PDA

View Full Version : அன்புத் தாய்



இனியவள்
09-06-2007, 09:08 PM
ஈரைந்து மாதங்கள் சுமந்து
ஈன்று எம்மை வளர்த்தவள்
சுமையென்று எண்ணாமல்
சுகமென்று நினைத்தவள்
பாசத்திற்கு குறைவில்லை
பார்ப்பதிலும் வேறுபாடிலில்லை
ஊண் உறக்கம் மறந்து எம்மை
உயிரைப்போல் காப்பவள்
பேணி வளர்த்திட்ட எம்மில்
பேரின்பம் அடைபவள்...

சிவா.ஜி
10-06-2007, 07:56 AM
இந்த உலகில் தனியாய் பிறந்து எப்படி வளர்வேன் என்று கவலைப்பட்டுக்கேட்ட சிசுவுக்காக, இறைவன் படைத்த ஒரு தேவதைதான் தாய். அந்த தேவதைக்கு உங்கள் பாமாலை அருமை. பாராட்டுக்கள் தோழி.

ஆதவா
10-06-2007, 08:03 AM
முந்நூறு நாட்களில் எத்தனை எத்தனை துன்பங்கள் இனியவள்.?? சொல்லமுடியாத வேதனை... மூந்நூற்றியொன்றாம் நாள் மகிழ்ச்சியில் தொலைந்துபோகும் வேதனைகள்... அம்மா என்பது எளிதில் கிட்டாது. உயிரை உடலில் தாங்கி வேதனையை சிரிப்பில் தாங்கி அவர் படுத்தும்பாடு.... அப்பப்பா...

மாதராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா./..