PDA

View Full Version : காதலே



வசீகரன்
20-06-2007, 11:24 AM
கண்டதுமே வந்தனையோ!
கண்ணசைவில் வந்தனையோ!

கன்னியவள் நகைத்த
அக் கணத்தில்தான் வந்தனையோ!

கட்டழகில் கிறங்கிப்போய்
கருத்தினில் வந்தனையோ!

கள்ளமற்ற கோதையுளம்
கவர்ந்ததாலே வந்தனையோ!

காதருகே காரணந்தான் கதைத்திடுவாய் காதலே!

சூரியன்
20-06-2007, 11:27 AM
கண்டதுமே வந்தனையோ!
கண்ணசைவில் வந்தனையோ!

கன்னியவள் நகைத்த
அக் கணத்தில்தான் வந்தனையோ!

கட்டழகில் கிறங்கிப்போய்
கருத்தினில் வந்தனையோ!

கள்ளமற்ற கோதையுளம்
கவர்ந்ததாலே வந்தனையோ!

காதருகே காரணந்தான் கதைத்திடுவாய் காதலே!



ஒவ்வொரு வ*ரியும் அருமை தொட*ர்ந்து எழுதுங்க*ள்

அக்னி
20-06-2007, 11:36 AM
காதல் வந்தனை
நன்றாக உள்ளது...
ஒரு பார்வையில் தனக்குள் வரவேற்று,
இன்னொரு பார்வையில் எனக்குள் வந்து,
இருபார்வையில் கருத்தைக் கவர்ந்த
கவிதை
உங்கள் பெயர் போன்றே
வசீகரமாய்...

வசீகரன்
20-06-2007, 12:05 PM
நன்றி நண்பரே...!

வசீகரன்
20-06-2007, 12:07 PM
நன்றி,,,,,

அக்னி
20-06-2007, 12:11 PM
நண்பரே Quote (பின்னூட்டங்களின் வலப்புறம் கீழே பாருங்கள்) என்பதை அழுத்துவதன் மூலம் ஒருவரின் பதிவைக் குறித்துப் பின்னூட்டம் அளிக்கலாம்...

அமரன்
21-06-2007, 01:04 PM
வந்த காதலுக்கு வந்தனை செய்யும் உங்கள் கவிதை பிரமாதம்.