ஆவி, பேய், பிசாசு நம்புகிறீர்களா?

பேய், பிசாசு, ஆவிகள் மேல் நம்பிக்கை உள்ளதா?

  • ஆமாம்

    Votes: 11 31.4%
  • இல்லை

    Votes: 9 25.7%
  • இது ஒர் மூட நம்பிக்கை

    Votes: 15 42.9%

  • Total voters
    35
பேயா,பிசா..அங்கே இரு நான் வருகிறேன்.. என்று சொல்லுவேன்..
அது எல்லாம் மூட நம்பிக்கைதான்..
இறந்த ஆன்மாக்கு உடல் இல்லை அதனால் அத்ற்கு முக்தி அடையும் வரை அலையும் என்று சொல்லுவார்கள்....
 
ஆவி, பேய், பிசாசு, என்பன எல்லாம் மூட நம்பிக்கை என்பது எனது கருத்து.

மனிதனுடய பயத்தை வைத்து பணம் சம்பாதிக்கும் சிலர் இதை உண்மை என வாதிட்டு வருகிறார்கள்.
இறை நம்பிக்கையும் மூட நம்பிக்கையும் வெவ்வேரானது என்பதை புரிந்து கொண்டால் தெளிவு பிறக்கும்.

துணிவே பெரும் துணை...
 
Last edited:
பேய், பிசாசு இருக்கா என்பது ஆராய்சிக்கு உட்படுத்த முடியாது ஒன்று, இதை ஒரு அனுபவம் எனலாம், அந்த அனுபவம் பயங்கரமாக, அச்சுருத்தகூடிய, விவரிக்க முடியாத நிலையில் இருக்கின்றபோது, பேய், பிசாசாகி விடுகிறது. குளக்கோட்டன் கூறியது போன்று இருட்டு என்றால் அதுவும் தனிமையில் என்றால் அனைவருக்கும் ஒருவிதமான அச்சம்தான். அந்த அச்சத்திலே வாழ்ந்து இருட்டில் நம் வாழ்வை இழந்து விடக் கூடாது என்றுதான் ஞானிகள் இருட்டை கிழிகின்ற சக்தி ஒளிக்கு உண்டு அதுபோல அச்சத்தை போக்குகின்ற அசாத்திய நம்பிக்கையும், தைரியமும் பன்மடங்கு மனிதருக்கு உண்டு என்பதை தங்கள் வாழ்வால் நிருபித்து உள்ளனர். ஆகவே 99 சதவிதம் தைரியம் கொண்ட நம் முன்னால் 1 சதவீதம் கொண்ட பேய், பிசாசு என்ற அச்ச உணர்வு, அனுபவம் சாதிக்கும் என்றால் அசட்டுத்தனமே.
 
எல்லாம் மனதளவிலேயே உள்ளது.....

"அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்" எனச் சும்மாவா சொன்னார்கள்??:aetsch013:
 
நான் அறிந்தவரை, எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை.
ஆனால் இறந்தவரின் ஆவிப் பிடித்து ஆடுவதாகவும் அதை பூசாரி விரட்டுவதாகவும் கேள்விப்படுவதுண்டு.
சமீபத்தில் கூட ஆங்கிலம் தெரியாத ஒரு பெண் ஆவி பிடித்து ஆங்கிலத்தில் பேசுவதை பார்த்ததாக உறவினர்கள் சொன்னார்கள். ஆவியாய் வந்த பெண்ணுக்கு ஆங்கிலம் தெரியுமாம்.
பேய் ஓட்டுவதை நேரில் பார்க்க, ஒருவித அச்சம் கலந்த ஆசை உண்டு.
 
கடவுள், பேய் , ஆன்மா, மறுபிறப்பு இவையெல்லாம் உண்டா, இல்லையா என்ற விவாதம் நீண்ட நெடுங்காலமாக நடந்து வருகிறது. இவையெல்லாம் உண்டு என்று நம்புகிறவனுக்கு உண்டு; இல்லை என்று சொல்பவனுக்கு இல்லை.
 
அது என்னமோ பேய் தனித்து இருப்பவர்க்குத்தான் காட்சி அளித்து அருள் பாலிக்கிறது அல்லது இருள் பாலிக்கிறது!!இரண்டு பேர் சேர்ந்து ஒரு பேயைப் பார்த்ததாக சொன்னால் நம்பலாம்...ஆனால் எனக்குத் தெரிந்து இதுவரை அப்படி யாரும் சொல்லவில்லை....எனவே பேய் என்பது கொஞ்சம் நம்பற்கரிய நம்பக்கடினமான விஷயமே!!!ஆனால் ஆவி என்பது கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது!!!எண்ண அலைகள்தான் ஆவி என்று நிருபிக்கப்படாத கட்டுரைகள் குழப்புகின்றன...எப்படியும் 2020 இல் எல்லாம் தெரிந்துவிடும்!!
 
ஆவி பேய் பிசாசு ஆகியவற்றை நான் நம்பவில்லை. அதனால அதுகளைக் கேரண்டிக்கு கூட்டிகிட்டு கடன் கேட்டு யாரும் வந்திடாதீங்க :)
 
ஆவி பேய் பிசாசு ஆகியவற்றை நான் நம்பவில்லை. அதனால அதுகளைக் கேரண்டிக்கு கூட்டிகிட்டு கடன் கேட்டு யாரும் வந்திடாதீங்க :)
இதுவும் ஒரு நல்ல ஐடியாவாக இருக்கிறதே. கடன் கொடுத்தவன் கியாரண்டி கொடுத்த ஆவியிடமிருந்து எப்படி பணத்தை வசூலிப்பான்.

எனக்கு யாராவது கடன் கொடுங்கப்பா!!!
 
நம்புரவங்க விகிதாச்சாரம் இன்னமும்
அதிகமாவே இருக்கே, 36.11 %

" யாருக்கவது தெரிஞ்ச பேய் பிசாசு இருந்தா
எனக்கும் அறிமுக படுத்துங்கப்பா , ஆரேன் சொன்னது போல பேங்ல ஜாமின் கைஎழுத்துது போட
எனக்கு ஒரு ஆவி தேவப்படுது"
 
ஜான் அண்ணா, 2 பேரு சேர்ந்து பார்த்த சம்பவத்த, நம்ம ராஜா ஐயா இந்த திரிலையே சொல்லி இருக்காரு, 4ஆம் பக்கத்தில் இருந்து 8ஆம் பக்கத்துக்குள் இருக்க வேண்டும் தேடி படிங்க
 
ஆவி, பேய், பிசாசை யாரும் பார்க்க முடியாது, உணரத்தான் முடியும்...!! :)

இந்த திரியை எத்தனை ஆவி இதுவரை படித்திருக்கிறதோ...!!! :)

ஹீ, ஹீ, ஹீ...!!!



http://www.tamilmantram.com/vb/showthread.php/13528-%E0%AE%93(%E0%AE%86)%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-!!
 
ஆவிகள் இல்லையடி பாப்பா ! -அதற்கு
...ஆதாரம் உண்டோ சொல்லடி பாப்பா !
பாவிகள் சிலபேர் பாப்பா !- இங்கு
...பரப்பிய கதையடி பாப்பா !
 
Back
Top