இனியவள்
25-06-2007, 06:41 AM
காதல்
அத்தனை சோகத்தையும்
துடைக்கும்
ஒற்றைக் கைக்குட்டை.
காதல்
அத்தனை கைக்குட்டைகளையும்
நனைக்கும்
ஒற்றை சோகம்
உனது
சிரிப்பை மொழிபெயர்க்கும்
கலை
வாய்த்திருந்தால்
ஆயிரம்
கவிதைத் தொகுதிகள் போட்டிருப்பேன்.
விழித்து விடக் கூடாதே
என்னும்
நினைப்பில் தூங்கப் போகிறேன்,
தூங்கவே விடாமல்
விழிக்கின்றன உன் நினைவுகள்
பிரசுரத்துக்கு அனுப்பாத
முத்தம் ஒன்று
என்னிடம் காத்திருக்கிறது.
உன் இதழ்களில் பிரசுரிக்கும் ஆசையுடன்.
அதிகாலைக் கதிரவனும்,
கை நீட்டும் கடலலையும்,
மனம் நனைக்கும் மழைச்சாரலும்,
இருள் கவிதை வான் வெளியும்
எதையும் விட
அழகானவன் நீயென்று
தோன்றிய தருணத்தில்
நான் உன்னைக் காதலிக்கத் துவங்கியிருக்கலாம்.
அத்தனை சோகத்தையும்
துடைக்கும்
ஒற்றைக் கைக்குட்டை.
காதல்
அத்தனை கைக்குட்டைகளையும்
நனைக்கும்
ஒற்றை சோகம்
உனது
சிரிப்பை மொழிபெயர்க்கும்
கலை
வாய்த்திருந்தால்
ஆயிரம்
கவிதைத் தொகுதிகள் போட்டிருப்பேன்.
விழித்து விடக் கூடாதே
என்னும்
நினைப்பில் தூங்கப் போகிறேன்,
தூங்கவே விடாமல்
விழிக்கின்றன உன் நினைவுகள்
பிரசுரத்துக்கு அனுப்பாத
முத்தம் ஒன்று
என்னிடம் காத்திருக்கிறது.
உன் இதழ்களில் பிரசுரிக்கும் ஆசையுடன்.
அதிகாலைக் கதிரவனும்,
கை நீட்டும் கடலலையும்,
மனம் நனைக்கும் மழைச்சாரலும்,
இருள் கவிதை வான் வெளியும்
எதையும் விட
அழகானவன் நீயென்று
தோன்றிய தருணத்தில்
நான் உன்னைக் காதலிக்கத் துவங்கியிருக்கலாம்.