தெரியாததைக் கேளுங்கள்....

தெளிவாக பல விஷயங்கள் புரிந்தது ஐயா..!
தகவலுக்கு மிக்க நன்றி..!
 
என்ன நன்ரி, நொண்டின்னு....
'என்ன கொடுமை சரவனா இது' என்ன ஆச்சு
ஆபிஸ்ல வெட்டியா தானே இருக்கிரீர்...எழுதும் ஓய்.....
 
benjaminv said:
என்ன நன்ரி, நொண்டின்னு....
'என்ன கொடுமை சரவனா இது' என்ன ஆச்சு
ஆபிஸ்ல வெட்டியா தானே இருக்கிரீர்...எழுதும் ஓய்.....
'என்ன கொடுமை சரவணா இது?.. ரெண்டு நாளாய் நானும் வேலை செஞ்சேன். இனிமே எழுதறேன்..!!
ஆமாம்..நான் எழுத உங்களுக்கு அவ்ளோ ஆசையா? ஏற்கனவே..
"எதிராளி பாக்குறான்..தெருவோரம் நிக்கிறான்..மார்கெட்டில் முறைக்கிறான். எனைப் போட்டுத் தள்ள துடிக்கிறான்"னு பயந்து பயந்து பாடிட்டிருக்கேன்..
 
வேட்டையாடு விளையாடு படத்தில் "பார்த்த முதல் நாளில்" என்று தாமரையின் வரிகளில் பாம்பே ஜெயஸ்ரீ உருகியிருப்பார் கேட்டிருப்பீர்கள் என நம்புகிறேன். அதில் " என் பதாகை தாங்கிய உன் முகம்" என்றொரு வரி வரும். பதாகை என்றால் "கொடி" என்ற பொருள் கொடுக்கும். ஆனால் இந்தப் பாடலில் அதே பொருளில் கையாளப் பட்டிருக்கிறதா இல்லை வேறு பொருளா என யாரேனும் விளக்க முடியுமா?
 
காபன் காலக் கணிப்பென்றால் என்ன..?

சட்டவிரோதமாக யானையை வேட்டையாடி, தானாகவே செத்துப் போன பழைய யானையின் தந்தம் என வியாபாரம் செய்யும் திருடர்களைக் கண்டுபிடிக்க, காபன் காலக் கணிப்பு மேற்கொள்ளப்படுவதாக அண்மையில் - ஒரு தொலைக்காட்சில் குறிப்பிட்டார்கள்.

அதாவது, யானை செத்து 50 000 வருடங்கள் கடந்தாலும் - இந்தக் காபன் மூலக் கூறுகள் அழியாதவை என்பதால், இவற்றைக் கொண்டு - யானை பல வருடங்களுக்கு முன் செத்ததா..? அல்லது அண்மையில் கொல்லப்பட்டதா என்பதை, இந்தக் காபன் கணிப்பு முறையால் துல்லியமாகச் சொல்லிவிட முடியும் என்றும் குறிப்பிட்டார்கள்.

அதேபோன்று - அண்மையில், எமது தாயக பூமியாகிய இலங்கையின் யாழ்பாணத்திற்கு பெருங்கால வரலாறு உண்டு என்பதை அங்கு கிடைக்கப் பெற்ற மட்பாண்டம் போன்ற சில பொருட்களை காபன் கணிப்புக்கு உட்படுத்தியபோது தெரியவந்ததாக, தகவல் ஒன்றையும் படித்தேன்.

எனது சந்தேகம் என்னவென்றால் - இவ்வளவு பெருமை வாய்ந்த அந்தக் காபன் காலக் கணிப்பென்றால் என்ன..? அதனை எந்த அடிப்படையில் கணிக்கிறார்கள் போன்ற தெளிவான விபரங்களை, யாராவது தெரிந்த நண்பர்கள் கூறுங்களேன்..?

