உண்மையை அடிக்கும் கவிதை..
நடராசன் நடக்கிறான்..
இரண்டு வயதில்:
-----------------------
நடராசன் நடக்கிறான்
கால் சட்டை பனியனுடன்
தாத்தா வாங்கித் தந்த
நடை வண்டி பிடித்தபடி
நடராசன் நடக்கிறான்
............
...............
..............
ஐம்பது வயதில்:
--------------------
ஏறிவிட்ட சர்க்கரையாம், பி.பியாம்.
எக்கச்சக்க கொலஸ்ட் -ராலாம்
பத்தியமாம் மாத்திரையாம்
பட்டினி கூட வைத்தியமாம்
கதைவைத் திறந்துவிட்டு காரோட்டி காத்திருக்க
கடற்கரைக் காலைக் காற்றில்
கால் சட்டை பனியனுடன்
நடராசன் நடக்கிறான்.
இது போன்ற பல கவிதைகள் இவரிடம் உண்டு..
அண்ணனின் வ(வி)சனக்கவிதை, சுட்டு விரல், துப்பார்க்கு தூவும் மழை..
ஏன் தோழி? எனும் ஒரு பெண்ணின் அவலக் கதையை நிறைய எதார்த்த சம்பவங்களோடும் கொஞ்சம் அதிர்ச்சி முடிவோடும் பதித்திருக்கிறார்..
பாதச்சுவடுகள், முடிவதை மட்டும் நினை.. தொடரும் இவரது பட்டியல்...
இளசு அவர்கள் இசைத்தது புண்களைத்தாங்கி புண்ணாகவராளி பாடும் புல்லாங்குழலின் சங்கீதம்..
அவர்கள் எழுதியது கருவேல முட்களாய் குத்திக் கிழிக்கும் கூர்மையான கவிதைகள்..