மயூ
New member
மனதில் உறுதியுடன் (ஒரு பக்க கதை)
ஜன்னலினூடாக எட்டிப் பார்க்கின்றான். எங்கும் கருமேகங்கள் இராஜகம் பண்ணிக்கொண்டிருந்தன். அதைப்பற்றி அலட்டும் மனநிலையில் அவன் இல்லை. இன்றில்லாவிட்டால் என்றுமே முடியாது மனதுக்குள் எண்ணிக்கொண்டான். நான் நிச்சயம் போகவேண்டும். முதலில் மனதைத் திடமாக வைத்திருக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தான்.
மனதில் திடம் இல்லாவிட்டால் எப்படி அவள் முகத்தை நேருக்கு நேர் பார்ப்பது. வெள்ளை நிற ஷேர்ட்டை அணிந்து கறுப்பு நிறக் கேர்ட்டையும் அணிந்து கொண்டு புறப்படுகின்றான். அவளுக்கு கறுப்பு நிறம் மிகவும் பிடிக்கும். அவள் கூட இன்று வெள்ளை நிறத்தில்தான் உடுத்தி இருப்பாள்.
கற்பனைகளுடன் அனது சுசூகியில் அவள் வீடு நோக்கிப் பயனமாகின்றேன். வீதியில் கவனம் செல்ல மறுக்கின்றது. பத்து நிமிடத்தில் அவள் வீட்டை அடைந்துவிட்டான். அங்கே வழமையைவிட அதிகளவு சனமாக இருக்கின்றது. அவன் எதிர்பார்த்ததுதான்.
மீண்டும் கூறிக்கொண்டான்...டேய் திடமாக இருடா. உறுதி சொல்ல யாரும் இல்லை, திடப்படுத்த யாரும் இல்லை ஆதலால் அன்னை தானே திடப்படுத்திக்கொண்டான்.
அவனைக் கண்டதும் சனங்கள் தமக்குள் ஏதோ குசு குசுவென்று பேசுவது அவன் காதுகளுக்கு எட்டாமல் இல்லை என்றாலும் அதைக் கண்டு அலட்டவா அவனால் இப்போ முடியும். அவனுக்கு அதைவிட முக்கியமான வேலை உள்ளதே!!!
அவன் கூடத்தினுள் சென்றதும் அவள் அப்பா மற்றவர்களைப் பார்த்து சொன்னார். சரி அவரும் வந்திட்டார் இனியும் ஏன் பொறுப்பான்??. அவள் தாயார் கலங்கிய விழிகளுடன் அவனை நோக்கி வருகின்றார். மார்போடு அணைத்துக் கொள்கின்றான்.
அவனை அறியாமல் கண்களில் இருந்து கண்ணீர் பொல பொலவென ஊற்றுகின்றது. சிலர் வந்து முதுகில் வந்து தட்டி என்னை ஆசுவாசப் படுத்துகின்றனர். அவனுக்கு எதுவும் தெரியவில்லை, அல்லது உறைக்கவில்லை. தன் உலகத்தில் அழுதுகொண்டு இருக்கின்றான். இப்போ அவள் முகத்தை கடைசியாக ஒரு தடவை பார்க்கின்றான், ஏனெனில் இது அவளின் இறுதி ஊர்வலம்.
இதை யாராவது கவிதையாக வடிப்பீர்களா???
ஜன்னலினூடாக எட்டிப் பார்க்கின்றான். எங்கும் கருமேகங்கள் இராஜகம் பண்ணிக்கொண்டிருந்தன். அதைப்பற்றி அலட்டும் மனநிலையில் அவன் இல்லை. இன்றில்லாவிட்டால் என்றுமே முடியாது மனதுக்குள் எண்ணிக்கொண்டான். நான் நிச்சயம் போகவேண்டும். முதலில் மனதைத் திடமாக வைத்திருக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தான்.
மனதில் திடம் இல்லாவிட்டால் எப்படி அவள் முகத்தை நேருக்கு நேர் பார்ப்பது. வெள்ளை நிற ஷேர்ட்டை அணிந்து கறுப்பு நிறக் கேர்ட்டையும் அணிந்து கொண்டு புறப்படுகின்றான். அவளுக்கு கறுப்பு நிறம் மிகவும் பிடிக்கும். அவள் கூட இன்று வெள்ளை நிறத்தில்தான் உடுத்தி இருப்பாள்.
கற்பனைகளுடன் அனது சுசூகியில் அவள் வீடு நோக்கிப் பயனமாகின்றேன். வீதியில் கவனம் செல்ல மறுக்கின்றது. பத்து நிமிடத்தில் அவள் வீட்டை அடைந்துவிட்டான். அங்கே வழமையைவிட அதிகளவு சனமாக இருக்கின்றது. அவன் எதிர்பார்த்ததுதான்.
மீண்டும் கூறிக்கொண்டான்...டேய் திடமாக இருடா. உறுதி சொல்ல யாரும் இல்லை, திடப்படுத்த யாரும் இல்லை ஆதலால் அன்னை தானே திடப்படுத்திக்கொண்டான்.
அவனைக் கண்டதும் சனங்கள் தமக்குள் ஏதோ குசு குசுவென்று பேசுவது அவன் காதுகளுக்கு எட்டாமல் இல்லை என்றாலும் அதைக் கண்டு அலட்டவா அவனால் இப்போ முடியும். அவனுக்கு அதைவிட முக்கியமான வேலை உள்ளதே!!!
அவன் கூடத்தினுள் சென்றதும் அவள் அப்பா மற்றவர்களைப் பார்த்து சொன்னார். சரி அவரும் வந்திட்டார் இனியும் ஏன் பொறுப்பான்??. அவள் தாயார் கலங்கிய விழிகளுடன் அவனை நோக்கி வருகின்றார். மார்போடு அணைத்துக் கொள்கின்றான்.
அவனை அறியாமல் கண்களில் இருந்து கண்ணீர் பொல பொலவென ஊற்றுகின்றது. சிலர் வந்து முதுகில் வந்து தட்டி என்னை ஆசுவாசப் படுத்துகின்றனர். அவனுக்கு எதுவும் தெரியவில்லை, அல்லது உறைக்கவில்லை. தன் உலகத்தில் அழுதுகொண்டு இருக்கின்றான். இப்போ அவள் முகத்தை கடைசியாக ஒரு தடவை பார்க்கின்றான், ஏனெனில் இது அவளின் இறுதி ஊர்வலம்.

இதை யாராவது கவிதையாக வடிப்பீர்களா???
Last edited: