யாரிந்த அறிஞர்?

வணக்கம் எல்லோருக்கும். தலைப்பைப்பர்த்து தவறாக எண்ணவேண்டாமம். பல நாட்க்களுக்கு பின் ஒரு திரி தொடங்குகிறேன்.

மன்றத்தில் ஒவ்வொருவரிற்கும் அவர்களது நடவெடிக்கைகள் பொறுத்து எமது மனதில் ஒரு எண்ணங்களை கொண்டிருப்போம். இவர் இப்படி இருப்பார். அவர் அப்படி இருப்பார் என...

அறிஞரை பொறுத்தவரை அவரது படைப்புகள் அதிகம் இல்லை எனினும் எவ்வாறு எல்லோராலும் மதிக்கப்படுகிறார்..? அவர் இணை நிர்வாகி என்பதாலா? அல்லது வேறு ஏதும் காரணங்கள் உள்ளதா?

எனக்கு தெரியாதவற்றை தெரிந்து கொள்ள கேட்க்கிறேனுங்க. மன்றத்தின் ஆரம்ப காலத்தில் உள்ளவர்களில் இருந்து அனைவரும் பதில் கூறுங்களேன். உங்கள் பின்னூட்டங்களை ஆவலுடன் எதிர்பார்க்கும்

-மன்றத்தில் ஒருவன்-
 
அறிஞரை பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆனால் படத்தில் பார்த்துள்ளேன் இம்மன்றத்தில் உள்ளது. குறிப்பாக சொல்லவேண்டுமெனில் அனைவரையும் அரவணைக்ககும் நல்ல நண்பர். நல்ல நண்பர் என்பதால் அனைவரும் அவரை மதிப்பது இயல்பே.
 
வணக்கம் அன்பு..
அறிஞரைப் பற்றீ சில வார்த்தைகள் சொல்ல ஏதுவாக அமைந்திருக்கிறது இந்த திரி. பொதுவாக இங்கே உள்ள எல்லா
நிர்வாகிகளும் மேற்பார்வையாளர்களும் தாங்கள் தொடங்கிய படைப்புகள் மூலமாகவும் பதிவுகள் மூலமாகவும்
அளக்கப்படுகீறார்கள். சொந்த படைப்பின் மூலமாக முன்னே வந்த பலரைக் கண்ணால் கண்டிருப்போம். ஆனால் அறிஞர்
அப்படியல்ல. படைப்புகளைவிட நிர்வாகத் திறமை அவரிடம் அதிகம்.

ஒரு நீதிபதியைப் போல நடுநிலையான தீர்ப்புகள் வழங்கும் திறமை, மன்றத்திற்கு வரும் ஒவ்வொருவருக்கும்
ஊக்கமளிக்கும் உயர்வு, மன்றத்தின் ஈடுபாடு இவையெல்லாவற்றையும் விட நிர்வாகத் திறம்,. தேவைப்படும் நேரத்தில்
உதவி, பண்பட்ட எழுத்துக்கள், இவையெல்லாவற்றையும் விட படைப்புகள் சிறந்ததல்ல... ஏனெனில் இந்த திறமைகள் வாழ்வுக்கும் உபயோகமானவைகள்.. ஒருவர் இப்படி இருந்தால்தான் நிர்வாகம் செய்யமுடியும்... ஆனால் வன் குணத்துக் காரன் கூட மென்மையாக படைப்புகள் செய்யலாமே!!!

சில இடங்களில் வரம்பு மீறிய பதிவுகளுக்கு கொடுக்கவேண்டிய பதில்களுக்கு திறம் வேண்டும்.. அந்தவகையில் அறிஞரின் பதிலை பலமுறை நான் எதிர்பார்த்திருக்கிறேன். திறமைகள் என்பது படைப்புகளைப் பொறுத்தல்ல என்பதற்கு அறிஞர் சரியான உதாரணம். மன்றம் தொடங்கிய நாள் முதல் இராசகுமாரன் அவர்களோடு தோளோடு தோளாக கைகோர்த்து இத்தனை தூரம் வளர்ச்சிக்கு காரணமாக இருந்த அறிஞர் படைப்பு படைக்கவேண்டுமா என்ன? இன்னும் சொல்லப் போனால் நாம் அவரை வைத்து படைக்கலாம்.

