கலைவேந்தன்
24-06-2007, 12:23 PM
பகுதி_ஆறு
ஒருவருக்கொருவர்
குடும்பச்செய்திகளை
பரிமாறிக்கொண்டனர்..
அவள் இருந்து வரும்
நாற்றங்கால் பற்றியும்
வளரப்போகும் வயல் வெளி பற்றியும்
விசாலமான விலாசம் கண்டனர்...
இடை இடையே சிலநேரம்
இருவரது உடல்களும்
கூட்டல் கணக்காகிவிடத் துடித்தது...
ஆனாலும்
பண்பாட்டுப் பெருக்கல் தான்
இருவரது மனங்களையும்
வகுத்துச் சென்றது..
வார்த்தைச் சுகங்களாலேயே
வாழ்க்கைச் சுகங்கள் கழிந்தன...
தனிமை ஒருமுறை இவர்களைத்
தள்ளாட விட்டது உண்மை
ஆனால்................
அவளது பெண்மையும் அவனது உணமையும்
விரகத்தீயை விரட்டிவிட்டது!
காதல் பாடம் வளர்ந்து வரும்போதே
கல்லூரிப் பாடம் குறுகிவந்தது
கல்லூரிவாழ்க்கை முடியப்போவதை எண்ணி
கண் கலங்கினர்...
ஒருவர் புன்னகை மற்றவர் கண்ணீரைத் துடைத்தது...
அப்போது......
திடீரெனப் பத்து நாட்கள்
தீயென வந்தது!
ஒருவருக்கொருவர்
குடும்பச்செய்திகளை
பரிமாறிக்கொண்டனர்..
அவள் இருந்து வரும்
நாற்றங்கால் பற்றியும்
வளரப்போகும் வயல் வெளி பற்றியும்
விசாலமான விலாசம் கண்டனர்...
இடை இடையே சிலநேரம்
இருவரது உடல்களும்
கூட்டல் கணக்காகிவிடத் துடித்தது...
ஆனாலும்
பண்பாட்டுப் பெருக்கல் தான்
இருவரது மனங்களையும்
வகுத்துச் சென்றது..
வார்த்தைச் சுகங்களாலேயே
வாழ்க்கைச் சுகங்கள் கழிந்தன...
தனிமை ஒருமுறை இவர்களைத்
தள்ளாட விட்டது உண்மை
ஆனால்................
அவளது பெண்மையும் அவனது உணமையும்
விரகத்தீயை விரட்டிவிட்டது!
காதல் பாடம் வளர்ந்து வரும்போதே
கல்லூரிப் பாடம் குறுகிவந்தது
கல்லூரிவாழ்க்கை முடியப்போவதை எண்ணி
கண் கலங்கினர்...
ஒருவர் புன்னகை மற்றவர் கண்ணீரைத் துடைத்தது...
அப்போது......
திடீரெனப் பத்து நாட்கள்
தீயென வந்தது!