மஞ்சுபாஷிணி
New member
சோயா 65 சாப்பிடுவோமா?
சோயா - 65
அதென்ன எப்ப பார்த்தாலும் சிக்கன் 65?? நான்வெஜ் சாப்பிடாதவங்க சாப்பிடறமாதிரி எதுனா செய்து பார்க்கலாமா? புதுசு புதுசா எதுனா செய்து அதுக்கு ஒரு பேரும் வெச்சு சமைச்சு ஆத்துக்காரருக்கு கொடுத்து அவர் அதை வாயில் போட்டு முழுங்குமுன்னாடி முன்னூறு முறை நல்லாருக்கா நல்லாருக்கான்னு கேட்டு உயிரெடுத்து நல்லாருக்குன்னு சொன்னது தான் தாமதம்... உடனே இங்க போட்டுட்டா என்ன யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வயகம்னு ஒரு நல்ல எண்ணத்தால ( நிஜம்ம்ம்ம்ம்மா தாம்பா நம்புங்க) போட்டுட்டேன்... படிங்க. சமைச்சு பாருங்க... சாப்பிட்டு நல்லாருந்தா சொல்லுங்க சரியாப்பா?
தேவை
ஊறவைத்த சோயா மீல்மேக்கர், இஞ்சிபூண்டு விழுது, காரப்பொடி, உப்பு, மஞ்சள்தூள், கறிவேப்பிலை , க்ரிஸ்பியா இருக்க கொஞ்சூண்டு அரிசிமாவு, எலுமிச்சை ஜூஸ் ரெண்டு டேபிள் ஸ்பூன், பொரிக்க எண்ணை..
செய்முறை...
மீல்மேக்கரை நல்லா கழுவிட்டு ஒரு மணி நேரம் நீர்ல ஊறவெச்சுட்டு அதை பிழிஞ்சு ஒரு பாத்திரத்தில் போட்டுக்கோங்க. அதுல உப்பு, காரம், மஞ்சள் தூள், இஞ்சிபூண்டு விழுது, கறிவேப்பிலை, எலுமிச்சை ஜூஸ், அரிசிமாவு எல்லாம் போட்டு பிசிறிவெச்சிட்டு ஒரு மணி நேரம் ஊறவெச்சிட்டு கடாய்ல எண்ணை ஊற்றி இதை கொஞ்சம் கொஞ்சமா போட்டு பொரிச்சு எடுத்து தட்டுல அடுக்கி சூடா சாப்பிட்டு பாருங்க... எப்டி இருக்கு? நல்லாருக்கு தானே??
சோயா - 65
அதென்ன எப்ப பார்த்தாலும் சிக்கன் 65?? நான்வெஜ் சாப்பிடாதவங்க சாப்பிடறமாதிரி எதுனா செய்து பார்க்கலாமா? புதுசு புதுசா எதுனா செய்து அதுக்கு ஒரு பேரும் வெச்சு சமைச்சு ஆத்துக்காரருக்கு கொடுத்து அவர் அதை வாயில் போட்டு முழுங்குமுன்னாடி முன்னூறு முறை நல்லாருக்கா நல்லாருக்கான்னு கேட்டு உயிரெடுத்து நல்லாருக்குன்னு சொன்னது தான் தாமதம்... உடனே இங்க போட்டுட்டா என்ன யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வயகம்னு ஒரு நல்ல எண்ணத்தால ( நிஜம்ம்ம்ம்ம்மா தாம்பா நம்புங்க) போட்டுட்டேன்... படிங்க. சமைச்சு பாருங்க... சாப்பிட்டு நல்லாருந்தா சொல்லுங்க சரியாப்பா?
தேவை
ஊறவைத்த சோயா மீல்மேக்கர், இஞ்சிபூண்டு விழுது, காரப்பொடி, உப்பு, மஞ்சள்தூள், கறிவேப்பிலை , க்ரிஸ்பியா இருக்க கொஞ்சூண்டு அரிசிமாவு, எலுமிச்சை ஜூஸ் ரெண்டு டேபிள் ஸ்பூன், பொரிக்க எண்ணை..
செய்முறை...
மீல்மேக்கரை நல்லா கழுவிட்டு ஒரு மணி நேரம் நீர்ல ஊறவெச்சுட்டு அதை பிழிஞ்சு ஒரு பாத்திரத்தில் போட்டுக்கோங்க. அதுல உப்பு, காரம், மஞ்சள் தூள், இஞ்சிபூண்டு விழுது, கறிவேப்பிலை, எலுமிச்சை ஜூஸ், அரிசிமாவு எல்லாம் போட்டு பிசிறிவெச்சிட்டு ஒரு மணி நேரம் ஊறவெச்சிட்டு கடாய்ல எண்ணை ஊற்றி இதை கொஞ்சம் கொஞ்சமா போட்டு பொரிச்சு எடுத்து தட்டுல அடுக்கி சூடா சாப்பிட்டு பாருங்க... எப்டி இருக்கு? நல்லாருக்கு தானே??