மயூ
13-06-2007, 07:07 AM
கடவுளின் அற்புதப் படைப்புகள் பல பல இவ்வுலகில் இருக்கின்றது. இப்படியான அற்புதப் படைப்புகளில் ஒன்றுதான் இந்தப் புத்தகங்கள். எனக்கும் புத்தகங்களுக்கும் இடையில் ஒரு இனம் புரியாத பிணைப்பு சிறுவயது முதலே இருந்து வந்துள்ளது என்பது வரலாறு. நான் சிறு வயதில் அம்மாவை அதிகமாக புத்தகங்கள் வாங்கித்தரச் சொல்லித்தான் அடம் பிடிப்பேனாம் :). இங்கே நான் வாசித்த புத்தகங்கள் சில பற்றியும் என் தனிப்பட்ட அனுபவங்கள் பற்றியும் ஏழுதுகின்றேன்.
எல்லாக் குளந்தைகளைப் போலவும் நானும் சிறுவயதில் அம்மா, அப்பா, சித்தி கதை சொல்லக் கேட்டுப் பின்னர் அதனால் உந்தப் பட்டு சிறு சிறு படம் பார் கதை படி புத்தகங்களைப் படித்து வந்தவன்தான். இதன் பின்னர் அம்புலிமாமா, பாலமித்ரா என்று ஒரு படி மேலே போனேன். பாலமித்ராவில் மினிநாவல் என்று ஒரு கதை வரும் அதைத் தவறாமல் படித்துவிடுவேன்.
இதன் பின்னர் ராணிக் காமிக்ஸ், லயன் காமிக்ஸ் என்று சித்திரக் கதைப் புத்தகங்கள் பார் ஒரு ஈர்ப்பு வந்தது. அதிகளவில் பிடித்த கதைகள் என்றால் இரத்தப்படலம், கெள பாய் கதைகள் என்பனவே. இதே வேளையில் வாண்டு மாமா, பாலு 007 போன்ற கதைகளையும் வாசித்ததுண்டு. சுமார் 10 வயது இருக்கும் போது பொன்னியின் செல்வன் வாசிக்க முயற்சி செய்தேன். கதை அடியோடு விளங்காமல் போனதும் புத்தகத்தை தூக்கி ராக்கையில் போட்டுவிட்டேன். http://mayuonline.com/blog/wp-includes/images/smilies/icon_smile.gif
11ம் வகுப்பு வரை பெரும்பாலும் சிறுவர் கதைகளையே வாசித்து வந்தேன். இப்போ நினைத்தாலும் சிரிப்பு வருகின்றது.. அதாவது 16 வயது வரைக்கும் சிறுவர் கதைகள் வாசித்து இருக்கின்றேன். http://mayuonline.com/blog/wp-includes/images/smilies/icon_wink.gif
இதன் பிறகு தமிழ் வாணனின் துப்பறியும் கதைகளுக்கு அடிமையாகி அவர் எழுதின புத்தகங்களைத் தேடித் தேடிப் படித்தேன். புத்தக சாலையில் நான் படிக்காத தமிழ்வாணணின் புத்தகங்களே இல்லை என்னுமளவிற்கு அனைத்துப் புத்தகங்களையும் வீட்டுக்கு எடுத்துச் சென்று வாசித்தேன்.
தமிழ் வாணனின் புத்தகங்கள் முடிந்து விடவே ருசி விடாமல் போக ராஜேஷ் குமாரின் புத்தகங்களை வாசித்தேன். ஆக உருப்படியாக எந்தப் புத்தகமும் வாசிக்காமல் இந்தத் துப்பறியும் நாவல்களில் கிட்டத்தட்ட இரண்டாண்டுகள் காலம் கழித்தேன். இதைவிட ஆனந்தவிகடனில் வந்த சில தொடர் கதைகளையும் வாசித்தேன்.
இதன் பின்னர் உயர்தரப் பரீட்சைகள் வர கதைப் புத்தக வரலாறு ஓய்ந்துவிட்டது. 2002 ல் உயர்தரம் மீண்டும் எடுப்பதற்காக யாழ்ப்பாணம் சென்றேன். அங்கே 60 களில் அம்மா வாசித்த பொன்னியின் செல்வன் புத்தகம் கிடைத்தது. அதை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். அப்போதுதான் கல்கியின் எழுத்தின் மீது காதல் வந்தது. வாசிக்க வாசிக்க அந்த உலகில் நான் வாழ்வது போல உணர்ந்தேன். ஏதோ நானே போர்க்களத்தில் போராடியதாக உணர்ந்தேன். இப்போதும் அடித்துச் சொல்கின்றேன், பொன்னியின் செல்வனுக்கு நிகராக யாரும் இதுவரை கதை எழுதவில்லை. எங்கள் அம்மா வீட்டில் அனைவரும் பொன்னியின் செல்வன் இரசிகர்கள். நானும் அதே இரத்தம் தானே அதுதான் கடைசியல் நானும் ஒரு பொன்னியின் செல்வன் இரசிகனாகிவிட்டேன்.