நட்புக்கு - மஸாகி
12.08.2006
 
றெஸ்லிங்

நீண்ட நாட்களாக எனக்கொரு சந்தேகம். டென்ஸ்போட்ஸ், ஸ்ரார் ஸ்போட்ஸ் போன்றவற்றில் ஒலிபரப்பப்படும் றெஸ்லிங் எனப்படும் மல்யுத்தம் பற்றியே. இது உண்மையான சண்டையா அல்லது திட்டமிட்ட நடிப்பா...? இவ்விளையாட்டிற்கு விதிமுறையேதுமில்லையா..? வயது, எடை, பால் போன்ற எந்த அடிப்படையும் பார்க்காமல் மோத விடுகிறார்களே... சிலவேளை மனிதாபிமான்மேயில்லாமல் பலர்கூடி ஒருவரையெல்லாம் தாக்கினாலும் அனுமதிக்கபடுகிறதே.. நடுவர் இங்கு எதை கவனிக்க செயல்படுகிறார்... மோசமாக தாக்கப்பட்டபின்னும் தாக்கப்பட்டவர் மீண்டும் சுதாகரிக்கிறார்கள்.. இது சாத்தியம்தானா..? இவர்களுக்கு உண்மையிலேயே உடலில் பாதிப்பு ஏற்படாதா..? நாகரிக உலகில் இத்தகய விளையாட்டு காட்டுமிராண்டித்தனமானதில்லையா..? எப்படி இதை அனுமதிக்கிறார்கள்..? கோழிச் சண்டை ஆட்டு சண்டை போன்றவற்றையே தடைசெய்ய போராடும் இக்காலத்தில் மனிதனையும் மனிதனையும் மோதவிட்டு ஒரு ரசனையா... அதற்கு இவ்வளவு ஆதரவா... (தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பார்க்கும்போது திரிகிறது) இதுபற்றி விளக்கமாக தெரிந்தவர்கள் சற்று விபரமாகவே அறியத்தருவீர்களா..?
 
பாத்தாமட்டும் போதாது.. இன் கேள்விக்கு பதிலயும் தாங்கப்பா..
 
தீபன் நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகளுக்கு எனக்கு பதில் தெரியாது என்றாலும் கீழ்காண்பவை என் கருத்து:

** கோழிச் சண்டை, ஆட்டு சண்டை போன்றவற்றை தடை செய்ய புளூ குரொஸ் (Blue Cross) அமைப்பு உள்ளது ஆனால் மனிதர்கள் போடும் சண்டையை தடை செய்யும் அமைப்பு தான் என்ன?

நாடுகள் சண்டையிட்டால் அமெரிக்கா, (ஐ.நா) ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டு சமாதானப்படுத்தும் ஆனால் மல்யுத்தம் என்னும் மனித சண்டையை விளையாட்டு என்பதால் அலட்சியமாக விட்டு விட்டனர் போலும்! :D
 
Last edited:
crisho said:
தீபன் நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகளுக்கு எனக்கு பதில் தெரியாது என்றாலும் கீழ்காண்பவை என் கருத்து:

நாடுகள் சண்டையிட்டால் அமெரிக்கா, (ஐ.நா) ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டு சமாதானப்படுத்தும் ஆனால் மல்யுத்தம் என்னும் மனித சண்டையை விளையாட்டு என்பதால் அலட்சியமாக விட்டு விட்டனர் போலும்! :D

நீங்க என் சந்தேகத்துக்கு விட சொல்லாட்டாலும் பரவால்ல.. ஆனா புதுசா ஒரு சந்தேகத்த கிளப்பிவிட்டுட்டில்ல போயிருக்கிங்க... நாடுகள் சண்டயிட்டா அமரிக்கா ஐனாவெண்டு வந்து ச்மாதானப்படுத்தும் எண்ண்டிட்டியள்... ஆனா அப்பிடி எந்தனாட்டு சண்டயில சமாதனமேற்பட்டிருக்கு எண்டதுதான் இப்ப என்ற சந்தேகம்..
 
jptheepan said:
நீண்ட நாட்களாக எனக்கொரு சந்தேகம். டென்ஸ்போட்ஸ், ஸ்ரார் ஸ்போட்ஸ் போன்றவற்றில் ஒலிபரப்பப்படும் றெஸ்லிங் எனப்படும் மல்யுத்தம் பற்றியே. இது உண்மையான சண்டையா அல்லது திட்டமிட்ட நடிப்பா...? இவ்விளையாட்டிற்கு விதிமுறையேதுமில்லையா..? வயது, எடை, பால் போன்ற எந்த அடிப்படையும் பார்க்காமல் மோத விடுகிறார்களே... சிலவேளை மனிதாபிமான்மேயில்லாமல் பலர்கூடி ஒருவரையெல்லாம் தாக்கினாலும் அனுமதிக்கபடுகிறதே.. நடுவர் இங்கு எதை கவனிக்க செயல்படுகிறார்... மோசமாக தாக்கப்பட்டபின்னும் தாக்கப்பட்டவர் மீண்டும் சுதாகரிக்கிறார்கள்.. இது சாத்தியம்தானா..? இவர்களுக்கு உண்மையிலேயே உடலில் பாதிப்பு ஏற்படாதா..? நாகரிக உலகில் இத்தகய விளையாட்டு காட்டுமிராண்டித்தனமானதில்லையா..? எப்படி இதை அனுமதிக்கிறார்கள்..? கோழிச் சண்டை ஆட்டு சண்டை போன்றவற்றையே தடைசெய்ய போராடும் இக்காலத்தில் மனிதனையும் மனிதனையும் மோதவிட்டு ஒரு ரசனையா... அதற்கு இவ்வளவு ஆதரவா... (தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பார்க்கும்போது திரிகிறது) இதுபற்றி விளக்கமாக தெரிந்தவர்கள் சற்று விபரமாகவே அறியத்தருவீர்களா..?
இந்த மல்யுத்தம் என்ற போலிப்பெயருடைய விளையாட்டு என்று சொல்லப்படுவதை ஆராய்வோமே!.. இதை நடத்துபவர்கள் யார்? சூதாட்ட விடுதிகளை லாஸ் வேகாஸில் நடத்தி வரும் முதலைகள். இவை முதலில் காட்சி ஆட்டங்களாக இருந்து பணம் தரும் மிகப்பெரிய சூதாட்டமாக மாறியது..

நடுவர்களே தாக்கப்பட்டு நட்டுக்கொள்ளும் இதை விளையாட்டு என்று சொல்வது மிகவும் கேவலமான ஒன்று. திரைப்படத்தில் சிகரெட் பிடிக்கும்காட்சியை தடை செய்வதை விட இந்த ஒளிபரப்பை தடை செய்ய வேண்டியது மிக அவசியமான ஒன்றாகும்.

இது குழந்தைகளின் மனநிலையை மிகவே பாதித்து இருக்கிறது.. குழந்தைகள் இதைக்கண்டு வன்முறை எண்னத்துடன் வளர்கிறார்கள்.. அடிப்பது என்பது தவறே இல்லை என்று எண்ண ஆரம்பித்து விடுகிறார்கள்.

அமெரிக்காவில் ஒரு 12 வயது சிறுவன் தன் தங்கை இதைப்போல் தூக்கி எறிய மாடிப்படிகளில் போய் மோதிய அச்சிறுமி உயிரையே இழந்திருக்கிறாள்...அந்தச் சிறுவன் தற்போது சிறையில்..

வெறித்தனத்தை வளர்க்கும் இந்த அரக்கத்தனமான ஒளிபரப்பை இந்தியாவில் தடைசெய்ய ண்டும்..
 
மஸாகி said:
சட்டவிரோதமாக யானையை வேட்டையாடி, தானாகவே செத்துப் போன பழைய யானையின் தந்தம் என வியாபாரம் செய்யும் திருடர்களைக் கண்டுபிடிக்க, காபன் காலக் கணிப்பு மேற்கொள்ளப்படுவதாக அண்மையில் - ஒரு தொலைக்காட்சில் குறிப்பிட்டார்கள்.

அதாவது, யானை செத்து 50 000 வருடங்கள் கடந்தாலும் - இந்தக் காபன் மூலக் கூறுகள் அழியாதவை என்பதால், இவற்றைக் கொண்டு - யானை பல வருடங்களுக்கு முன் செத்ததா..? அல்லது அண்மையில் கொல்லப்பட்டதா என்பதை, இந்தக் காபன் கணிப்பு முறையால் துல்லியமாகச் சொல்லிவிட முடியும் என்றும் குறிப்பிட்டார்கள்.

அதேபோன்று - அண்மையில், எமது தாயக பூமியாகிய இலங்கையின் யாழ்பாணத்திற்கு பெருங்கால வரலாறு உண்டு என்பதை அங்கு கிடைக்கப் பெற்ற மட்பாண்டம் போன்ற சில பொருட்களை காபன் கணிப்புக்கு உட்படுத்தியபோது தெரியவந்ததாக, தகவல் ஒன்றையும் படித்தேன்.

எனது சந்தேகம் என்னவென்றால் - இவ்வளவு பெருமை வாய்ந்த அந்தக் காபன் காலக் கணிப்பென்றால் என்ன..? அதனை எந்த அடிப்படையில் கணிக்கிறார்கள் போன்ற தெளிவான விபரங்களை, யாராவது தெரிந்த நண்பர்கள் கூறுங்களேன்..?

நட்புக்கு - மஸாகி
12.08.2006


அன்பு மஸாகி,

சாதா கார்பனின் அணு எடை 12.
காஸ்மிக் கதிர்களால் உண்டாகும் ஐசோடோப் கார்பனின் எடை 14.
உயிருள்ளவை காற்றில் உள்ள கார்பன் - டை- ஆக்ஸடை உள்வாங்கி
வளரும்போது 12-கார்பனும், 14 -கார்பனும் காற்றில் உள்ள அதே விகிதத்தில் அவற்றின் உடம்பிலும் இருக்கும்.

உயிர் பிரிந்தபின்னர், 14-கார்பன் குறைய ஆரம்பிக்கும்.
பாதியாக 5730 ஆண்டுகள்.
கால் பாகமாக 11460 ஆண்டுகள் இப்படி.
எனவே ஒரு உயிர் பிரிந்தது 50000-60000 அண்டுகள் வரை முன்னரா என தோராயமாக இந்தக் கணிப்பில் சொல்ல முடியும்.
அதைத் தாண்டி மில்லியன் கணக்குக்கு இது சரிப்படாது.

உயிரற்ற பாறை ( எரிமலைப்பாறை) போன்றவற்றை காலக்கணக்கிட
வேறு தனிம ஐசோடோப்புகள் ( ரேடியும், யுரேனியும், ) இப்படி விசேஷ முறைகள் உண்டு.

எல்லா கணக்குகளும் தோராயமானவையே.

இங்கே மேல் விவரங்கள்:

http://www.answersingenesis.org/docs2002/carbon_dating.asp

http://www.howstuffworks.com/carbon-14.htm

http://en.wikipedia.org/wiki/Radiocarbon_dating

http://hyperphysics.phy-astr.gsu.edu/hbase/nuclear/cardat.html
 
கார்பன் டேட்டிங் பற்றி இளசுவின் விளக்கம் அருமை. நன்றி சார்
 
மக்கா.. ஒரு குழப்பத்தில் இருக்கிறென்....
கோடைகாலம்....
வட துருவத்தில் மே மாதமும், தென் துருவ பகுதியில் டிசம்பர்மாதமும் துவங்குகிறது. இப்படி ரெண்டு சீசனில் இவை துவங்க காரணம் என்ன???
நாம் பள்ளியில் சூரியம் ஒரி நீள்வட்டபாதையில் சுற்றுவதால் இப்படி ஆகிறது என்று படித்திருக்கிறென்... அப்படியானால் இந்த இரு துருவத்திலும் ஒரே நேரத்தில் தானே கோடை வரனும்...
அப்புறமா... பூமியின் சுற்று ஆச்சு, சாய்ந்துள்ளதால் இப்படி இருக்கலாம்....
ஆனால் சரியான விடை தெரியலை.... யப்பு யாராவது விளக்கமா சொல்லுங்களேன்...
 
பூமியின் சுற்று அச்சு சாய்ந்திருப்பதால் பூமியின் அனைத்து பகுதிகளிலும் சரியாக சூரியன் படுவதில்லை. ஆகையால் பூமி சூரியனைச் சுற்றிவரும்பொழுது முதல் ஆறுமாதம் தென் துருவத்திற்கு நிறைய வெளிச்சமும், அடுத்த ஆறு மாதத்தில் வட துருவத்திற்கு நிறைய வெளிச்சமும் கிடைக்கிறது.

வட துருவ நாடுகளான நார்வே, ஸ்வீடன் ஆகிய நாடுகளில் ஜுலை மாதத்தில் 24 மணி நேரமும் வெளிச்சம் இருக்கும். அதுபோல் கனடாவின் வடக்கு பகுதியிலும் ஜுலை மாதத்தில் 24 மணி நேரமும் வெளிச்சம் இருக்கும்.

இந்த கேள்வியை நான் கேட்டு நீங்களோ அல்லது அறிஞரோ அல்லது செல்வமோ பதில் சொல்லியிருந்தால் சிறப்பாக இருக்கும்.

நன்றி வணக்கம்
ஆரென்
 
ஆரென்... மிக்க நன்றி....
இருந்தாலும் இந்த நீள் வட்ட சுற்றுபாதை என்ன செய்யுது.. அதுதான் முழப்பமே....
 
இராமர் அருந்ததி காட்டியிருப்பாரா என்று சந்தேகமே.. ஏனென்றல் அவர் பிறன் மனை நோக்கா தர்மசீலனாயிற்றே..


லொள்ளுய்யா உமக்கு...படித்தவுடன் சிரிப்பு வந்தது...
 
கடவுள் ஏன் மனிதனை படைத்தார்?
அவனுக்கு ஏன் சிநதனை கொடுத்தார்?
சிந்தனைக்கு ஏன் போட்டி மனப்பன்மை கொடுத்தார்?
போட்டியில் ஏன் பொறாமை கொடுத்தார்?
பொறாமையில் ஏன் மன கஷ்டத்தை கொடுத்தார்?
அன்பு, பாசம், காதல், பரிவு, அனைத்தையும் கொடுத்து குரோதம், பழிஉணர்ச்சி, கோபம், இதையும் சேர்த்து கொடுத்து இப்படி ஒரு துரோகத்தினை மனித உயிருக்குமட்டும் ஏன் செய்தார்????
 
Back
Top