தமிழுக்கு ஒரு தாலாட்டு!!!

இராசகுமாரன் said:
தாலாட்டுக்கள் கோடி தந்த தமிழுக்கே ஒரு தாலாட்டா?
பலே.. பலே... அபாரம் உங்கள் கருத்தும் கற்பனையும்.
தமிழுக்கு ஒரு ஆபரணம், மேலும் பல ஆபரணம் படைக்க வாழ்த்துக்கள்.

நண்பரே, நான் தற்போது சில மென்பொருட்களை தமிழுக்கு மாற்றம் செய்து வருகிறேன். அதில் இந்த கவிதையை மாதிரி பதிப்புகளில் சேர்க்க விரும்புகிறேன். அனுமதி உண்டா?

அனுமதி எப்போதும் உண்டு....
 
அருமையான கவிதை

லட்சம் கவிகள் பிறந்தாளும்,
ஆயிரம் கவிதைகள் வரைந்தாலும் - தமிழ்த்தாயை
வாழ்த்தி ஒருக்கவி படைத்தால் போதுமடா
பூவில் பிறந்த பயனைக் காண....

பாராட்டுக்கள் அண்ணா
 
Last edited:
அருமையான தமிழ் வாழ்த்துப்பா
நன்றி அண்ணா மேலும படைக்க
 
அருமை அருமை. செல்வரின் முத்தொன்று கண்டேன். உண்டேன்.
தூவானம் போலிருக்கும் துளுவத்தை தந்திங்கு
திராவிடம் படைத்தாயடி


இது புரியவில்லையே...
 
அருமை அருமை. செல்வரின் முத்தொன்று கண்டேன். உண்டேன்.
தூவானம் போலிருக்கும் துளுவத்தை தந்திங்கு
திராவிடம் படைத்தாயடி


இது புரியவில்லையே...



- இசைத்
தூவானம்
போலிருக்கும் துளுவத்தை தந்திங்கு
திராவிடம் படைத்தாயடி

துளு என்பது மங்களூர் பகுதியில் பேசப்படும் ஒரு மொழி. அதுவும் திராவிட மொழிகளில் ஒன்றாகவே கருதப்படுகிறது. துளு மொழி கன்னடம் கொங்கணி கலந்த ஒரு இனிமையான மொழி.. காதுக்கு இசைத் தூறல் போல இருக்கும். (என் உடன் பணிபுரிவோர் பேசுவதைக் கேட்டிருக்கிறேன்) அதான் இசைத்தூவானம்.. தெலுகு, கன்னடம், மலையாளம், துளுவம் என மக்களை ஈன்று திராவிட நாட்டுக்கே தாயானவள் தமிழ்..

முதல் விருத்தத்தில் தமிழ் குழந்தையாய்,
இரண்டாம் விருத்தத்தில் தமிழ் கன்னியாய்,
மூன்றாம் விருத்தத்தில் தமிழ் தாயாய்,
நான்காம் விருத்தத்தில் தமிழ் ஒரு பேரரசியாய்..
 
தமிழைக் குழந்தையாக்கி பாடிய சந்த லாலி அருமை தாமரை. சிறந்த தமிழ் உணர்வு உங்களிடம் குடி கொண்டிருக்கிறது. விசாலப்பார்வையில் இன்னும் பல கவிதைகள் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.(றோம்)
 
மறைபொருளாய் நின்ற மாதவத்து மாதரசி தன்
மனமொப்ப நிற்பவர்க்கு முழுயவனம் காட்டுவாள்
தாழ்மையோடு அவள் முகத்தைக்
காட்டுமாறு கேட்டுனின்றால்
அங்கத்தின் ஒரு பகுதி அவர்தம்
தரம் அறிந்து அன்னையவள்
தன்னழகை அளவோடு வெளியிடுவாள்
ஒருவர்க்கு திருப்பாதமும் உரத்து
அழுவோர்க்கு உதவிடும் திருக்கரமும்
முப்பாலாம் தமிழ்ப்பால் வேண்டி
தாகத்தோடு இருப்போர்க்கு தன் அங்கம்
முழுவதும் அன்புடனே அன்னைஅவள்
அமுதசுரபியாய் அள்ளி வழங்குவாள்

