மன்றம் மறந்தவர்களைத் தேடுவோம்... வாங்க..!
அன்பு நண்பர்களே..
இப்படி ஒரு தலைப்பைத் தொடங்குவதில் தயக்கம் உண்டெனிலும் மன்றம்வந்து மகிழவைத்தவர்கள் நம்மை மறந்து போனோரை மீண்டும் தேடும் ஆர்வத்தால் தொடங்கினேன். ( சரியில்லைன்னா நிர்வாகம் இத்திரியைத்தூக்குவதில் ஆட்சேபமில்லை.)
நம் மன்றம் வந்து நம்மை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தி பல்வேறு காரணங்களால் (வேலைப்பளு என்பது பொதுவான காரணம்) வர இயலாமல் போனவர்களை நாம் நினைவுறுத்துவதன் மூலம் மீண்டும் வர நூறுசதவீதம் வாய்ப்பிருக்கின்றது.
மன்றத்தின் நினைவூட்டும் மடல் மின்னஞ்சலுக்கு முன்பு அனுப்பப்பட்டு வந்தது. தற்போது செயல்படுகிறதா எனத் தெரியவில்லை.
அவ்வகையில் இது ஒரு நினைவூட்டல் திரியே..
நமது ஆதங்கங்கள் அவர்களைக் கட்டி இழுத்துவர வெகுவான வாய்ப்பு உள்ளதால் அனைவரது ஆதரவோடு தொடங்குகிறேன்.
நான் தேடும் முதல் நண்பர்: இளசு.
தமது பின்னூட்டங்களால் கட்டிப்போடும் கலைஞர். எல்லோரையும் பின்னூட்டி ஊக்குவித்து உற்சாகம் அளிக்கும் தகைஞர்.
சிறப்பாக நான் என் கவிதைகள் எழுதியபின் ஏங்கிக்கிடப்பது அவரது அன்பான பின்னூட்டத்திற்காக. ஏனெனில் அந்த பின்னூட்டத்தில் ஒரு தாய்மையின் பாசம் ஒளிந்திருக்கும். ( இப்போது அக்குறையை கீதம் மற்றும் ஜானகி தீர்க்கிறார்கள். )
அத்தகு தகைசால் பேரறிஞர் இளசுவைத் தேடுவோம் வாருங்கள்.
இளசு ( அண்ணா /தம்பி ) .. எங்கிருந்தாலும் உடனே மன்றத்திற்கு வருகை தந்து தங்களின் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் வழங்க வாருங்கள் என அன்புடன் கட்டளையிடுகிறேன்..
வாங்க... எல்லோரும் இன்னும் எல்லோரையும் தேடுவோம்..