பொன்னியின் செல்வன் வாசிக்க முன்னரே பார்த்தீபன் கனவு, சிவகாமியின் சபதம் என்பவற்றை வாசித்து இருந்ததால் பொன்னியின் செல்வன் கதையைப் புரிந்துகொள்ள எந்தக் கஷ்டமும் இருக்கவில்லை. உலகத் தமிழர் அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகங்களில் ஒன்று. தற்போது ஆங்கிலத்திலும் உள்ளதென்று நினைக்கின்றேன்.
இதன் பின்னர் பல தமிழ் புத்தகங்கள் வாசித்தாலும் சொல்லிக்கொள்ளும் படியாக எந்தப் புத்தகமும் ஞாபகத்தில் இல்லை. இனி நானும் ஆங்கிலப் புத்தகங்களும் எப்படி நண்பர்களானோம் என்று பார்ப்போம்.
சிறு வயதில் உறவினர் ஒருவர் வாசித்துச் சொல்ல வாயைப் பிளந்து கொண்டு கேட்ட கதை என்றால் அது டின் டின் கதைதான். ஆனால் நான் பல தடவை வாசிக்க முயன்றாலும் எனக்கு விளங்கவில்லை காரணம் ஆங்கிலம் மட்டம். ஆயினும் பின்னர் 15 அல்லது 16 வயதளவில் சில இலகுவாக்கப்பட் ஆங்கிலப் புத்தகங்களின் பதிப்புகளை வாசிக்கத் தொடங்கினேன். இதில் நான் வாசித்ததுதான் ஒலிவர் டுவிஸ்ட், டேவிட் கொப்பர் ஃபீல்ட், வூத்தரிங் கெயித்ஸ், ஜேன் அயர், டொம் சோயர் போன்றவை. இவற்றில் பெரும்பாலானவை ஆங்கில கிளாசிக் கதைகளே. இதன் பின்னர் எனிட் பிளைட்டனின் புத்தகங்கள் பால் ஆர்வம் திரும்பத் தொடங்கியது. அவர் எழுதிய நாவல்கள் மற்றும் ஃபேமஸ் ஃபைவ், சீக்ரட் செவன் புத்தகங்களை வாசித்துத் தள்ளினேன்.
பல்கலைக் கழகம் வரும்வரை இந்த சிறுவர் நாவல் வாசிக்கும் பழக்கம் விட வில்லை. முதற்காரணம் ஆங்கில நாவல்களை வாசிக்க ஆங்கில அறிவு பற்றாமையே.
பல்கலைக் கழகம் வந்தபின்னர் நான் கொழும்பு வந்தேன். அப்போது தற்செயலாக ஒரு ஹரிப் பொட்டர் புத்தகம் வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போதுதான் எனக்குப் புரிந்தது. அடே மயூரேசா உனக்கு ஆங்கில நாவல்கள் வாசிக்க முடியுமடா என்பது. பின்னர் என்ன ஹரி பொட்டர் இரசிகர் ஆனதுடன் ஹரி பொட்டர் புத்தகங்கள் அனைத்தையும் வாசித்துத் தள்ளிவிட்டேன். இதன் பின்னர்தான் ஹரி வெறியனாகி ஹரி பொட்டர் புத்தகங்கள் பற்றி விமர்சனங்களும் எழுதத் தொடங்கினேன்.
ஆனாலும் அந்த எழுத்தாளர் ரெளலிங் இருக்கிறாறே சொல்லி வேலையில்லை. அத்தனை திறமையான எழுத்தாளர். கற்பனையை எப்படி நிஜத்துடன் கோர்த்து நிசமாகக் காட்டுவது என்பதை அறிந்து அதன்படி கதை எழுதித் தள்ளியுள்ளர். இனி ஜூலையில் கடைசிப் புத்தகம் வரும்வரை காத்திருக்க வேண்டியதுதான். பார்ப்போம் கதை என்ன ஆகின்றது என்று.
