கவிச்சமர்

Status
Not open for further replies.
ஒரு திருடனாகத்தான்
நுழைந்தது காதல்
விருந்தாளியாக
வந்ததுபோல்
அலட்டிக் கொள்கிறது
உன்னிடம்
 
உன்னிடம்
முகர்ந்து
முகம் திருப்பிய காற்றைத்
தன்னுள்வாங்கி,
உன் இதய வழி,
உன்னுள்ளே வந்தான்
ஒரு மனிதன்..,
சக மனிதக் கழிவையும்
சுத்திகரிக்க...

இழிந்தவன்..,
எனத் தள்ளி வைத்துக்
கரித்துக் கொட்டினர்
சக மனிதர்...

சோறு கொடுத்த பேறு,
சாக்கடை உனக்கு...
சேறு பூசிக்கொள்கின்றது,
மனிதம்...
 
Last edited:
மனிதம் மனிதத்தைத்
தேடிக் கொண்டிருந்தது
மன அழுக்குகளின்
குவியலிடையே..!!
 
குவியலிடையே
அழுக்கு குவியலிடையே
வெள்ளையாய் தோன்றும்
உன் மனசு

குவியலிடையே
கசப்புக் குவியலிடையே
இனிப்பாகக் கேட்கும்
உனது பேச்சு

குவியலிடையே
அழகுக் குவியலிடையே
தேவதை போல் தோன்றும் நீ

குவியலிடையே
போராட்டக் குவியலிடையே
எனக்கு புது அர்த்தம் தரும்
 
புது அர்த்தம் தரும்
செய்கைகளின் தழுவலில்
நழுவிய துளிகள்
அலங்காரத் தொட்டிலில்
கவிதையாய் தவழ..

வாசலில் வந்தவர்
வாய்பிளந்து உள் நுழைய
அடுக்கு அலங்காரம்
கண்ணை கொத்தி விட...

அநாதையாகிறது
அழகான தொட்டில் குழந்தை..

மழலையில் அழுகுரலுக்காக
உன்னிப்புடன்
பால் கட்டிய அன்னை..
 
Last edited:
பால் கட்டிய அன்னை,
கொங்கைகளின் வலியில்
உணர்ந்தாள்..,
பாலூட்டல்
மங்கும் அழகல்ல,
மங்கையின் அழகு என்பதை...
 
மங்கையின் அழகு என்பதை
கொடி இடை என்பதா?
தளிர் நடை என்பதா?
முத்துப் பல் வரிசை என்பதா?
கார்மேகக் கூந்தல் என்பதா?
பொன்னிற மேனி என்பதா?
நிலையில்லதா இவற்றை விட
அகத்தின் அழகு என்பதே
 
அழகு என்பதை
ஆளாளுக்கு வரையறுத்தாலும்
உனது வரையறைதான்
அழகுக்கு அழகாகின்றது..

நிழலில்
நிஜத்தைப் பிடித்தாய்..
நிழலின்
நிறத்தில் பிடித்தமாய்..
 
பிடித்தமாய்
மகளுக்கு மாப்பிள்ளை...
திருமணச் செலவின்
பிடித்தத்தால்
வற்றிய சம்பளம்
சீராகவில்லை...
தலைத் தீபாவளிக்கு(ள்)ச்
சீராகுமா..?
 
சீராகுமா? சீறுமா?
என்ற
விலைவாசிக் கேள்விக் கரைகளுக்குள்
நுரைதள்ள ஓடுகிறது
கோட்டு வர்க்க வாழ்க்கை.
 
Status
Not open for further replies.
Back
Top