மன்றத்தின் தூண் என்பது நமது மன்றத்தில் வழங்கப்படும் பட்டம். ஆனால் உண்மையான தூண்களில் ஒருவர் அறிஞர். தமிழார்வம் ஒன்றே போதும் அதிகப்படி திறமைகள் இந்த பதவிக்கு வேண்டியதல்ல என்பதற்கு சரியான உதாரணம் இவர்..

மன்றத்தில் வந்தவுடன் என்னைக் கண்டுகொண்ட மனிதர். வாழ்வில் சந்திக்க முடியாதவர் என்று நினைத்தேன்.. ஆனால் மன்றத்தில் உள்ள மனிதர்களில் முதன் முறையாக நான் சந்தித்த மனிதர்... பழகுவதற்கு எளிமையானவர். குணங்கள் எல்லாமே மென்மை.. ஆகவேதான் இவர் இணை நிர்வாகி..

அன்புரசிகரே! இன்னும் ஏதும் விளக்கம் வேண்டுமா?
 
நன்றி ஆதவா.. உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொடுங்க. பின்னூட்டம் விளக்கமாக தருகிறேன்.

ஒரு இனிமையான செய்தி. இம்முறை தொலைபேசி மூலம் எனது பிறந்த நாளுக்காக வாழ்த்திய முதல் நபர் அறிஞரே...
 
மன்றத்தில் நான் சந்தித்த முதல் சகோதரன்
அறிஞர்.
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5393

நான் அவரை சந்தித்த பிறகு தமிழ்மன்றம் என்ற
இணைய தளம் தமிழ் பேசும் உறவுகளை
ஒன்றுணைக்கும் தளமாகவும் உறவுகளை வளர்க்கும்
தளமாகவும் மாறியது.


மனோ.ஜி
 
அன்புரசிகரே! அறிஞரைப் பற்றி பகிர்ந்துகொள்ள இது ஒரு நல்ல திரி...

மன்றத்தில் மிக இயலபாய் பழககூடியவர் நம் அறிஞர்.. அவர் படைப்புகள் அதிகம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவரின் பின்னூட்டங்கள் எப்பொழுதுமே படைப்பவர்களுக்கு உற்சாக டானிக்.. நிர்வாகியாய் இருப்பவர்களுக்கு பல்வேறு இடையூருகள் ஏற்படுவதுண்டு.. அவற்றையெல்லாம் சமாளித்து உண்மையிலேயே மன்றத்தின் தூணாய் இருப்பவர் நம் அறிஞர்.. யாரையும் கடிந்து இவர் பின்னூட்டமிட்டு நான் பார்த்ததில்லை.. இவரை நான் சந்தித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒன்று.
 
மன்றத்தில் நான் சந்தித்த முதல் சகோதரன்
அறிஞர்.
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5393
நான் அவரை சந்தித்த பிறகு தமிழ்மன்றம் என்ற
இணைய தளம் தமிழ் பேசும் உறவுகளை
ஒன்றுணைக்கும் தளமாகவும் உறவுகளை வளர்க்கும்
தளமாகவும் மாறியது.
மனோ.ஜி

அந்த திரியை படிக்கும் போது பொறாமை தான் கிழறியது. 2-3 வருடங்களுக்கு முன் எமக்கெல்லாம் இந்த மன்றத்தைப்பற்றி தெரியாமல் போய்விட்டதே...

இன்னமும் உங்களில் பலர் அவரை சந்தித்திருப்பீர்கள். தெரிந்திருப்பீர்கள். பகிர்ந்துகொள்ளுங்கள்.
 
ஆதவா சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. நட்புடனான கண்டிப்பு அறிஞரின் ஸ்பெஷாலிட்டி.
மனோஜி அவர்கள் கொடுத்த சுட்டியில் உள்ளவற்றை படித்ததும் பொறாமையாக இருக்கின்றது. இணையம் இணைத்த நண்பர்கள் இணைந்தே இருப்பது மகிழ்ச்சி. அன்பு ரசிகனின் பிறந்த நாளை நியாபகம் வைத்து தொலைபேசியில் வாழ்த்துச் சொன்ன அவரை என்ன என்று சொல்வது. தி கிரேட்.
 
மன்றத்தின் என் முதல் அறிமுகம் அறிஞர் அவர்கள் தான் இன்று வரை என்னை உற்சாக படுத்தியவர் மன்றதுணாக மாறி உள்னேன் என்றால் அது அறிஞரின் உற்சாகதால்தான் தவறுகள் பிழைகள் எல்லவற்றையும் அன்பாய் சுட்டி காட்டி வளர்த்தவர் இவரின் அன்பால் தான் நான் இன்று பல பதிவுகள் தயிரியமாய் பதிந்து இன்று இந்த அளவு வளர்ந்துள்ளேன் எனக்கு ஒரு ஆசை உண்டு விரைவில் அறிஞரையும் இளசு அண்ணாவையும் சந்திக வேண்டும்
 
Last edited:
இது என்னது புது பதிவு... புதியவர்களுக்கு என்னைப்பற்றி சொல்லவேண்டும் என எண்ணி.. நானே பதிவு தொடங்கலாம் என்று இருந்தேன்...

பிறகு நேரம் கிடைக்கும் பொழுது விரிவாக எழுதுகிறேன்...

பெரிதாக மன்றத்தில் ஏதும் கிறுக்கவில்லை என்றாலும்... எனக்கு பிடித்த என் சில பதிவுகள்.. தொடரவேண்டும் என ஆசைப்பட்டேன் முடியவில்லை...

அம்மா
சாதிக்கலாம் வாங்க
தொலைந்து விட்ட இன்பங்கள்...

முல்லா கதைகள்
தெனாலிராமன் கதைகள்
பீர்பால் கதைகள்
 
அன்புரசிகன்.. பென்ஸ் இடத்தை மாற்றியுள்ளார்... மன்னிக்கவும்.
 
அறிஞர்;218888 said:
அன்புரசிகன்.. பென்ஸ் இடத்தை மாற்றியுள்ளார்... மன்னிக்கவும்.
இல்லை அறிஞரே.. நான் வேண்டும் என்றுதான் உங்கள் பதிவை மட்டும் கவிஞர் அறிமுக பகுதிக்கு அனுப்பினேன்... நீங்கள் இதுவரை அதில் பதிக்கவில்லை என்பதால் அப்படி செய்தேன் :food-smiley-002: :whistling:
 
அறிஞயரை பற்றி அலச அருமையான திரி அன்பு ஆரம்பித்துள்ளார்
ஆனால் இதை இந்த அறிமுக பகுதியில் போடலாமே
 
அறிஞர் அவர்கள் மிகவும் நல்லவர் வல்லவர் என்று நான் சொல்லப்போவதில்லை மாறாக,


ஒரு வார்த்தையில் சொன்னால்,
எனக்கு மன்றத்தில் கிடைத்த முதல் நண்பர். நான் முகமறியா ஒரு நல்ல மனிதர்.


பல வரிகளில் சொன்னால்,
நன்கு படித்தவர், நல்ல பண்பாளர், சபை மரியாதை அறிந்தவர், அடக்கமிக்கவர், நல்ல வழிநடத்துனர், சிறந்த நிர்வாகி, ஊக்கமருந்து, வளரூம் கவிஞர், ஏதோ அவ்வப்பொது எழுதும் எழுத்தாளர், நகைச்சுவையாளர், அக்கரைவாதி, அன்பு களஞ்சியம், கொஞ்சம் பக்திமான், சிறந்த ஆலோசகர் மற்றும் அனைவரின் நல்ல நண்பர்.
 
ரசிகனின் கேள்வியும் அதற்களிக்கப்பட்ட ஆதவாவின் விளக்கமும் அருமை.

என்னை தோழ் தட்டி ஊக்குவிப்பவர்களில் அறிஞரும் ஒருவர் என்பதனை இறுமாப்புடன் இந்தச் சந்தர்ப்பத்தில் கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.
 
பதிவுகள் 18.
Members who have read this thread : 28 ...
எனக்கு இன்னமும் வேண்டும். வாருங்கள் அன்பர்களே...

பதிவு எந்த திரியில் இருந்தால் என்ன... எனது நோக்கம் நிறைவேறினால் சரி.
 
18 இல் 4 உங்கள் பதிவுகள் ரசிகன்.
ஹி...ஹி...ஹி...( ஓவியனின் ஸ்டயிலில் சிரிக்கிறேனேக்கும்)
 
Back
Top