இதைத்தான் தங்களுக்குச் செய்திருக்கிறாள் திரு தாமரை. தன் அங்கத்தின் அனைத்துத் திரு அழகையும் உங்களுக்கு அள்ளி வழங்கியிருக்கிறாள். என்ன நடை. எப்பேற்பட்ட வார்த்தைப் பிரயோகம். அசத்தியிருக்கிறீர்கள் திரு தாமரை, வாழ்த்துக்கள்,

இன்றுதான் தங்கள் தாலாட்டினைக் கண்டேன். அன்னை அவள் அருட் கொங்கை பொழிந்த தமிழ்ப்பாலை மூச்சு முட்டக் குடித்த ஆரோக்கியம் தங்கள் கவிதையில் கண்டேன்.

என் பெண்ணைக் கொண்டு முழு விருத்தமாக பண்ணோடு இசைக்க வைத்தேன். அன்னைக்கே தாலாட்டுப்பாடிய அன்பு மகனை அவள் னினைத்து னினைத்து பெருமையுறுவாள், சர்வ அலங்காரங்களுடன் வலம் வரும் உற்சவ அன்னையின் திருஉருவை தங்கள் கவிதைவரிகள் தந்தது.

மிகத் தாமதமாக சுவைத்தது ஒரு குறைதான்,
 
என் பெண்ணைக் கொண்டு முழு விருத்தமாக பண்ணோடு இசைக்க வைத்தேன். ,

இசை அறிவு எனக்குக் கிடையாது சாலை அவர்களே.. இப்பாடலை எழுதிய நாள் முதலே இது என்ன ராகம் என்று தெரிந்து கொள்ள அடிமனதில் ஒரு ஆசை உண்டு!

தெரிந்தால் சொல்லுங்களேன்!
 
முதல் விருத்தத்தை நீலாம்பரியிலும்
இரண்டாவது விருத்தத்தை ஆனந்தபைரவியிலும்
மூன்றாவதை சிந்துபைரவியிலும்
நான்காவதை மத்யமாவதியும்

பாடி முழு இசை வடிவம் தந்தாயிற்று. முடிந்தால் MP3 வடிவத்தில் அனுப்பி வைக்கிறேன். நன்கு அமைப்பான விருத்தம் பாடக்கூடிய சந்த நடைதான் இக் கவியின் சிறப்பே.
 
இந்த ராகங்களுக்கும் நான் கூறிய பருவங்களுக்கும் எதாவது தொடர்புகள் உண்டா?

நீலாம்பரி ராகம் தாலாட்டுதானே - குழந்தைக்கு...
ஆனந்த பைரவி - வளரும் பெண் + மணம்
சிந்து பைரவிக்கும் தாய்மைக்கும் சம்பந்தம் உண்டா?
கம்பீரமான ராகம் எது?

முதல் விருத்தத்தில் தமிழ் குழந்தையாய்,
இரண்டாம் விருத்தத்தில் தமிழ் கன்னியாய்,
மூன்றாம் விருத்தத்தில் தமிழ் தாயாய்,
நான்காம் விருத்தத்தில் தமிழ் ஒரு பேரரசியாய்..

இந்த ராகங்களையும் பருவங்களையும் பொருந்துமாறு செய்தால் எவ்வளவு அழகாய் இருக்கும்?
 
