கலைவேந்தன்
19-06-2007, 08:56 AM
இரண்டு நாட்கள் சந்திக்கவில்லை எனில்
இருவருமே இறந்து பிழைத்தனர்...
கண்கள் சந்திக்கும்போது
கண்ணீர்தான் சாட்சியாய்
உள்ளக்கூண்டில் ஏறி நின்றது....
அவள் வியந்தாள் இப்படி:
'' என் இதயக் கோயிலில்
இத்துனை விரைவில்
இவ்வளவு அழகாக
அன்புநீர் தெளித்து
அழகிய கவிக்கோலம்
போட்டது யார்?''
எப்போதாவது அவன் முகத்தில்
துன்பரேகை மின்னலிட்டால்
துடித்துப்போனாள் அவள்!
'' என் உள்ளக் கண்ணாடியை
உன்னிடம் ஒப்படைத்தேன்..
எச்சரிக்கைக் குறைவால்
உடைத்து விடாதே ''
கவிஞனின் இந்த வேண்டுகொள்
'' நான் உடைந்தாலும் என்றும் உடையாது
எந்தன் கண்ணாடி ''
என்ற பதிலுடன் முத்தமிட்டது!
இருவருமே இறந்து பிழைத்தனர்...
கண்கள் சந்திக்கும்போது
கண்ணீர்தான் சாட்சியாய்
உள்ளக்கூண்டில் ஏறி நின்றது....
அவள் வியந்தாள் இப்படி:
'' என் இதயக் கோயிலில்
இத்துனை விரைவில்
இவ்வளவு அழகாக
அன்புநீர் தெளித்து
அழகிய கவிக்கோலம்
போட்டது யார்?''
எப்போதாவது அவன் முகத்தில்
துன்பரேகை மின்னலிட்டால்
துடித்துப்போனாள் அவள்!
'' என் உள்ளக் கண்ணாடியை
உன்னிடம் ஒப்படைத்தேன்..
எச்சரிக்கைக் குறைவால்
உடைத்து விடாதே ''
கவிஞனின் இந்த வேண்டுகொள்
'' நான் உடைந்தாலும் என்றும் உடையாது
எந்தன் கண்ணாடி ''
என்ற பதிலுடன் முத்தமிட்டது!