ஹரி பொட்டருக்கு அப்பால் நான் வாசித்த ஆங்கில நாவல் என்றால் டான் பிரவுணின் சில புத்தகங்கள். முதலாவது டா வின்சி கோடு, அடுத்து ஏஞ்சல்ஸ் அன்ட் டீமென்ஸ். இதன் பின்னர் மூண்றாவதாக டிசெப்சன் பொயின்ட் புத்தகத்தை வாசித்தேன் ஒரே அலட்டல்.. அலுப்படிக்கவே புத்தகத்தை தூக்கி மூலையில் போட்டுவிட்டேன். டான் பிரவுணின் புத்தகத்தை வாசிக்கும் போது புரியம் ஆங்கில ஆசிரியர்கள் கதை எழுதுவதற்காக எவ்வளவு ஆராய்ச்சிகள் செய்கின்றார்கள் என்பது. நல்ல உதாரணம் டான் பிரவுண்தான்.. அரசியல், நுட்பம், அறிவியல், புவியியல், வரலாறு என்று அனைத்துத் துறைத் தகவல்களையும் அவரது நாவலில் போட்டுத் தூளாவியிருப்பார். விரைவில் இவர் எழுதிய டிஜிட்டல் ஃபோட்ரஸ் வாசிக்கும் எண்ணம் உள்ளது.
தற்போது வாசித்துக் கொண்டு இருப்பது சிட்னி ஷெல்டனின் புத்தகம் ஒன்று. மாஸ்டர் ஒப் த கேம். கதை சொல்லி வேலையில்லை. இந்த எழுத்தாளர் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கின்றேன். அண்மையில் காலமாகிவிட்டாலும் இவரின் எழுத்துக்கள் காலா காலத்திற்கு நிலைத்திருக்கும் என்பதில் ஐயம் இல்லை. ஒரு பெண்ணின் கதையை அருமையாக மெல்ல மெல்ல ஆரம்பித்து எழுதி வருகின்றமை சிறப்பு. திடீரென கதை ஓரிடத்தில் தொடங்காமல் மெல்ல மெல்ல பழைய காலத்தில் இருந்து தொடங்குகின்றது. வாசித்து முடிந்ததும் வலைப்பதிவில் வரிவான விமர்சனம் போடுகின்றேன்.
சில புத்தகங்களை இங்கே தவற விட்டிருக்காலாம் ஆனாலும் இவைதான் என் நினைவில் நீங்கா இடம் பிடித்த புத்தகங்கள். இத்துடன் என் சுய புராணத்தை முடித்துக்கொள்கின்றேன். நீங்கள் ரசித்த புத்தகம் ஏதும் இருந்தால் பின்னூட்டத்தில் விட்டுச் செல்லுங்களேன்.
எல்லாக் குளந்தைகளைப் போலவும் நானும் சிறுவயதில் அம்மா, அப்பா, சித்தி கதை சொல்லக் கேட்டுப் பின்னர் அதனால் உந்தப் பட்டு சிறு சிறு படம் பார் கதை படி புத்தகங்களைப் படித்து வந்தவன்தான். இதன் பின்னர் அம்புலிமாமா, பாலமித்ரா என்று ஒரு படி மேலே போனேன். பாலமித்ராவில் மினிநாவல் என்று ஒரு கதை வரும் அதைத் தவறாமல் படித்துவிடுவேன்.
இதன் பின்னர் ராணிக் காமிக்ஸ், லயன் காமிக்ஸ் என்று சித்திரக் கதைப் புத்தகங்கள் பார் ஒரு ஈர்ப்பு வந்தது. அதிகளவில் பிடித்த கதைகள் என்றால் இரத்தப்படலம், கெள பாய் கதைகள் என்பனவே. இதே வேளையில் வாண்டு மாமா, பாலு 007 போன்ற கதைகளையும் வாசித்ததுண்டு. சுமார் 10 வயது இருக்கும் போது பொன்னியின் செல்வன் வாசிக்க முயற்சி செய்தேன். கதை அடியோடு விளங்காமல் போனதும் புத்தகத்தை தூக்கி ராக்கையில் போட்டுவிட்டேன். http://mayuonline.com/blog/wp-includes/images/smilies/icon_smile.gif
11ம் வகுப்பு வரை பெரும்பாலும் சிறுவர் கதைகளையே வாசித்து வந்தேன். இப்போ நினைத்தாலும் சிரிப்பு வருகின்றது.. அதாவது 16 வயது வரைக்கும் சிறுவர் கதைகள் வாசித்து இருக்கின்றேன். http://mayuonline.com/blog/wp-includes/images/smilies/icon_wink.gif
இதன் பிறகு தமிழ் வாணனின் துப்பறியும் கதைகளுக்கு அடிமையாகி அவர் எழுதின புத்தகங்களைத் தேடித் தேடிப் படித்தேன். புத்தக சாலையில் நான் படிக்காத தமிழ்வாணணின் புத்தகங்களே இல்லை என்னுமளவிற்கு அனைத்துப் புத்தகங்களையும் வீட்டுக்கு எடுத்துச் சென்று வாசித்தேன்.
