இன்றைய(காதல், சமூகம்,வாழ்க்கை)

sham

New member
இன்றைய(காதல், சமூகம்,வாழ்க்கை)

எடுத்த முதல் மாதச்சம்பளத்தை பக்குவமாய் எண்ணிச் சரிபார்த்துவிட்டு தன் காதலி முதன்முதலாய் கேட்ட அந்த வெள்ளிக்கொலுசை வாங்குவதற்காய் பல இனிய கனவுகளோடு அடியெடுத்துவைத்தவனின் "பர்ஸை" கைப்பற்ற முயன்ற அந்த முரட்டுக்கரத்தை பிடித்தவாறு திரும்பியவனுக்கு 5 அங்குல நீள கூரிய கத்தி இருமுறை அவன் வயிற்றின் உள்ளுறுப்புகளை சரிபார்த்தது. சரிந்து வீழ்ந்த காதலிதயம் கொண்ட அவனின் உடலினுள் நிற்க மனமில்லாமல் விட்டால்போதும் என்பது போல வெளியேறிக்கொண்டிருந்தது அவனது செம்மையானகுருதி. பலர் சுற்றி நின்றும் தூக்க எவரும் இன்றி பேச்சு வராமல் மூச்சுத்திணறிக்கொண்டிருந்த அக்காதலனுக்கு தன் காதலி விடயம் அறிந்து ஓடிவருவது தெரிந்து மேலும் சில வினாடிகள் தன் உயிரைக்கையில் பிடித்திருந்தவேளை வந்தவள் அவனிடம்"ரமேஷ் இன்னும் கொலுசு வாங்கலையா?" என்று கூறிய வார்த்தையைக் கேட்டதும் அவனது இதயம் இறுதியாக முனகியது"சோகத்துடன் தான் இறப்பேன் என்று நினைத்தேன் , ஏமாற்றத்துடனும் அல்லவா போகிறேன்" என்று அமைதியாகியது.


என்னால் முடிந்ததை தந்துள்ளேன்.
அன்புடன் சாம்.
 
எடுத்த முதல் மாதச்சம்பளத்தை பக்குவமாய் எண்ணிச் சரிபார்த்துவிட்டு தன் காதலி முதன்முதலாய் கேட்ட அந்த வெள்ளிக்கொலுசை வாங்குவதற்காய் பல இனிய கனவுகளோடு அடியெடுத்துவைத்தவனின் "பர்ஸை" கைப்பற்ற முயன்ற அந்த முரட்டுக்கரத்தை பிடித்தவாறு திரும்பியவனுக்கு 5 அங்குல நீள கூரிய கத்தி இருமுறை அவன் வயிற்றின் உள்ளுறுப்புகளை சரிபார்த்தது. சரிந்து வீழ்ந்த காதலிதயம் கொண்ட அவனின் உடலினுள் நிற்க மனமில்லாமல் விட்டால்போதும் என்பது போல வெளியேறிக்கொண்டிருந்தது அவனது செம்மையானகுருதி. பலர் சுற்றி நின்றும் தூக்க எவரும் இன்றி பேச்சு வராமல் மூச்சுத்திணறிக்கொண்டிருந்த அக்காதலனுக்கு தன் காதலி விடயம் அறிந்து ஓடிவருவது தெரிந்து மேலும் சில வினாடிகள் தன் உயிரைக்கையில் பிடித்திருந்தவேளை வந்தவள் அவனிடம்"ரமேஷ் இன்னும் கொலுசு வாங்கலையா?" என்று கூறிய வார்த்தையைக் கேட்டதும் அவனது இதயம் இறுதியாக முனகியது"சோகத்துடன் தான் இறப்பேன் என்று நினைத்தேன் , ஏமாற்றத்துடனும் அல்லவா போகிறேன்" என்று அமைதியாகியது.


காதலே அது பொய்யடா அது வெறும் காற்றடைத்த பையடா, இதை மனதில் நீ வையடா
 
நாங்கள் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ப்ரதீப் அண்ணா.
எந்தக் குட்டைன்னு சொல்லவே இல்லையே...
 
இது போன்ற காதலிகள்.... இவ்வுலகில் இருப்பதே.. காதலர்களுக்கு அவமானம்.
 
இப்படி ஒரு காதலி நிஜ உலகில் இருந்திட மாட்டாள் என்று திட்டவட்டமாக நம்புகிறேன்...
 
காதல் கதையா இல்லை காதல் வலியா என்ற சிந்தனையைக் கிளப்பி விட்டது கதை. சிறிய தட்டு சத்தான உணவு. கலக்கிட்டீங்க சாம்.
 
