PDA

View Full Version : உன் நினைவுகள்



இனியவள்
10-06-2007, 05:52 PM
என்னை நான் மறந்தாலும் உன்னை
நான் மறக்க மாட்டேன்
உன்னை நான் மறந்தால்
என் உயிர் இந்த மண்ணை மறந்து இருக்கும்
உன் நினைவுகள் தான் என்னில்
இன்னும் உயிரோட்டமாய்
நான் உயிர் வாழக் காரணம்
கனவிலும் நினைவிலும்
உன்னை நான் நினைத்திருப்பேன் என்றாவது
ஒரு நாள் உன்னை நான் மறந்திருப்பேன்
அன்று நான் இறந்து இருப்பேன்
அப்பொழுதும் கல்லைறையில் உன்
வருகைக்காகக் காத்திருப்பேன்....!!

இளசு
11-06-2007, 11:26 PM
இறந்தால் மட்டுமே மறப்பேன்
இறந்தும் காத்திருப்பேன்...

அமரக்காதல்
அபூர்வக்காதல்..

வாழ்த்துகள் இனியவள் அவர்களின் கவிதைக்கு!

ஆதவா
13-06-2007, 07:02 AM
சகோதரி,
கவிதைக்கு ஒத்துக் கொள்ளும் வரிகள்
வாழ்வுக்கு ஒவ்வா வரிகள்.
உயிரோட்டம் சிதைவது காதல் என்ற காரணத்தில் இருக்கக் கூடாது.
காதல், வாழ்வைத் தர போராடுவதில்லை.. அதைச் செய்ய காதலர்கள் உண்டு.
ஆனால் காதல் வாழ்வைக் கெடுக்க முனைவதில்லை.

காத்திருத்தல் அவசியம் இங்கே.. சிலர் காதலோடு காத்திருப்பை மகிழ்வோடு ஏற்றுக் கொள்கிறார்கள். காதல் கவிதை எழுதும் பெரும்பாலோனோர் தன் மனைவியை காத்லியாக உருவகப் படுத்துகிறார்களா? பெயரலவிலாவது?

கல்லறைகள் வெறும் உயிர்ச் சில்லறைகள்
கல் அறைகளில்.... காதல் எனும் பாடத்தினில்...
ஒருபோதும் அது சொல்லாது கொல்லுதல் கல்லலில் உண்டு என்று..

இனியவள்
16-06-2007, 03:58 AM
இறந்தால் மட்டுமே மறப்பேன்
இறந்தும் காத்திருப்பேன்...

அமரக்காதல்
அபூர்வக்காதல்..

வாழ்த்துகள் இனியவள் அவர்களின் கவிதைக்கு!

நன்றி இளசு
இறந்தும் மரணிக்காதது காதல் மட்டும் தானே