தமிழ் வாணனின் புத்தகங்கள் முடிந்து விடவே ருசி விடாமல் போக ராஜேஷ் குமாரின் புத்தகங்களை வாசித்தேன். ஆக உருப்படியாக எந்தப் புத்தகமும் வாசிக்காமல் இந்தத் துப்பறியும் நாவல்களில் கிட்டத்தட்ட இரண்டாண்டுகள் காலம் கழித்தேன். இதைவிட ஆனந்தவிகடனில் வந்த சில தொடர் கதைகளையும் வாசித்தேன்.
இதன் பின்னர் உயர்தரப் பரீட்சைகள் வர கதைப் புத்தக வரலாறு ஓய்ந்துவிட்டது. 2002 ல் உயர்தரம் மீண்டும் எடுப்பதற்காக யாழ்ப்பாணம் சென்றேன். அங்கே 60 களில் அம்மா வாசித்த பொன்னியின் செல்வன் புத்தகம் கிடைத்தது. அதை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். அப்போதுதான் கல்கியின் எழுத்தின் மீது காதல் வந்தது. வாசிக்க வாசிக்க அந்த உலகில் நான் வாழ்வது போல உணர்ந்தேன். ஏதோ நானே போர்க்களத்தில் போராடியதாக உணர்ந்தேன். இப்போதும் அடித்துச் சொல்கின்றேன், பொன்னியின் செல்வனுக்கு நிகராக யாரும் இதுவரை கதை எழுதவில்லை. எங்கள் அம்மா வீட்டில் அனைவரும் பொன்னியின் செல்வன் இரசிகர்கள். நானும் அதே இரத்தம் தானே அதுதான் கடைசியல் நானும் ஒரு பொன்னியின் செல்வன் இரசிகனாகிவிட்டேன்.
பொன்னியின் செல்வன் வாசிக்க முன்னரே பார்த்தீபன் கனவு, சிவகாமியின் சபதம் என்பவற்றை வாசித்து இருந்ததால் பொன்னியின் செல்வன் கதையைப் புரிந்துகொள்ள எந்தக் கஷ்டமும் இருக்கவில்லை. உலகத் தமிழர் அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகங்களில் ஒன்று. தற்போது ஆங்கிலத்திலும் உள்ளதென்று நினைக்கின்றேன்.
இதன் பின்னர் பல தமிழ் புத்தகங்கள் வாசித்தாலும் சொல்லிக்கொள்ளும் படியாக எந்தப் புத்தகமும் ஞாபகத்தில் இல்லை. இனி நானும் ஆங்கிலப் புத்தகங்களும் எப்படி நண்பர்களானோம் என்று பார்ப்போம்.
சிறு வயதில் உறவினர் ஒருவர் வாசித்துச் சொல்ல வாயைப் பிளந்து கொண்டு கேட்ட கதை என்றால் அது டின் டின் கதைதான். ஆனால் நான் பல தடவை வாசிக்க முயன்றாலும் எனக்கு விளங்கவில்லை காரணம் ஆங்கிலம் மட்டம். ஆயினும் பின்னர் 15 அல்லது 16 வயதளவில் சில இலகுவாக்கப்பட் ஆங்கிலப் புத்தகங்களின் பதிப்புகளை வாசிக்கத் தொடங்கினேன். இதில் நான் வாசித்ததுதான் ஒலிவர் டுவிஸ்ட், டேவிட் கொப்பர் ஃபீல்ட், வூத்தரிங் கெயித்ஸ், ஜேன் அயர், டொம் சோயர் போன்றவை. இவற்றில் பெரும்பாலானவை ஆங்கில கிளாசிக் கதைகளே. இதன் பின்னர் எனிட் பிளைட்டனின் புத்தகங்கள் பால் ஆர்வம் திரும்பத் தொடங்கியது. அவர் எழுதிய நாவல்கள் மற்றும் ஃபேமஸ் ஃபைவ், சீக்ரட் செவன் புத்தகங்களை வாசித்துத் தள்ளினேன்.
