• முன் வாசல் RSS Feed

    Published on 25-10-2012 11:04 PM

    இனிய உறவுகளுக்கு!

    மன்றத்தின் பத்தாவது ஆண்டு நிறைவை ஒட்டி நடத்தப்பட்ட கதைப்போட்டியின் முடிவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

    அனைவரையும் திக்குமுக்காட செய்யும் அளவிற்கு 29 கதைகள் வாக்களிக்க தேர்ந்தெடுக்கப்பட்டன. ஒரு மாதகாலம் அவகாசம் இருந்தும் அதிகளவில் வாக்களிக்கப்படவில்லை. ஒருவர் நான்கு கதைகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்றிருந்தும் சில ஒன்றிரண்டு கதைகளுக்கு மட்டுமே வாக்களித்திருந்தது வருத்தம் கொள்ள செய்தது. அவர்களின் வாக்குகள் செல்லா வாக்குகளாக ஆக்கப்பட்டு முடிவுகள் அதற்கேற்றாற் போல் அறிவிக்கப்படுகின்றன.

    முதலில் மனம் தளராது போட்டிக்கு தங்கள் படைப்புக்களை அனுப்பிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றி.

    திருத்தப்பட்ட வாக்குகளின் அடிப்படையில்,

    ரிஷ்வன் அவர்களின் கதை "கடவுளும் மனிதனும்" அதிக வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றிருக்கிறது.

    புதுவை.வெ.செந்தில் அவர்களின் கதை "மாற்றாள்" அடுத்தபடியாக அதிகப்படியான வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றிருக்கிறது.

    முதல்முறையாக மூன்றாம் இடத்தை இரு கதைகள் பிடித்திருக்கிறது.

    கலைவேந்தன் அவர்களின் கதை "அண்ணி என்றால்" மற்றும் முரளிதரன் எழுதிய "சந்தேகம்" ஆகியவை மூன்றாம் இடத்தைப் பெற்றிருக்கிறது..

    போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த நால்வரையும் வாழ்த்தி மகிழும் மன்றம் பங்குபெற்ற ஏனைய கதாசிரியர்களைப் பாராட்டுகிறது.

    நன்றி

    நாள் : 18/01/2013

    இந்திய நேரம் காலை 11 மணி : தாமரையின் "மாட்டுப்பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி" - மறுஒலிபரப்பு

    நாள் : 19/01/2013

    இந்திய நேரம் மாலை 7 மணி : தாமரையின் "மாட்டுப்பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி" - மறுஒலிபரப்பு

    by Published on 17-11-2012 07:47 PM

    அன்பு உறவுகளே...

    இந்த வருடத்தின் முதல் காலாண்டுக்கான மனங்கவர் பதிவர் (ஜனவரி, பிப்ரவரி, மார்ச் 2013) தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது. மன்றத்தின் பண்பட்ட உறுப்பினராயிருப்பதில் பெருமை கொள்ளும் ஒவ்வொருவரும் தவறாமல் வாக்களித்து உறவுகளுக்கு ஊக்கமளிக்க
    இங்கே வாருங்கள். நன்றி.
    Published on 15-11-2012 09:20 PM

    மன்றத்தில் பண்பலை ஆரம்பித்து சிறப்பாக நாம் நடத்திக் கொண்டிருந்தாலும் மன்றத்தின் அடிப்படையான எழுத்திற்குத்தான் எப்போதும் முன்னுரிமை என்பதை உறவுகள் மறந்து விடக்கூடாது. அதோடு பண்பலைக்குத் தயாரிக்கும் நிகழ்ச்சிகளையும் எழுத்துக்களாக்கி இங்கே பதிவது மன்றை இன்னும் வளப்படுத்தும் என்று எண்ணுகிறேன். அதை ஆரம்பிப்பது போல் நானே எனது முதல் நிகழ்வான மனோ.ஜி அண்ணாவின் பேட்டியை இங்கேப் பதிவு செய்கிறேன். தொடர்ந்து மற்றவர்களும் தங்கள் படைப்புகளை இங்கேப் பதியும் போது அந்நிகழ்ச்சி ஆவணப்படுத்தப்படுவதோடு மன்றிற்கு புதிய தரமானப் பதிவுகளும் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

    தீபாவளி சிறப்புநிகழ்ச்சியில் ஒலிபரப்பான மனோ.ஜி அண்ணாவின் பேட்டியின் வரிவடிவம்.

