இளமைக் கல்வி சிலைமேல் எழுத்து
மும்பாயில் மிகவும் பரபரப்பான இடமது. காலை மாலை இரண்டு வேளையும் சத்தம் நிறைந்த இடம். வாகனங்களின் இரைச்சல், தொழிற்சாலை இயந்திர இரைச்சல் என இரைச்சலுக்குமத்தியில் மிகவும் ஆனந்தமாகத் தூங்கிக்கொண்டிருந்தான் வடிவுக்கரசன். அந்த வெளி இரைச்சல்களுடன் வீடினுள் தொலைக்காட்சிப்பெட்டியில் உயர் ஒலியில் ஒருவர் பாடிக்கொண்டிருந்தார். அவனைவிடப் பத்து வயது இளமையான தங்கை அவன் அறையில் இருந்த கணனியில் கேம் விளையாடிக்கொண்டிருந்தாள். அதிலிருந்தும் சத்தம் வந்துகொண்டிருந்தது. இவற்றுக்குமத்தியில் ஒருவன் தூங்கிக்கொண்டிருக்கின்றான் என்றால் அவனது தூக்கத்தின் தன்மையைக் கூற வேண்டியதில்லை. அந்த நேரத்தில் ஒரு சிறிய இரைச்சலுடன் ஒரு விமானம் இவர்களின் வீட்டின் மேலாகப் போனது. அந்த இரைச்சல் கேட்டதும் தூக்கம் கலைந்து எழுந்து உட்கார்ந்தான் பதினொரு வருடங்களுக்கு முன் இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து மும்பாயில் வாழும் ஈழத்துத் தமிழன் வடிவுக்கரசன்.
மும்பாயில் மிகவும் பரபரப்பான இடமது. காலை மாலை இரண்டு வேளையும் சத்தம் நிறைந்த இடம். வாகனங்களின் இரைச்சல், தொழிற்சாலை இயந்திர இரைச்சல் என இரைச்சலுக்குமத்தியில் மிகவும் ஆனந்தமாகத் தூங்கிக்கொண்டிருந்தான் வடிவுக்கரசன். அந்த வெளி இரைச்சல்களுடன் வீடினுள் தொலைக்காட்சிப்பெட்டியில் உயர் ஒலியில் ஒருவர் பாடிக்கொண்டிருந்தார். அவனைவிடப் பத்து வயது இளமையான தங்கை அவன் அறையில் இருந்த கணனியில் கேம் விளையாடிக்கொண்டிருந்தாள். அதிலிருந்தும் சத்தம் வந்துகொண்டிருந்தது. இவற்றுக்குமத்தியில் ஒருவன் தூங்கிக்கொண்டிருக்கின்றான் என்றால் அவனது தூக்கத்தின் தன்மையைக் கூற வேண்டியதில்லை. அந்த நேரத்தில் ஒரு சிறிய இரைச்சலுடன் ஒரு விமானம் இவர்களின் வீட்டின் மேலாகப் போனது. அந்த இரைச்சல் கேட்டதும் தூக்கம் கலைந்து எழுந்து உட்கார்ந்தான் பதினொரு வருடங்களுக்கு முன் இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து மும்பாயில் வாழும் ஈழத்துத் தமிழன் வடிவுக்கரசன்.