பல்கலைக் கழகம் வரும்வரை இந்த சிறுவர் நாவல் வாசிக்கும் பழக்கம் விட வில்லை. முதற்காரணம் ஆங்கில நாவல்களை வாசிக்க ஆங்கில அறிவு பற்றாமையே.
பல்கலைக் கழகம் வந்தபின்னர் நான் கொழும்பு வந்தேன். அப்போது தற்செயலாக ஒரு ஹரிப் பொட்டர் புத்தகம் வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போதுதான் எனக்குப் புரிந்தது. அடே மயூரேசா உனக்கு ஆங்கில நாவல்கள் வாசிக்க முடியுமடா என்பது. பின்னர் என்ன ஹரி பொட்டர் இரசிகர் ஆனதுடன் ஹரி பொட்டர் புத்தகங்கள் அனைத்தையும் வாசித்துத் தள்ளிவிட்டேன். இதன் பின்னர்தான் ஹரி வெறியனாகி ஹரி பொட்டர் புத்தகங்கள் பற்றி விமர்சனங்களும் எழுதத் தொடங்கினேன்.
ஆனாலும் அந்த எழுத்தாளர் ரெளலிங் இருக்கிறாறே சொல்லி வேலையில்லை. அத்தனை திறமையான எழுத்தாளர். கற்பனையை எப்படி நிஜத்துடன் கோர்த்து நிசமாகக் காட்டுவது என்பதை அறிந்து அதன்படி கதை எழுதித் தள்ளியுள்ளர். இனி ஜூலையில் கடைசிப் புத்தகம் வரும்வரை காத்திருக்க வேண்டியதுதான். பார்ப்போம் கதை என்ன ஆகின்றது என்று.
ஹரி பொட்டருக்கு அப்பால் நான் வாசித்த ஆங்கில நாவல் என்றால் டான் பிரவுணின் சில புத்தகங்கள். முதலாவது டா வின்சி கோடு, அடுத்து ஏஞ்சல்ஸ் அன்ட் டீமென்ஸ். இதன் பின்னர் மூண்றாவதாக டிசெப்சன் பொயின்ட் புத்தகத்தை வாசித்தேன் ஒரே அலட்டல்.. அலுப்படிக்கவே புத்தகத்தை தூக்கி மூலையில் போட்டுவிட்டேன். டான் பிரவுணின் புத்தகத்தை வாசிக்கும் போது புரியம் ஆங்கில ஆசிரியர்கள் கதை எழுதுவதற்காக எவ்வளவு ஆராய்ச்சிகள் செய்கின்றார்கள் என்பது. நல்ல உதாரணம் டான் பிரவுண்தான்.. அரசியல், நுட்பம், அறிவியல், புவியியல், வரலாறு என்று அனைத்துத் துறைத் தகவல்களையும் அவரது நாவலில் போட்டுத் தூளாவியிருப்பார். விரைவில் இவர் எழுதிய டிஜிட்டல் ஃபோட்ரஸ் வாசிக்கும் எண்ணம் உள்ளது.
தற்போது வாசித்துக் கொண்டு இருப்பது சிட்னி ஷெல்டனின் புத்தகம் ஒன்று. மாஸ்டர் ஒப் த கேம். கதை சொல்லி வேலையில்லை. இந்த எழுத்தாளர் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கின்றேன். அண்மையில் காலமாகிவிட்டாலும் இவரின் எழுத்துக்கள் காலா காலத்திற்கு நிலைத்திருக்கும் என்பதில் ஐயம் இல்லை. ஒரு பெண்ணின் கதையை அருமையாக மெல்ல மெல்ல ஆரம்பித்து எழுதி வருகின்றமை சிறப்பு. திடீரென கதை ஓரிடத்தில் தொடங்காமல் மெல்ல மெல்ல பழைய காலத்தில் இருந்து தொடங்குகின்றது. வாசித்து முடிந்ததும் வலைப்பதிவில் வரிவான விமர்சனம் போடுகின்றேன்.
சில புத்தகங்களை இங்கே தவற விட்டிருக்காலாம் ஆனாலும் இவைதான் என் நினைவில் நீங்கா இடம் பிடித்த புத்தகங்கள். இத்துடன் என் சுய புராணத்தை முடித்துக்கொள்கின்றேன். நீங்கள் ரசித்த புத்தகம் ஏதும் இருந்தால் பின்னூட்டத்தில் விட்டுச் செல்லுங்களேன்.