நீலாம்பரி.. பிடித்தால் விடாத இராகம்.. (படையப்பா நீலாம்பரி கேரக்டர் மாதிரி)
ஆனந்த பைரவி, சிந்து பைரவி மனதை கொள்ளை கொள்ளும்..பொருத்தமானது..
கம்பீரம் என்றால் தர்ப்பார் இராகம் தாங்க.. மத்தியமாவதி பாட இலகுவான இராகம்.. புதியவர்களை கவரும் இராகம்.. அதனாலதான் சங்கீத ஆரம்ப அப்பியாசங்கள் அந்த இராகத்தில் அமைந்துள்ளன..

சாலை அய்யா.. எப்போ கிடைக்கும் இசை வடிவம்..
 
என் திருத்தவப் பயன் என் அமையே அப்பா..

அந்த காலத்து சூப்பர் ஸ்டார் தியாகராஜா பாகவதர் பாடல் தர்பார் ராகம் என்று நினைக்கிறேன் சரியா அமரன், ஜெய்ராம் ஐயா..
 
சரியாக இருக்கவேண்டும்.. வட இலங்கை சங்கீத சபையின் பாடவிதானத்தில், இப்பாடலைக் கண்டதாக நினைவு.. பயன்படுத்தியதாகவும்...
 
சரியாக இருக்கவேண்டும்.. வட இலங்கை சங்கீத சபையின் பாடவிதானத்தில், இப்பாடலைக் கண்டதாக நினைவு.. பயன்படுத்தியதாகவும்...

எனக்கு கர்ணாட்டிக் அவ்வளவா தெரியாத அமரன் ஆனால் வெஸ்டன் கொஞ்சம் தெரியும்..
 
அமரன் கம்பீரத்திற்கு காம்போதிதான். மிகைப்படுத்தாத யார் கையாண்டாலும் அவர்களை உயர்நிலைக்கு இட்டுச் செல்லும் அற்புத இராகம்.

தர்பாரிகானடா வேண்டுமானால் சற்று கம்பீரமாக இருக்கும்.
 
ஆஹா நமக்கு ஒரு செட்டு சேர்ந்தாச்சு. எதையும் விடறதுல்லே. இல்லே ஆதி. தியாகராஜபாகவதர் பாட்டு ஞாபகத்துக்கு வரல. நம்ம சிந்து பைரவியில் தர்பார் பாடுவாரே "ரோசனா" அது தர்பார் ராகம்தான், ரொம்ப அதிகமாக நம் இசையமைப்பாளர்கள் கையாளாத ராகம். பழைய பாடல்களில் "வீணைக் கொடியுடைய வேந்தனே" இராக ஆலாபனையை திரு சிதம்பரம் ஜெயராமன் பாடுவார்கள்
 
ஐயா, "யோச்சனா கமல லோச்சனா" அந்தப் பாடலைத்தானே சொல்றீங்க..
 
தமிழுக்கு உங்கள் வாழ்த்து பாடல் அருமை.
நன்றிகள். பாராட்டுகள்.
இது தாலாட்டு போல் இல்லை. தற்போது தமிழுக்கு தாலாட்டு அவசியமும் இல்லை. ஏற்கனவே எல்லா அலுவலகங்களிலும் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு எழுதிக்கொண்டு தமிழுக்கு ஓய்வு கொடுத்திருக்கிறோம்.
தாலாட்டு வேறு வேண்டுமா? திருப்பள்ளி எழுச்சி தான் இப்போது வேண்டும்....நன்றிகள்.
........................................................................................................

தாலாட்டு பாடல் சேகரிக்கும் என் முயற்சிக்கு ஆதரவு தாருங்கள். இதோ திரி. தாலாட்டு
 
தாலாட்டு வேறு வேண்டுமா? திருப்பள்ளி எழுச்சி தான் இப்போது வேண்டும்....நன்றிகள்.
........................................................................................................

[/URL]

கீழை நாடன் அவர்களே http://www.tamilmantram.com/vb/showthread.php?t=15253 இந்த திரியைப் பாருங்கள் நாகாரா ஐயாவின் திருப்பள்ளி எழுச்சி..
 
Back
Top