உயிரைக்கையில் பிடித்திருந்தவேளை வந்தவள் அவனிடம்"ரமேஷ் இன்னும் கொலுசு வாங்கலையா?" என்று கூறிய வார்த்தையைக் கேட்டதும்


பெண்களின் பலவினம் இது என்றாலும்
இது கொஞ்சம் மிகைபடுத்தபட்டுள்ளது என்பது உன்மை அல்லவா:confused:
 
பெண்களின் பலவினம் இது என்றாலும்
"பெண்கள் இரக்கத்தின் இருப்பிடம். அன்பிஅன் கருவறை. இளகிய மனம் படைத்த மங்கையர் பிறர் துன்பம் தன் துன்பமாகக் கருதும் சுமைதாங்கிகள்" இப்படி எல்லாம் சொல்றாங்களே.
 
"பெண்ணென்றால் பேயும் இரங்கும் பெண்களுக்கு ஏது இரக்கம்"இவ்வாறும் சொல்கிறார்களே!
 
ஒரு பெண்ணை வைத்து மற்றவரின் குணங்களை ஒப்பிட முடியாது

பல பெண்கள் அன்பின் இருப்பிடம்.
அதில் முதலாவது பெண் நம் அன்னை, :D

அடுத்தது (நீங்களே முடிவேடுக்கவும்.)
 
பல பெண்கள் அன்பின் இருப்பிடம்.
அதில் முதலாவது பெண் நம் அன்னை
பெண்கள் மதிக்கப்படவேண்டியவர்கள். ஆனா நமது காப்பியங்களில் அழிவுக்குக் காரணம் பெண்கள் என்றவாறு அல்லவா அமையப்பட்டுள்ளது.
 
பெண்கள் மதிக்கப்படவேண்டியவர்கள். ஆனா நமது காப்பியங்களில் அழிவுக்குக் காரணம் பெண்கள் என்றவாறு அல்லவா அமையப்பட்டுள்ளது.

காப்பியங்களில் அப்படி சொன்னாலும், அனுபவம் அப்படி இல்லையே!!!

தங்களின் அனுபவத்தில் இப்படி ஒரு பெண் வந்துல்லாறா?? இல்லையேன் நல்லது.

பெண்கள் யாரின் அழிவுக்கும் காரணமில்லை, அப்படி நடந்தால் அது அந்த ஆணின் அறியாமை தான் காரணம்.
 
காப்பியங்களில் அப்படி சொன்னாலும், அனுபவம் அப்படி இல்லையே!!!
நான் மட்டுமல்ல. இன்றைய இளைஞர்கள் பலரின் வெற்றிகரமான வாழ்வுக்குக் காரணம் பெண்கள்தான். ஆதி காலம் முதல் ஆணாதிக்கச் சுழலில் பெண்கள் சிக்கிச் சீரழிகின்றார்கள் என்பதுதான் வருத்தம் தரத்தக்க நிஜம்.
 
யதார்த்தத்தில் இப்படியொன்று நடக்காது என்பதே எனது வாதம். வேணுமானால் வந்தவளும் பயத்தில் தொடாது சற்றே விலத்தியிருந்து வேடிக்கை பார்க்கக்கூடும். இதுதான் ஒரு காதலியால் செய்யக்கூடிய ஒரு கொடுஞ்செயல்.

இருந்தாலும் உங்களுடைய கற்பனைக்கும் ஆக்கத்திற்கும் எனது வாழ்த்துக்கள்.
 
வேணுமானால் வந்தவளும் பயத்தில் தொடாது சற்றே விலத்தியிருந்து வேடிக்கை பார்க்கக்கூடும். இதுதான் ஒரு காதலியால் செய்யக்கூடிய ஒரு கொடுஞ்செயல்.
அவ்வளவு கொடுமையான ஒருத்தி எப்படி மென்மையான காதலை உணரக்கூடிய காதலியாக இருக்கலாம். அவள் காதலி என்ற பதத்துக்கே பொருத்தமற்றவள்.
 
நான் மட்டுமல்ல. இன்றைய இளைஞர்கள் பலரின் வெற்றிகரமான வாழ்வுக்குக் காரணம் பெண்கள்தான். ஆதி காலம் முதல் ஆணாதிக்கச் சுழலில் பெண்கள் சிக்கிச் சீரழிகின்றார்கள் என்பதுதான் வருத்தம் தரத்தக்க நிஜம்.

ஆமாம் நண்பா சரியான கருத்து,

அப்ப எந்த ஆணுக்கும் ஒரு பெண் துணை அவசியம் வேண்டுமா?
 
Last edited:
அப்ப எந்த ஆணுக்கும் ஒரு பெண் துணை அவசியம் வேண்டுமா?
நாம் பிறந்தது முதல் அப்பா, அம்மா இருவரின் துணியோடு இருக்கின்றோம். அப்புறம் உடன்பிறப்புகள் துணை. பலசந்தர்ப்பங்களில் நண்பர்கள் துணை. இப்படி மனித வாழ்க்கை ஒருவரை ஒருவர் சார்ந்துதான் இருக்க்கின்றது. அப்படி இருக்கும்போது என் பதில் எப்படி இல்லை என்று இருக்கும்.
 
Back
Top