இந்தியா சொதப்பலாக ஆடியது. எங்கே ஆஃப்கானிஸ்தான் வென்றுவிடுமோ என்றுகூட ஒரு கட்டத்தில் நினைத்தேன். ஜாஹீர்கான் பந்துவீசு சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. ஆட்டத்தில் ஈடுபாடு இல்லாமல் ஆடியதுபோல் இருந்தது அவருடைய பந்துவீச்சு.
பாலாஜி, யுவராஜ், அஸ்வின் மற்றும் பதானின் பந்துவீச்சு நன்றாகவே இருந்தது.
மட்டையாளர்கள் கொஞ்சம் சரியாக ஆடியிருக்கவேண்டும். அடுத்த ஆட்டத்திலாவது காம்பீரும், ஷேவாக்கும் கை கொடுக்கவேண்டும்.
அடுத்த ஆட்டத்திற்கு ரோஹிட் சர்மாவிற்கு பதில் ஹர்பஜனை கொண்டு வந்தாலும் வரக்கூடும். ஆனால் தோனி இதை விரும்பவில்லை என்றே தெரிகிறது.