PDA

View Full Version : எப்பொழுது உன்னைக் காதலிக்கத் தொடங்கினேன



இனியவள்
25-06-2007, 06:41 AM
காதல்
அத்தனை சோகத்தையும்
துடைக்கும்
ஒற்றைக் கைக்குட்டை.

காதல்
அத்தனை கைக்குட்டைகளையும்
நனைக்கும்
ஒற்றை சோகம்

உனது
சிரிப்பை மொழிபெயர்க்கும்
கலை
வாய்த்திருந்தால்
ஆயிரம்
கவிதைத் தொகுதிகள் போட்டிருப்பேன்.

விழித்து விடக் கூடாதே
என்னும்
நினைப்பில் தூங்கப் போகிறேன்,
தூங்கவே விடாமல்
விழிக்கின்றன உன் நினைவுகள்

பிரசுரத்துக்கு அனுப்பாத
முத்தம் ஒன்று
என்னிடம் காத்திருக்கிறது.
உன் இதழ்களில் பிரசுரிக்கும் ஆசையுடன்.

அதிகாலைக் கதிரவனும்,
கை நீட்டும் கடலலையும்,
மனம் நனைக்கும் மழைச்சாரலும்,
இருள் கவிதை வான் வெளியும்
எதையும் விட
அழகானவன் நீயென்று
தோன்றிய தருணத்தில்
நான் உன்னைக் காதலிக்கத் துவங்கியிருக்கலாம்.

சூரியன்
25-06-2007, 06:49 AM
ஒவ்வொரு வரியும் அருமை

அன்புரசிகன்
25-06-2007, 06:50 AM
அதிகாலைக் கதிரவனும்,
கை நீட்டும் கடலலையும்,
மனம் நனைக்கும் மழைச்சாரலும்,
இருள் கவிதை வான் வெளியும்
எதையும் விட
அழகானவன் நீயென்று
தோன்றிய தருணத்தில்
நான் உன்னைக் காதலிக்கத் துவங்கியிருக்கலாம்.

வரிகளுண்டோ மேல் வர்ணணைக்கு.
அதிர்ஷ்டசாலி அவன்
உன் பிரசுரத்தை வாசிப்பவன்
வாழ்த்துக்கள் இனியவளே
தொடரட்டும் உங்கள் மொழிபெயர்ப்புக்கள்.

அமரன்
25-06-2007, 07:34 AM
காதல்
அத்தனை சோகத்தையும்
துடைக்கும்
ஒற்றைக் கைக்குட்டை.

காதல்
அத்தனை கைக்குட்டைகளையும்
நனைக்கும்
ஒற்றை சோகம்


என்ன முரண். காதலுக்கு ஆக்கவும் தெரியும் அழிக்கவும் தெரியும். அப்போ அதுகூட ஒரு சக்திதானே. அற்புதமான வரிகள். அன்புரசிகன் சொன்னதுபோல அந்த வரிகள் இயற்கையை ஒப்பிட்டு காதலித்த தருணத்தை அழகாகச் சொல்லி லயிக்க வைத்துவிட்டீர்கள். நன்றி இனியவள்..

இனியவள்
25-06-2007, 07:54 AM
வரிகளுண்டோ மேல் வர்ணணைக்கு.
அதிர்ஷ்டசாலி அவன்
உன் பிரசுரத்தை வாசிப்பவன்
வாழ்த்துக்கள் இனியவளே
தொடரட்டும் உங்கள் மொழிபெயர்ப்புக்கள்.

நன்றி அன்புரசிகன்

இனியவள்
25-06-2007, 07:55 AM
நன்றி அமரன்