PDA

View Full Version : தமிழகமே என் தாய்வீடே...



கலைவேந்தன்
09-06-2007, 06:52 AM
தமிழகமே என் தாய்வீடே...



உன்னைவிட்டு வெகு தூரம் நான்

மனத்தால் அல்ல...

உடலால் மட்டுமே!

உன்னைக்குத்தி ரணமாக்கும்

உன்மத்தர்களைப் பதம் பார்க்க

உள்ளம் குறுகுறுக்கிறது...

கை கால் விலங்கிட்ட

மனோகரனின் நிலைதான்...

என் தாயின் பெரும்புதல்வன்

எம் தலைவன் பாரதி

எள்ளப் படுகிறான் சில

எருமைக்கூட்டங்களால்...

உயிருடன் இருக்கும் போதே அவனை

உணராத சில கூட்டம்

உறைந்துவிட்ட பின் தானா

உயிர்ப்பிக்கப் போகிறது......?

முதலைக்கண்ணீர் வடிக்கும் சில கூட்டம்

சிவனை உச்சரித்து சீவனை வதைக்கிறது...

இனப்பெயரைச் சொல்லிச் சொல்லி

இனிதாய்ச் சுரண்டும் ஒரு கூட்டம்!

சட்டசபைக்குள் இறங்கி

மீன் பிடிக்கும் ஒரு கூட்டம்!

எத்தனைப் பேய்களடா

இந்தத் தமிழ் வேம்பு மரத்தின் மேல்!

பேயோட்ட வேண்டிய இளம்குருத்துகள்

திரிஷாவின் தொப்புளில்

திரிசங்கு காணும் அவலம்!

வந்தவனை எல்லாம் வாழவைத்து

இருந்தவனை ஏமாளியாக்கும்

இருதலைக் கொள்ளி எறும்பாய்

என் இனிய தமிழகம்!

ஓவியன்
17-06-2008, 02:58 PM
கலை எப்போதுமே தீமைகளே
தொடர்ந்து நடந்து கொண்டிருக்காது
காற்றும் திசை மாறித்தானக வேண்டும்..
காற்று திசை மாறி சாதகமாகையில்
தூற்ற வேண்டியதை தூற்றி முடித்திட வேண்டும்
அதுதான் நம் கடமை
அதற்காக உழைப்போம்...

வாழ்த்துக்களுடன்
- ஓவியன்.

அனுராகவன்
17-06-2008, 03:07 PM
அருமையான கவி!..
சிறப்பாக உள்ளது!!..

கலைவேந்தன்
17-06-2008, 03:40 PM
கலை எப்போதுமே தீமைகளே
தொடர்ந்து நடந்து கொண்டிருக்காது
காற்றும் திசை மாறித்தானக வேண்டும்..
காற்று திசை மாறி சாதகமாகையில்
தூற்ற வேண்டியதை தூற்றி முடித்திட வேண்டும்
அதுதான் நம் கடமை
அதற்காக உழைப்போம்...

வாழ்த்துக்களுடன்
- ஓவியன்.

தங்கள் வாழ்த்துகள் என்றும் நினைவில் வைப்பேன் ஓவியன்!


அருமையான கவி!..
சிறப்பாக உள்ளது!!..

உங்கள் வாழ்த்துகள் என்றும் வேண்டும் அனு!

ஆதவா
19-06-2008, 12:29 PM
உங்கள் ஆதங்கம் புரிகிறது க.வேந்தன். கீழ்த்தரமான நிலைக்குச் சென்றுவிடுமோ என்ற அச்சம் எனக்கும் இருக்கிறது.........

கவிதையின் தாக்கத்தில்
ஆதவன்

சிவா.ஜி
19-06-2008, 12:37 PM
உண்மையான ஆதங்கம். மாறவேண்டும்....முடிந்தால் மாற்ற முயலவேண்டும். ஓவியன் சொன்னதைப்போல நல்ல மாற்றங்களை எதிர்பார்ப்போம்.
கவிதைவரிகள் அருமை. அது சொல்லும் உண்மை அசிங்கம். வாழ்த்துகள் கலைவேந்தன்.

கலைவேந்தன்
22-06-2008, 03:50 PM
நண்பர்களின் பாராட்டுக்கள் கண்டு அகமகிழ்ந்தேன்!