கிரிக்கெட் செய்திகள் : ICC T20 உலகக்கோப்பை .!

அஜெந்தா மெண்டீஸஸுக்கு திரும்பவும் விளையாட சந்தர்பம் கிடைக்குமா என்று நினைத்திருந்தேன், ஆனால் நேற்று அபாரமாக பந்துவீசி இன்னும் பல போட்டிகளுக்கு பலமான அஸ்திவாரம் அமைத்துவிட்டார். பாராட்டப்படவேண்டியவர். சந்தர்பத்தை அருமையாக பயன்படுத்திக்கொண்டதற்காக.
 
இரு மெண்டிஸ்களும் நேற்று ஶ்ரீலங்காப் பிரசைகளுக்கு போதையூட்டி விட்டார்கள்.


ஆரென் அண்ணா..




அஜந்த மெண்டிஸ் காயம் காரமாகத்தானே ஆடவில்லை..


இன்றைய போடியில் இந்தியா வெற்றி பெறும் என்பதில் சந்தேகமில்லை..
 
இந்தியா சொதப்பலாக ஆடியது. எங்கே ஆஃப்கானிஸ்தான் வென்றுவிடுமோ என்றுகூட ஒரு கட்டத்தில் நினைத்தேன். ஜாஹீர்கான் பந்துவீசு சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. ஆட்டத்தில் ஈடுபாடு இல்லாமல் ஆடியதுபோல் இருந்தது அவருடைய பந்துவீச்சு.

பாலாஜி, யுவராஜ், அஸ்வின் மற்றும் பதானின் பந்துவீச்சு நன்றாகவே இருந்தது.

மட்டையாளர்கள் கொஞ்சம் சரியாக ஆடியிருக்கவேண்டும். அடுத்த ஆட்டத்திலாவது காம்பீரும், ஷேவாக்கும் கை கொடுக்கவேண்டும்.

அடுத்த ஆட்டத்திற்கு ரோஹிட் சர்மாவிற்கு பதில் ஹர்பஜனை கொண்டு வந்தாலும் வரக்கூடும். ஆனால் தோனி இதை விரும்பவில்லை என்றே தெரிகிறது.
 
இன்னும் ஒரு விடயம் புரியவில்லை ரஹானே,புஜாரா,தினேஸ்கார்த்திக் இந்த மட்டையாளர்களை தவிர்த்து சர்மாவை எடுத்திருப்பது ஏனோ நெருடலாக படுகிறது..நேற்று முந்தினம் இந்தியா விளையாடும் முன் ஆஃப்கானிஸ்தான் வெற்றி பஎரும் என்று நினைத்தேன் அதர்கேற்றவாறு ஆட்டம் இருந்தது ...
 
நேற்றைய இலங்கை இங்கிலாந்து ஆட்டத்திற்கு ஜெயவர்தனேவிற்கு பதில் சங்ககரா காப்டனாக களம் இறங்கினார். காரணம் ஜெயவர்தனே போன ஆட்டத்தில் மெதுவாக ஆடியதால் இன்னும் ஒரு முறை இப்படி நடந்தால் அவர் ஒரு ஆட்டம் வெளியே இருக்கவேண்டும். அது இந்த மாதிரியான பெரிய போட்டிகளை பாதிக்கும் என்பதால் சமயோசிதமாக சங்ககராவை காப்டனாக உள்ளே இறக்கினார்கள். இது மிகவும் துணிச்சலான மற்றும் சமயோசிதமான முடிவு. இதை நிச்சயம் பாராட்டவே வேண்டும் இது தவறாக சிலருக்கு தோன்றினாலும்.
 
நேற்றைய இலங்கை இங்கிலாந்து ஆட்டத்திற்கு ஜெயவர்தனேவிற்கு பதில் சங்ககரா காப்டனாக களம் இறங்கினார். காரணம் ஜெயவர்தனே போன ஆட்டத்தில் மெதுவாக ஆடியதால் இன்னும் ஒரு முறை இப்படி நடந்தால் அவர் ஒரு ஆட்டம் வெளியே இருக்கவேண்டும். அது இந்த மாதிரியான பெரிய போட்டிகளை பாதிக்கும் என்பதால் சமயோசிதமாக சங்ககராவை காப்டனாக உள்ளே இறக்கினார்கள். இது மிகவும் துணிச்சலான மற்றும் சமயோசிதமான முடிவு. இதை நிச்சயம் பாராட்டவே வேண்டும் இது தவறாக சிலருக்கு தோன்றினாலும்.

முன்பு முரளி கூறியதாய் நினைவு. வாட்சனும் கூட.. அணித்தலைவராக இருக்கும் போது தமது ஆட்டங்களில் கவனம் செலுத்தவது கடினம் என்று...

நன்றாக ஆடவேண்டும் என்று நினைப்பவர்கள் அணித்தலைவராக வரவிரும்புவது குறைவு...

அது சிலருக்கு உரித்தான ஒரு கலை. சங்ககார கங்குலி அசாருதீன் பொன்டிங் ஸ்டீவ்வோ மார்க் டெய்லர் இப்படி....
 
அன்பு, நீங்கள் நினைப்பது அல்ல நான் சொல்ல வந்தது.

ஸ்லோ ஓவர் ரேட் காரணத்தால் இவரை மாட்ச் ரெஃப்ரி ஒரு ஆட்டம் வெளியே இருக்கச் சொல்லிவிடுவார் இன்னொரு முறை அப்படி நடந்தால். அதை தவிர்க்கவே சங்ககராவை காப்டனாக உள்ளே டாஸ் போட கொண்டு வந்தார்கள். மற்றபடி ஜெயவர்தனேதான் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டார். ஸ்லோ ஓவர் ரேட் மாட்ச் ரெஃப்ரி சொன்னால் அணித்தலைவராக இருந்த சங்ககராதான் பாதிக்கப்படுவார். ஆனால் கடந்த 12 மாதத்தில் இதுதான் முதல் முறை என்பதால் சங்ககராவிற்கு நஷ்டம் எதுவும் இல்லை. ஆனால் ஜெயவர்தனே ஏற்கெனவே ஒரு முறை தண்டனை பெற்றிருப்பதால் இன்னொரு முறை ஸ்லோ ஓவர் ரேட் வந்தால் அவர் ஒரு ஆட்டம் வெளியே இருக்கவேண்டிவரும்.

தோனிகூட இந்த காரணத்தால் ஒரு மாட்ச் வெளியே இருக்கும்படியானது. சமீபத்தில் பாகிஸ்தானின் மிஸ்பா ஒரு டெஸ்ட் போட்டியில் வெளியே இருக்கும்படியானது.
 
என் விருப்பத்துக்குரிய மேற்கிந்திய அணி டி20 உலககோப்பையை வென்று விட்டது..

இலகுவான இலக்கை நிர்ணயித்து, நேர்த்தியான பந்துவீச்சு, களத்தடுப்பால் இதை சாதிக்க முடிந்தது. வாழ்த்திகள் மேற்கிந்திய அணிக்கு..

நீண்ட காலமாக எதையும் சாதிக்காமல் இருந்து, அண்மைகாலமாக இருட்டில் தவித்த அணிக்கு இந்த வெற்றி பிரகாசமான பாதையை திறந்து விடட்டும்
 
ஒரு அணியாக, நல்ல போராட்டத்தை வெளிப்படுத்தி, கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வாழ்த்துக்கள் . :)
 
Back
Top