Welcome to the தமிழ் மன்றம்.காம்.
  • முன் வாசல் RSS Feed

    1. Categories:
    2. CMS,
    3. Article

    இனியவரே,

    உங்களை தமிழ் மன்றம் உங்களை வரவேற்கிறது.

    உங்கள் வருகை பயனுடையதாகட்டும்.

    தமிழ் மன்றம் குறித்த உங்கள் சந்தேகங்களை கேட்க தயங்க வேண்டாம்.
    Published on 08-05-2012 11:28 AM     Number of Views: 28 

    அன்பிற்கினிய உறவுகள் அனைவருக்கும் வணக்கம்,

    பத்தாவது ஆண்டில் நம் மன்றத்தாய் தன் பொற்பாதங்களை எடுத்து வைத்திருக்கும் இத்தருணத்தில், பத்தாவது ஆண்டை மேலும் சிறப்பிப்பது நம் ஒவ்வொருவரின் கடமை என கருத்துகிறோம்

    இப்பத்தாவது ஆண்டை ஒவ்வொருவரின் மனத்திலும் நன்னிகழ்வுகளால் நிரப்பி, மன்றத்தை விழாக்கோலம் பூண செய்ய மாதந்தோறும் சிறப்பு போட்டிகள் நடக்கும் என்பதை பேருவகையோடு கூறிக்கொள்கிறோம்

    அந்த வரிசையில் முதலாவது நிகழ்வாக இம்மாதம் புகைப்பட போட்டி நடக்கவிருக்கிறது

    போட்டிக்கான தலைப்பு "நேசம்"

    போட்டிக்கான விதிமுறைகள்:

    ஒருவர் ஒரு புகைப்படத்தை மட்டுமே அனுப்பலாம்

    நீங்கள் அனுப்பும் படம் நீங்கள் க்ளிக்கியதாக இருக்க வேண்டும்

    ஆபாசமில்லாததாக இருக்க வேண்டும்

    படம் உங்களதில்லை என்பது உறுதியாகும் பட்சத்தில் உங்கள் படம் போட்டியில் இருந்து நீக்கப்படும்

    புகைப்படங்களை "tmantrampottigal@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், மின்னஞ்சலில் தங்களின் மன்ற உறுப்பினர் பெயரையும் குறிப்பிடவும்

    படங்களை அனுப்ப வேண்டிய இறுதிநாள் ஜூன் 7ஆம் தேதி

    ஜூன் 8 தேதியிலிருந்து பத்துநாட்களுக்கு உறவுகளின் முன்னிலையில் புகைப்படங்கள் வாக்குப்பதிவிற்காக வைக்கப்பட்டு, ஜூன் 18ஆம் தேதி போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்படும்

    நம் உறவுகளால் தேர்வு செய்யப்பட்டு, முதல் மூன்று இடத்தை பிடிக்கும் புகைப்படங்களுக்கு, பத்தாவது ஆண்டு நிறைவு விழாவில், பரிசு, தொகையாகவோ அதற்கிணையான புத்தகங்களாகவோ வழங்கப்படும்.

    முதல் பரிசு = 5000 ரூபாய்

    இரண்டாம் பரிசு = 3000 ரூபாய்

    மூன்றாம் பரிசு = 2000 ரூபாய்

    உறவுகளின் மேலான ஆதரவையும், உற்சாகமான பங்களிப்பையும் எதிர்ப்பர்க்கும் தமிழ்மன்ற நிர்வாகம் சார்பாக
    ஆதன்
    1. Categories:
    2. CMS,
    3. Article

    தமிழ் மன்றம் கடந்த 10 வருடங்களாக தொடர்ந்து இயங்கி வருகிறது.

    இங்கு உலகம் முழுவது பரவி வாழும் அனைத்து தமிழர்களும் கூடி தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார்கள்.

    தங்களிடம் உள்ள மின்புத்தங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். தங்கள் அறிவுத் திறங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

    இந்த தளம் பல துறைகளில் முன்னணி படைப்பாளிகளை உருவாக்கியிருக்கிறது, இன்னும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

    சுமூகமாக எந்த வித ஜாதி, மத, இன பேதமின்றி கூடும் இவ்விடத்தில் விதிமுறைகள் பின் பற்றப் படவேண்டியது அவசியம் என்பதை நினைவுறுத்துகிறோம்.
     Number of Views: 278 

    முதலில் மன்றம் பத்தாண்டுகளாக தொடர்ந்து நடைபோட்டுக் கொண்டிருப்பதற்கு வாழ்த்துக்கள். இதற்கு காரணம் வேரூன்றிய ஆலமரமாக மன்றமும் சில விழுதுகளும் அடிக்கடி இளைப்பாற வரும் பறவைகளும் தான்..என்னால் முடிந்தவற்றை பதிலாய் தருகிறேன்.

    மன்றம் உங்களுக்கு அறிமுகமானது எப்படி?


    பெங்களூருவில் பணியில் சேர்ந்த புதிது. அவ்வளவாக வேலை இருக்காது. (இப்போது மட்டும் என்ன வாழுதுன்னு கேட்காதீங்க..) இணையத்தில் தமிழில் ஏதாச்சும் படிக்க இருக்காதான்னு அலைந்த காலம். குமுதம் ஆனந்தவிகடன்..இப்படி பல தளங்களுக்கும் சென்று படிப்பது உண்டு. அப்படி ஒருநாள் தேடலில் அகப்பட்டது தமிழ் மன்றம். கதைகளைப்படிக்க ப்திவு செய்ய வேண்டியிருந்ததால் பதிவு செய்தேன். இப்படித்தான் அறிமுகமானது மன்றம்.

    மன்றத்தை முதலில் பார்க்கையில் உங்களில் தோன்றிய எண்ணம் என்ன?


    பெரிதாய் எதுவும் தோன்றவில்லை. வழக்கமான மற்ற மன்றங்களைப்போலவே தோற்றமளித்தது. முதலில் கதைத்தளத்தில் மட்டும் பயணித்த நான் படித்து சென்றுவிடுவேன். அது 2005ம் வருடம் ஆகஸ்ட் மாதம். படிக்க படிக்க ஆர்வம் வந்தது. வேறு பகுதிகளுக்கும் சென்று பார்வையிடத் தொடங்கினேன்.

    மன்றத்தில் இணைய உங்களைத் தூண்டிய மன்றத்தின் சிறப்பம்சங்கள் எவை?

    இணைந்தபின் தான் பலவிஷயங்கள் என்னை ஈர்த்தது. அதில் குறிப்பாக ஐவரணியின் அட்டகாசம். யார் எவரென்று தெரியாமல் கலாட்டா செய்கிறார்களே என வியந்து படிப்பேன். கொஞ்சம் கொஞ்சமாக நுழைந்து வம்படிக்க ஆரம்பித்தேன். ஒதுக்காமல் பதில் தாக்குதல் நடந்தது...விளையாட்டாக தான். மன்றத்தின் மீது அதிக ஈடுபாடு வந்தது. நான் கிறுக்கிய சில கவிதைகளை மன்றத்தில் பதிந்தபோது ஊக்குவித்தனர் பலர். நமக்கும் ஏதோ வருகிறது என்ற நம்பிக்கையை விதைத்தது மன்றம்.

    மன்றத்தில் உறுப்பினராக இணைந்து, முதலாவது உள்நுழைவின் போது உங்கள் மனநிலை என்ன?

    2005ல் சேர்ந்ததால் நினைத்தவுடன் பதிந்து உள்நுழைய முடிந்தது. அப்போது இருந்த எண்ணம் வெட்டியா ஆபிஸில் இருக்கும் நேரத்தில் நாலு கதைகளைப்படிக்கலாமே என்று தான்.

    மன்றம் வந்த பின்னர் நீங்கள் எண்ணி வந்த மாதிரியே மன்றம் இருந்ததா? அல்லது ஏமாற்றம் ஏற்பட்டதா?

    எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் மன்றம் வந்தேன். இன்றும் அப்படியே தொடர்கிறது. ஏனெனில் எதிர்பார்க்காத பல நண்பர்கள். பல சந்திப்புகள். எங்கு போனாலும் அங்குள்ள மன்ற உறவுகளை சந்திப்பது என சுவாரஸ்யமான நிகழ்வுகள். எனது உறவினர் நண்பர் வட்டம் தாண்டி பல விஷயங்களை மன்றம் கற்றுத் தந்திருக்கிறது. பின் வரும் பதில்களில் சொல்கிறேன்.

    நிர்வாக அணுகுமுறை எப்படி இருந்தது?

    நான் சேர்ந்த நாட்களில் சிலர் மற்றவர் மேல் மனஸ்தாபம் கொண்டிருந்தனர் என்பது அவர்கள் பதிவுகளில் தெரிந்தது. பொறுப்பாளர்களும் சரி.. ஏனைய மூத்த உறுப்பினர்களும் சரி.. தெளிவான முறையில் நடத்தி சென்றனர். உறவுகளுக்குள் பிரச்சனைகள் ஏற்பட்டால் சரிசெய்ய முயன்றனர். அன்று முதல் இன்று வரை நிர்வாகம் மாறினாலும் அவர்கள் அணுகுமுறை ஒரே மாதிரி தான். சில காலம் நானும் பொறுப்பாளனாய் இருந்தவன் என்கிற முறையில் சொல்கிறேன். நிர்வாகப் பொறுப்பு என்பது மிக மிக கஷ்டம். முகம் தெரியாத உண்மையான ஊர் பேர் தெரியாத நிலையில் எழுத்து மூலமே பரிச்சயமானவர்களிடம் பாரபட்சம் காட்டாமல் பிரச்சனையில்லாமல் மன்றத்தை நடத்தி செல்வது இமாலய வேலையே..!

    சக உறுப்பினர் அணுகுமுறை எப்படி?

    என்றும் யாருடனும் பிரச்சனை வந்ததில்லை. நிறைய பேரை பாத்திருக்கிறேன். நிறைய பேசியிருக்கிறேன். நக்கல் நையாண்டி என கலகலப்பாக சென்றாலும் என்னால் யார் மனமும் புண்பட்டிக்காது என நம்புகிறேன். அதே போல் தான் என்னுடன் பழகும் மற்றவர்களும். மன்றத்தின் மூலம் பல நண்பர்களும் உரிமையுடன் கடிந்து கொள்ளும் உறவுகளும் பலர் கிடைத்துள்ளனர். சில சமயம் காரசாரமான விவாதங்கள் நடைபெறும் போது தனிமனித தாக்குதல்கள் நடக்கும் போது வேடிக்கையாக இருக்கும். வேதனையாகவும் இருக்கும். என்னைப்பொறுத்த வரை கதை எழுதுவது.. கவிதை எழுதுவது என்பது தவிர.. மன்றமானது எத்தனையோ பிரச்சனைகளை தினசரி வாழ்வில் சந்திக்கும் தமிழன் இளைப்பாற வரும் வேடந்தாங்கல். எல்லோரும் ஒரே மனநிலையில் இருக்க மாட்டார்கள். சந்தோஷமாக இருப்பவர் அதை இரட்டிப்பாக்கவும் துக்கமாக இருப்பவர் அதை குறைக்கவும் மன்றத்திற்குள் வரலாம். நேரில் பார்க்காமல் பேசாமல்.. ஒருவர் மனநிலையைப் பற்றித் தெரியாமல் ஒருவர் கூறும் கருத்துக்களை ஏற்காமல் தாக்குவது தேவையற்றது. உலகின் எங்கெங்கோ இருக்கும் தமிழ் உள்ளங்களை இணைக்கும் பாலமாக இருக்கும் மன்றத்தில் உணர்ச்சிவசப்பட்டு தடித்து விழும் வார்த்தைகளைத் தவிர்த்தால் புரிந்துணர்வு மேலும் வலுப்படும். சந்தோஷம் பொங்கும்.வாழ்க தமிழ்..!


Unicode Converter
TSCII
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM