கலைவேந்தன்
19-06-2007, 09:07 AM
கவிஞனின் துன்பத்திற்கு
புன்னகை மருந்து பூசினாள்..
மெல்ல மெல்ல இருவரது உள்ளமும்
ஒட்டி உறவாடியது...
ஆனால்
ஒருவரை ஒருவர்
மூச்சுக்காற்றால் கூடத்
தொட்டுக்கொள்ளவில்லை
இருவருக்கும் இடையில் பண்பாடு
கை கோர்த்து உலவியது...
அவனது அர்த்தமுள்ள பார்வையை
'' இந்தப் பிறவியில் மட்டுமல்ல
வரும் பிறவி தோறும்
இருவரும் கைகோர்த்து
உலாவரவேண்டும்.....''
என்று அவள் மொழி பெயர்த்தாள்....
கடவுளுக்குச் சூட்டக் கூட
பூ வாங்கியறியாத அவன்
அவளுக்கு அழகூட்ட
பூக்கடை தோறும் மலர்களின்
விலாசம் விசாரித்தான்...
அவள் கன்னங்களின் ஒப்புமையால்
ரோஜா மலர்
அவளால் அழகு பெற்றது....
முதல் முறையாக அவன் இதயம்
ஒருகணம் நின்றது!
புன்னகை மருந்து பூசினாள்..
மெல்ல மெல்ல இருவரது உள்ளமும்
ஒட்டி உறவாடியது...
ஆனால்
ஒருவரை ஒருவர்
மூச்சுக்காற்றால் கூடத்
தொட்டுக்கொள்ளவில்லை
இருவருக்கும் இடையில் பண்பாடு
கை கோர்த்து உலவியது...
அவனது அர்த்தமுள்ள பார்வையை
'' இந்தப் பிறவியில் மட்டுமல்ல
வரும் பிறவி தோறும்
இருவரும் கைகோர்த்து
உலாவரவேண்டும்.....''
என்று அவள் மொழி பெயர்த்தாள்....
கடவுளுக்குச் சூட்டக் கூட
பூ வாங்கியறியாத அவன்
அவளுக்கு அழகூட்ட
பூக்கடை தோறும் மலர்களின்
விலாசம் விசாரித்தான்...
அவள் கன்னங்களின் ஒப்புமையால்
ரோஜா மலர்
அவளால் அழகு பெற்றது....
முதல் முறையாக அவன் இதயம்
ஒருகணம் நின்றது!