PDA

View Full Version : எங்கிருந்து வந்தது தோல்வி



இனியவள்
22-06-2007, 07:58 AM
எங்கிருந்து வந்தது தோல்வி

உனக்குள் நீயே போட்டதுதான்
தோல்வி

மனம் என்ற கடலுக்குள்
வேதனைக்கப்பல் மூழ்கும் போது
தோல்விப்பாதைக்குள் நீ கால் பதிக்கின்றாய்

அத்தோல்வியே உனக்கு
வெற்றியின் ஒளியை மறைக்கின்றது

முடிவுற்றது என நிமிர்துவிடு

மீண்டும் உனைத் தொடர்ந்தாள்...
தொடர்கின்றதே என முடங்கிடாதே

மானிடாசெதுக்கிய சிற்பம் அழிந்ததே தவிர
உன்கையில் இருக்கம் உளி தவறவில்லையே

சிரிப்போடு கையில் எடுக்கையில்
துணிவோடு உன் கால்கள் வெற்றி நடைபோடும்

நீதி கூறும் போது உனக்கு புரிகின்றதோ இல்லையோ
நீ போறாடிய அனுபவம் பேசும் போது
மானிடா என்றும் வெற்றி மாலை உன்கையில்....

அமரன்
22-06-2007, 08:11 AM
ஆஹா அருமையான நம்பிக்கைக்கவிதை இனியவள். தோல்விகளுக்கு முக்கிய காரணம் நாமே. அந்தத்தோல்விகளைக் கண்டு துவண்டு விடக்கூடாது. செதுக்கிய சிற்பம் அழிந்தாலும் உளி அழிவதில்லை. சிறப்பான வரி. உயர்ந்த சிந்தனை. தோல்வி எனும் இருட்டை நம்பிக்கை என்ற விளக்கால் விரட்டலாம். பாராட்டுகளும் நன்றிகளும்.

மனம் என்ற கடலுக்குள்
வேதனைக்கப்பல் மூழ்கும் போது
தோல்விப்பாதைக்குள் நீ கால் பதிக்கின்றாய்

இந்த வரிகளின் அர்த்தம் புரியவில்லை. கொஞ்சம் விளக்கமுடியுமா.

அன்புரசிகன்
22-06-2007, 08:15 AM
அத்தோல்வியே உனக்கு
வெற்றியின் ஒளியை மறைக்கின்றது

முடிவுற்றது என நிமிர்துவிடு

நெஞ்சுக்கு உரம் பாச்சும் வரிகள்.

வாழ்த்துக்கள் இனியவளே...

lolluvathiyar
22-06-2007, 08:17 AM
[ப்]
மானிடாசெதுக்கிய சிற்பம் அழிந்ததே தவிர
உன்கையில் இருக்கம் உளி தவறவில்லையே


அருமையான வாக்கியங்கள், இன்றைய இழைய சமுதாயத்துக்கு தேவையான வரிகள், தொடருங்கள் உங்கள் சேவையை

இனியவள்
22-06-2007, 08:23 AM
மனம் என்ற கடலுக்குள்
வேதனைக்கப்பல் மூழ்கும் போது
தோல்விப்பாதைக்குள் நீ கால் பதிக்கின்றாய்

இந்த வரிகளின் அர்த்தம் புரியவில்லை. கொஞ்சம் விளக்கமுடியுமா.[/QUOTE]


மனம் = கடல்
தோல்வி = கப்பல்

மனம் என்ற கடலில் தோல்வி என்கின்ற கப்பல் மூழ்கும் போது தோல்விப் பாதையில் கால் பதிக்கின்றாய் என்று பொருள் வரும் அமரன்

நன்றி உங்கள் வாழ்த்துக்கு

அமரன்
22-06-2007, 08:28 AM
மனம் = கடல்
தோல்வி = கப்பல்

மனம் என்ற கடலில் தோல்வி என்கின்ற கப்பல் மூழ்கும் போது தோல்விப் பாதையில் கால் பதிக்கின்றாய் என்று பொருள் வரும் அமரன்

நன்றி உங்கள் வாழ்த்துக்கு[/QUOTE]

நன்றி இனியவள். மூழ்கும் என்பது அழிவதைக்காட்டுகின்றது என நினைக்கின்றேன். மனம் என்ற கடலில் தோல்வி என்கிற கப்பல் மூழ்கும்போது வெற்றிப்பாதையில் நீ கால் பதிக்கின்றாய் என்று அமைத்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும் என நினைக்கின்றேன்.