PDA

View Full Version : சுமை



இனியவள்
16-06-2007, 06:39 PM
குடையும் ஒரு சுமைதான்
மழை இல்லாத போது....
பட்டமும் ஒரு சுமை தான்
வேலை இல்லாத போது...
அழகும் ஒரு சுமை தான்
ரசிகன் இல்லாத போது...
வாழ்வும் ஒரு சுமைதான்
சுவை இல்லாத போது

ஆதவா
16-06-2007, 07:12 PM
சுமைகள் கூட ஒருவகை சுமைதான் இனியவள்.
நல்ல சுவையான சுமைகள்..
முதல் வரியிலிருந்து ரசிக்க வைக்கிறீர்கள்
பாராட்டுக்கள்.

மீனாகுமார்
16-06-2007, 07:16 PM
அருமையான வரிகள் -
அச்சுமைகளும் ஓர்நாள் சுகமாகிப் போகுமே...
அப்போது அச்சுகத்தில் சுமைகள் மறைந்து போகுமே..

ஓவியன்
16-06-2007, 07:22 PM
சுமையென்று எண்ணி விட்டாலே சிறு துரும்பு கூட சுமைதான், அதை சுகமென்று எண்ணினாலே சுமை கூட சுகம் தான்.
.......................................................................................................................................................................

வரிகள் அருமை - பாராட்டுக்கள்.

அமரன்
16-06-2007, 07:45 PM
சோகங்களும் சுமைதானோ..அதுகூட காதல் வரும்போது சுகமாகுமாமே. நல்ல கவிதைக்குப்பாராட்டுகள்

கலைவேந்தன்
16-06-2007, 07:59 PM
சுமைகள் சிலசமயம் சுகங்கள்.
அவை இல்லாதபோது வாழ்வு வெறுமையும் விரக்தியுமாய்க் கழியும்!
நல்ல சுவையுள்ள கவிதை!
பாராட்டுக்கள் இனியவள்!

அமரன்
16-06-2007, 08:01 PM
சுமைகள் கூட
சுகமாகிறன
தாய்மை

சிவா.ஜி
17-06-2007, 04:43 AM
இனியவள் சுமையை வரிசைப்படுத்தியிருந்த விதம் அருமை,அதற்கு தாய்மை சுமையின் சுகத்தை கவி வடித்த அமரனின் வரிகளும் அழகு. பாராட்டுக்கள்.

namsec
17-06-2007, 04:56 AM
சுமையை சுலபமாக்கு
அச்சுமை உனக்கு
சுகமான சுமையாகும்

இனியவள்
17-06-2007, 09:33 AM
சுமைகள் கூட
சுகமாகிறன
தாய்மை

சில சமயம் சுகம் கூட சுமை
ஆகின்றன காதலில்

சுட்டிபையன்
17-06-2007, 09:36 AM
அழகான கவிதை ஜேர்மன் அக்கா :D:D

இனியவள்
17-06-2007, 09:38 AM
சுமைகள் கூட ஒருவகை சுமைதான் இனியவள்.
நல்ல சுவையான சுமைகள்..
முதல் வரியிலிருந்து ரசிக்க வைக்கிறீர்கள்
பாராட்டுக்கள்.

நன்றி ஆதவா


அருமையான வரிகள் -
அச்சுமைகளும் ஓர்நாள் சுகமாகிப் போகுமே...
அப்போது அச்சுகத்தில் சுமைகள் மறைந்து போகுமே..

சுமைகள் சுகமாகும் நாளை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்..

நன்றி மீனகுமார்

சுமையென்று எண்ணி விட்டாலே சிறு துரும்பு கூட சுமைதான், அதை சுகமென்று எண்ணினாலே சுமை கூட சுகம் தான்.
.......................................................................................................................................................................

வரிகள் அருமை - பாராட்டுக்கள்.

நன்றி ஓவியன்
மலை கூட மடு ஆகும் சுமையை சுகம் என்று நினைத்தால்

சூரியன்
17-06-2007, 09:41 AM
ஒவ்வொரு வரியும் அருமை

இனியவள்
17-06-2007, 09:41 AM
சோகங்களும் சுமைதானோ..அதுகூட காதல் வரும்போது சுகமாகுமாமே. நல்ல கவிதைக்குப்பாராட்டுகள்

நன்றி அமரன்


சுமைகள் சிலசமயம் சுகங்கள்.
அவை இல்லாதபோது வாழ்வு வெறுமையும் விரக்தியுமாய்க் கழியும்!
நல்ல சுவையுள்ள கவிதை!
பாராட்டுக்கள் இனியவள்!

நன்றி கலை வேந்தன்


இனியவள் சுமையை வரிசைப்படுத்தியிருந்த விதம் அருமை,அதற்கு தாய்மை சுமையின் சுகத்தை கவி வடித்த அமரனின் வரிகளும் அழகு. பாராட்டுக்கள்.

நன்றி சிவா.ஜி

இனியவள்
17-06-2007, 09:42 AM
அழகான கவிதை ஜேர்மன் அக்கா :D:D

நன்றி சுட்டி அது சரி சுட்டி ஜேர்மன் எங்கை இருக்கு இலங்கைக்கு பக்கத்தில தெரிஞ்சா ஒருக்க சொல்லுங்க எனக்கும் :D

சுட்டிபையன்
17-06-2007, 09:56 AM
நன்றி சுட்டி அது சரி சுட்டி ஜேர்மன் எங்கை இருக்கு இலங்கைக்கு பக்கத்தில தெரிஞ்சா ஒருக்க சொல்லுங்க எனக்கும் :D

நீங்க இருக்க இடம்தான்:062802sleep_prv: