கலைவேந்தன்
19-06-2007, 09:03 AM
அன்றுவரை
பிறர் கூறிய காதல் அனுபவங்களே
அந்தக் கவிஞனின்
கவிதைகளாய்க் கருத்தரித்தது..
வாழ்வில் உணர்ந்த போது அவனுக்கு
வார்த்தைகள் திணறின...
அந்தக் கவிஞனைச் சந்திக்கும்வரை
ஆண்களைப் பொறுத்து அவள்
ஊமையாகவே இருந்தாள்...
அவளது நாணப் போர்வை
அவனது கவிதை வாளால் கிழிந்தது...
புதுப் பெண்மையுடன் அவள்
புத்துயிர்த்தாள்...
தாயின் முகவரி கண்டிடாத அவன்
முதன்முதலில்
தாயுள்ளம் அறிந்தான்....
காதலின் அர்த்தத்தை
காதலியாய் விளக்கினாள்...
மனைவியின் மகத்துவத்தை
மனத்தளவில் உணர்த்தினாள்...
ஆம்...
தாயாய் காதலியாய் மனைவியாய்
பரிணமித்தாள்...
இருவரும் தததமக்குள்
குழந்தை ஆயினர்....
தமக்குள் சிறு குடில் கட்டினர்..
உறவுகளைத் தம்முடன் ஒட்டினர்..
மனத்தளவில் அந்தக் குழந்தைகள்
குழந்தைகளை ஏந்தினர்..
மகிழ்ச்சிக் கடலினுள் நீந்தினர்...
பிறர் கூறிய காதல் அனுபவங்களே
அந்தக் கவிஞனின்
கவிதைகளாய்க் கருத்தரித்தது..
வாழ்வில் உணர்ந்த போது அவனுக்கு
வார்த்தைகள் திணறின...
அந்தக் கவிஞனைச் சந்திக்கும்வரை
ஆண்களைப் பொறுத்து அவள்
ஊமையாகவே இருந்தாள்...
அவளது நாணப் போர்வை
அவனது கவிதை வாளால் கிழிந்தது...
புதுப் பெண்மையுடன் அவள்
புத்துயிர்த்தாள்...
தாயின் முகவரி கண்டிடாத அவன்
முதன்முதலில்
தாயுள்ளம் அறிந்தான்....
காதலின் அர்த்தத்தை
காதலியாய் விளக்கினாள்...
மனைவியின் மகத்துவத்தை
மனத்தளவில் உணர்த்தினாள்...
ஆம்...
தாயாய் காதலியாய் மனைவியாய்
பரிணமித்தாள்...
இருவரும் தததமக்குள்
குழந்தை ஆயினர்....
தமக்குள் சிறு குடில் கட்டினர்..
உறவுகளைத் தம்முடன் ஒட்டினர்..
மனத்தளவில் அந்தக் குழந்தைகள்
குழந்தைகளை ஏந்தினர்..
மகிழ்ச்சிக் கடலினுள் நீந்தினர்...