PDA

View Full Version : வலி கொண்ட மெளனங்கள்



இனியவள்
10-06-2007, 05:57 PM
இரவின் மெளனத்தை
கலைத்து விடுகிறது
சலசலக்கும் தென்னங்கீற்று

ஆழ்கடலின் மெளனத்தை
கலைத்து விடுகிறது
ஆர்ப்பரிக்கும் அலைகள்

பூக்களின் மெளனத்தை
கலைத்து விடுகிறது
அவசரக் காற்று

எப்போதும் எங்கேனும்
சில அழகிய மெளனங்கள்
கலைக்கப் படுகின்றன
அறியாத காரணங்களுடன்

அமரன்
10-06-2007, 07:02 PM
இரவின் மெளனத்தை
கலைத்து விடுகிறது
சலசலக்கும் தென்னங்கீற்று

அதனால் வரும் தென்றல்காற்று சுகமானது...


ஆழ்கடலின் மெளனத்தை
கலைத்து விடுகிறது
ஆர்ப்பரிக்கும் அலைகள்

அலை இல்லாத கடலில் ஏது அழகு.


பூக்களின் மெளனத்தை
கலைத்து விடுகிறது
அவசரக் காற்று

அதனால்தானோ பூக்கள் சுகந்தம் பரப்புகின்றன.


எப்போதும் எங்கேனும்
சில அழகிய மெளனங்கள்
கலைக்கப் படுகின்றன
அறியாத காரணங்களுடன்
அறியாத காரணத்துடன் கலைக்கப்பட்ட மௌனங்களில் சுகம் இருக்கின்றதே. கலைப்பதில் தப்பில்லை.

சிவா.ஜி
11-06-2007, 04:23 AM
மௌனமாய் இருந்தால் மனதறிய முடியாது.
மலருக்கும்,கடலுக்கும்,இரவுக்கும்
மௌனம் கலைவது அழகெனில்
மனிதனுக்கும் அதுவே.
அழகான கவிதை. பாராட்டுக்கள்.