தெரியாததைக் கேளுங்கள்....

அரசியல் சார்ந்த ஓர் வினா
தேர்தல் நெருங்கி வரும் இச்சமயத்தில் அரசியல் கட்சியினர் ,
தேர்தல் நிதி- நன்கொடை என கேட்டு வர்த்தகர்கள் மற்றும் பொது மக்களை மிரட்டுகின்றனர் . இதிலிருந்து மீள உபாயம் ஏதும் இருப்பின் தயவுகூர்ந்து யாரேனும் வெளியிடுக:medium-smiley-045:
 
அரசியல் சார்ந்த ஓர் வினா
தேர்தல் நெருங்கி வரும் இச்சமயத்தில் அரசியல் கட்சியினர் ,
தேர்தல் நிதி- நன்கொடை என கேட்டு வர்த்தகர்கள் மற்றும் பொது மக்களை மிரட்டுகின்றனர் . இதிலிருந்து மீள உபாயம் ஏதும் இருப்பின் தயவுகூர்ந்து யாரேனும் வெளியிடுக:medium-smiley-045:

தேர்தல் ஆணையரிடம்....உள்ளாட்சி தேர்தலாக இருப்பின்.

..இப்போது வருவது...சட்டமன்ற தேர்தல் மாநில தேர்தல் அலுவலரிடம் புகாரிடலாம்...

பொது மக்களிடம் கேட்பது...என்பது? சற்று சந்தேகமாக உள்ளது...

வணிகர்களிடம்...வர்த்தக நிறுவனங்களிடம் உண்டு....இது அவர்கள் ஏதாவது பிரச்சினைகளுக்கு...அதாவது வரி ஏய்ப்பு...போன்ற காரணங்களிலிருந்தும், வரி தணிக்கையிலிருந்தும் தப்பிக்க வணிகர்கள் இது மாதிரி கட்சிகளின் தயவை எதிர்பார்ப்பார்கள்..

(வணிகர்களின் பாதுகாப்பிற்காகவும்..வணிகத்தவறுகளிலிருந்து தப்பிப்பதற்காகவும்.... கட்சிகளிடம் பாதுகாப்பை எதிர்பார்ப்பார்கள்...அதனால் இந்த நன்கொடைகளை அவர்களே முன்வந்து அளிப்பார்கள்...அந்த சங்கங்களும் இப்படி பல கட்சிகளிடம் கூட்டு வைத்து உள்ளன...சாதி வாரியாக கட்சிகளுடன் கூட்டு வைத்துள்ளன...)

...பொது மக்களிடம் ''கட்சிகள்'' வாக்குகளாக எதிர்பார்ப்பதால் இது நடைபெறாது.:D
 
பொது மக்களிடம் கேட்பது...என்பது? சற்று சந்தேகமாக உள்ளது...

.:D

பொதுமக்களிடம் வசூல் கிடையாது என்பதே என் கருத்தும். நம்பி சரியாக சொன்னீர்கள்

போன வாரம் நானும் பார்த்தேன். கடை தெருவில் வணிகர்களிடம் மட்டும் ஒருவர் ஒரு கொடியை வைத்துக்கொண்டும் கூட ஒரு ஆறு அல்லது ஏழுபேர் பட்டாளம் கடைகடையாக சென்று பணம் வசூலித்தார்கள்.

ஆனால் பொதுமக்களிடம் அவர்கள் கேட்கவில்லை
 
நாம் சப்த ரிஷி மண்டலம் எனச் சொல்வது உர்ஸா மேஜர் எனப்படும். இவற்றில் ஒரு இரட்டை நட்சத்திரம் உண்டு. அதுவே வஷிஸ்டர் மற்றும் அருந்ததி ஆக கருதப் படுகிறது.

Mizar -வஷிஸ்டர் , Zeta Ursae Majoris, Mizat, Mirza 2.23 78.2 < مئزر mi�zar girdle
visual double star with Alcor - அருந்ததி


இந்தக் கூட்டத்தில் நான்கு முக்கிய நட்சத்திரங்களும், கரடி வாலில் மூன்று நட்சத்திரங்களும் உண்டு. வாலில் மையத்தில் உள்ள இரண்டாவது நட்சத்திரத்தின் அருகில் மங்கலான ஒரு நட்சத்திரம் உண்டு. அதுவே அருந்ததி என அறிக.

http://www.allthesky.com/constellations/ursamajor/

இந்தச் சுட்டியில் அருந்ததி தெரியும். இனி மணமக்ன் கம்ப்யூட்டரிலேயே அருந்ததி காட்டி விடலாம்


http://www.astro.wisc.edu/~dolan/constellations/constellations/Ursa_Major.html

http://en.wikipedia.org/wiki/Ursa_Major


இராமர் அருந்ததி காட்டியிருப்பாரா என்று சந்தேகமே.. ஏனென்றல் அவர் பிறன் மனை நோக்கா தர்மசீலனாயிற்றே..