    வணக்கம் நண்பர்களே…!
    நான் செல்வா பேசுகிறேன். உங்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்களை மிகுந்த மகிழ்ச்சியோடு சொல்லிக் கொள்கிறேன்.

    இப்போது நான் பேட்டி காணப் போவது மன்றத்தின் ஆரம்ப நாட்களிலிருந்து இன்றுவரை மன்றத்துடன் இணைந்திருக்கும் ஒரு மூத்த மன்ற உறுப்பினர்.

    மன்றிலும் மூத்தவர் !

    வயதிலும் மூத்தவர் !

    மன்றிலும் மக்கள் மனதிலும் முத்து அவர் !

    காமராஜரும் காந்தியும் அவருக்கு மிகப் பிடித்தமானவர்கள்.
    மன்றத்தின் விவாதங்கள் பகுதியில் இவரது திரிகளை நீங்கள் அதிகம் பார்க்கலாம்.
    மனிதர்களிடத்தில் அருகி வரும் குணங்களான மனிதநேயம், தர்மம், அன்பு பாசம் போன்றவற்றின் ஆழத்தைப் புரிந்து கொள்ளும் தேடல்களைக் கிளப்பும் விவாதங்களாக அவை நீண்டிருப்பதைக் காணலாம்.

    ஆம் நமது பாசமிகு அண்ணா மனோ.ஜி அவர்களைத்தான் நாம் இப்போது சந்திக்கப் போகிறேன். மலேசியாவில் வாழ்ந்தாலும் தமிழின் மீது தணியாத காதலும் அர்வமும் கொண்ட அண்ணலவர்.

    செல்வா : வணக்கம் அண்ணா..!

    மனோ.ஜி : வணக்கம் தம்பி..!

    செ: உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்க்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!

    ம: உங்களனைவருக்கும் என் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!

    செ: அண்ணா மன்றம் துவங்கி பத்தாவது அண்டை நாம கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் மன்றம் துவங்கிய காலகட்டத்திலேர்ந்து பத்து வருஷமாக மன்றத்துடன் இணைந்திருக்கீங்க.. இந்த பத்து வருஷத்தில் நீங்கள் என்னென்ன புதுமைகள், மாற்றங்கள் பாக்குறீங்க?

    ம: தமிழ்மன்றம் என்ற ஒரு இணையதளம் 2003ல் உருவானது. 2003லிருந்து 2012 வரை என்ன மாற்றங்கள் என்று சொல்வதை விட என்ன வளர்ச்சிகள் என்று சொல்லலாம்.

    தமிழில் எழுத்தார்வம் கொண்டோரின் படைப்புகளுக்கு விமர்சனங்கள் மூலம் பின்னுட்டமிட்டு ஊக்கப்படுத்தி நிறைய படைப்பாளிகளை உருவாக்கியது நமது தமிழ்மன்றம்.

    ஆரம்ப காலத்தில் நிழற்படத் தொகுப்பு என அந்தந்த மாதத்தில் பதிக்கப்பட்ட சிறந்த படைப்புகளை கதை, கவிதை, நகைச்சுவை என மன்ற உறவுகளில் ஒருவர் பொறுப்பெடுத்துத் தொகுத்து எல்லாரும் வாசிக்கும் வண்ணம் பதிவேற்றம் செய்தது ஒரு சிறப்பு.
    பிறகு நந்தவனம் என்னும் ஒரு மின்னிதழ் பண்டிகைக்குப் பண்டிகை நந்தவனக் குழுவினரால் மன்றத்தில் பதிவேற்றப்பட்டது. இந்த நந்தவனம் நிழற்படம் போல் சிறந்த படைப்புக்களைத் தேர்ந்தெடுத்து அழகிய ஓவியங்கள் படங்கள் கொண்டு தொகுத்து நம்ம மன்றத்தில் பதிவேற்றம் செய்தாங்க. தொழில்முறை பதிப்பகம் வியாபாரநோக்கத்தில் செய்யிற மாத வார இதழ்களைக் காட்டிலும் நம்ம நந்தவனம் மிக மிகச் சிறப்பா இருந்துச்சு. இதுவே நம்ம வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு.
    ...


Unicode Converter
TSCII
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM