கலைவேந்தன்
19-06-2007, 08:53 AM
அந்தக் கவிஞனின் கவிதை வேள்வி
அவளது
ஆர்வ நெய்யால் வளரத் தொடங்கியது...
இருவரரின் இடைவெளியும்
தளரத் தொடங்கியது...
அவளது முக விசாலம்
அவளது அக விலாசத்துடன்
அரவணைந்த ஒன்று...
கவிதைகளாலேயே அவளுக்கு
ஆபரணங்கள் அணிவித்தான்...
அகத்தில் மட்டுமல்ல
முகத்திலும் அவள் குழந்தையே!
அவளுக்குச் சிரிப்பைப் புகட்டினான்..
தனது சோகத்தை அகற்றினான்..
தனது பெருமைகளை மட்டுமல்ல
வறுமைகளையும் அவளுக்கு
அறிமுகப்படுத்தினான்...
அன்பு வார்த்தைகள் மட்டுமல்ல..
ஏழ்மை வாழ்க்கையும் எடுத்துக்கூறினான்..
அந்த
வெள்ளைச் சிரிப்புக்காரி...
உள்ளத்தை மட்டுமே வேண்டினாள்
உள்ளதை ஏற்றுக்கொண்டாள்...
அவளது
ஆர்வ நெய்யால் வளரத் தொடங்கியது...
இருவரரின் இடைவெளியும்
தளரத் தொடங்கியது...
அவளது முக விசாலம்
அவளது அக விலாசத்துடன்
அரவணைந்த ஒன்று...
கவிதைகளாலேயே அவளுக்கு
ஆபரணங்கள் அணிவித்தான்...
அகத்தில் மட்டுமல்ல
முகத்திலும் அவள் குழந்தையே!
அவளுக்குச் சிரிப்பைப் புகட்டினான்..
தனது சோகத்தை அகற்றினான்..
தனது பெருமைகளை மட்டுமல்ல
வறுமைகளையும் அவளுக்கு
அறிமுகப்படுத்தினான்...
அன்பு வார்த்தைகள் மட்டுமல்ல..
ஏழ்மை வாழ்க்கையும் எடுத்துக்கூறினான்..
அந்த
வெள்ளைச் சிரிப்புக்காரி...
உள்ளத்தை மட்டுமே வேண்டினாள்
உள்ளதை ஏற்றுக்கொண்டாள்...