யாருக்கோ தேவைப்படுதாம் கேட்டாங்க...
 
தகவலறியும் வுரிமை சட்டம் தற்போது எந்த அளவுக்கு மக்களுக்கு வுபயோகமாக வுள்ளது. அதை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம்.
 
தகவலறியும் வுரிமை சட்டம் தற்போது மக்களுக்கு பயன் அதிகம் தரும் வலிமை கொண்டது. அதை விடாக்கொண்டனாக பயன் படுத்தலாம். அரசை பாடாய் படுத்தலாம். உமக்கு வேண்டியது யது, ஐயா.
 
வெப்பம் ஒரு நிலையில் இருந்து இன்னோரு நிலைக்கு conduction (கடத்துதல்), convection மற்றும் radiation என்னும் காரணக்களால் நிகழலாம்... இதில் இந்த தீ மிதித்தல் கடத்துதலால் நிகழ்கிறத்து. மரம் ஒரு மோசமான ஒரு கடத்தி(Bad conductor) மேலும் இது சில சயமங்களில் சாம்பலால் சுற்றபடுவதால் இன்னும் மோசமான கடத்தியாகிறது.
ஒரு சாதாரண மனிதன் ஒரு அடியெடுத்து வைக்க 1/2 நொடியாகும்.... உதாரணமாக அந்த தீயிம் வெப்பம் 200 டிகிரி முதல் அடி எடுத்து வைக்கும் பொது அவன் கால் வெப்பம் 30 டிகிரி என்று வைத்து கொள்வொம்...
கடத்துதலால் காலில் வரும் வெப்பதின் அளவு/sec = KA(dT)/t

இதில் K=conductivity
A= Area
dT= கால் மட்டும் தீயின் வெப்ப வித்தியாசம் (200-30)
t= thickness of skin

இப்படியாக வெப்பம் காலில் எறும்... ஒரு மனிதனின் கால் வெப்பத்தை தொடர்ந்து 2 நொடி வைத்தால் மட்டுமே அது அவனது காலில் தீ புண் போன்ற காயங்களை ஏற்படுத்தும் .... அதனால் பாரதி சொன்னது போல் பூபடுக்கையின் நீளம் 4 முதல் 5 நடை நீளம் மட்டுமே இருக்கும்... (சுமார் 10 - 12 அடி அதிக பச்சமாக)

மேலும் ஒருமுறை கால் வைத்து இரண்டாம் முறை வைக்கும் பொது dT யின் மதிப்பு குறையும்.. இதனால் வெப்பம் காலில் எறுவதும் குறையும்....

இவ்வாறு கால் புண் ஆகாமல் பூ(தீ) மிதிக்கலாம்....

முக்கியாமான செய்தி... பயம் வந்தால்..(மனம் ஒரு நிலை இல்லாமை), கால் ஒரு இடத்தில் அதிக நேரம் இருக்கும்.. கால் வேந்து போகும்...
nalla pathil
 
நண்பரே ,
மஞ்சள் நீரில் கால் பட்டதால் ஒரு மெல்லிய மண் படலம் காலில் ஒட்டிக் கொள்கிறது .
அதுவும் கூட ஒரு விதத்தில் வெப்பத்தைத் தடுக்கிறது
அன்புடன்
மு .குழந்தைவேல்
 
cmnt

அப்போ எனக்கு எதுவுமே தெரியாதே அதுக்கு என்ன செய்யலாம்?
 
Last edited:
அப்போ எனக்கு எதுவுமே தெரியாதே அதுக்கு என்ன செய்யலாம்?

உங்களுக்கு எது எது தெரியாதுன்னு சொல்லுங்க? தெரிஞ்சவங்க பதில் சொல்லுவாங்க. அப்போ முதல்ல உங்களுக்கு எது எது தெரியாதுன்னு தெரிஞ்சுக்குங்க.:)
 
Back
Top