தெரியாததைக் கேளுங்கள்....

சைவ உணவுகளில் அதிகம் சேர்க்கப்படும் அப்பளம் அல்லது பப்படம் அதிகமாக உண்பது உடலுக்கு நல்லதா? தீயதா?

எதுவும் அளவுக்கு மீறினால் நஞ்சு... இதில் உழுந்து இருப்பதால் சளி வருத்தம் உள்ளவர்கள் சற்று கவனிக்கவேண்டும். எண்ணெயில் வேறு பொரிப்பார்களே.....

தீபன் உங்களுக்கு என்ன வருத்தங்கள் உண்டு என்று ஒரு பட்டியல் தாருங்கள்... :D பிறகு சொல்லலாம்... :lachen001:
 
எதுவும் அளவுக்கு மீறினால் நஞ்சு... இதில் உழுந்து இருப்பதால் சளி வருத்தம் உள்ளவர்கள் சற்று கவனிக்கவேண்டும். எண்ணெயில் வேறு பொரிப்பார்களே.....

தீபன் உங்களுக்கு என்ன வருத்தங்கள் உண்டு என்று ஒரு பட்டியல் தாருங்கள்... :D பிறகு சொல்லலாம்... :lachen001:

ஒரு சந்தேகம் கேட்டா உடனே என்னை நோயாளியாக்கிட்டிங்களே....!
என்னோட வருத்தங்கள சொன்னா இஞ்ச நானே இருக்கமுடியாது..,.!

சரி, அதிகமா சாப்பிட்டா எதுவும் கூடாதுன்னு எனக்கும் தெரியும். அப்பளம் எந்த வகையில் உடலுக்கு நல்லது அல்லது கெட்டது என்பதுதான் என் கேள்வி. என் நண்பன் ஒருவன் மதிய சாப்பாட்டின்போது 3 அல்லது 4 அப்பளம் உண்கிறான். அப்பளத்தில் செயற்கை சுவையூட்டிகள் அல்லது இரசாயனங்கள் கலந்திருக்கலாம், அதனால் அது உடல் நலத்திற்கு கேடாகவிருக்கலாம் என்பது என் அபிப்பிராயம்... இதை உறுதிப்படுத்தி கொள்ளவே இங்கு இதை கேட்கிறேன்.
 
வாங்க தீபன்.
நாட்கழித்து வந்திருக்கீங்க.
சுகமா இருக்கீங்களா.
 
வாங்க தீபன்.
நாட்கழித்து வந்திருக்கீங்க.
சுகமா இருக்கீங்களா.
வணக்கம் அமரன்.
சுகத்திற்கு குறைவில்லை... நலமே.
நன்றி.
 
நண்பர்களே...

இந்த பகுதியில் பல நல்ல தகவல்களை நண்பர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள். அது மிகவும் உபயோகமாக உள்ளது. இதை நான் வரவேற்கிறேன். இதை இன்னும் உபயோகமாக்க ஒரு ஆலோசனை:

நம் பலருக்கு பலவிசயங்கள் தெரிந்திருக்கும், அதை நாம் பெரிதாக எடுத்துக் கொள்வது கிடையாது. அதனால் அதை இங்கே பகிர்ந்து கொள்வது கிடையாது, அல்லது பகிர்ந்து கொள்ள தயங்குகிறேன். ஆனால், யாராவது அதைப் பற்றி கேட்டால் நாம் விரிவாக விளக்க தயங்குவதே கிடையாது. உதாரணமாக: [1] சிறந்த முறையில் புகைப் படம் எடுப்பது எப்படி? [2] வளைகுடாவில் எண்ணை எப்படி எடுக்கிறார்கள்? [3] ஒரு புத்தகம் அச்சிட என்னென்ன தேவைகள்? [4] பத்திரிக்கைகளில் கதைகள் கவிதைகள் பிரசுரிப்பது எப்படி?

இந்தப் பகுதியில் இனி நண்பர்கள் தங்கள் அறிய விரும்பும் விசயங்களை கேட்கப் போகிறார்கள். மற்ற நண்பர்கள் யாருக்காவது அது பற்றிய அனுபவம், திறமை, ஞானம் இருந்தால், அவர்களுக்கு உதவி செய்வீர்கள் என நம்புகிறேன். அவற்றை இங்கே தனி தலைப்பாக பகிர்ந்து கொள்ளவும்.

[இதற்கு சரியான தலைப்பை தேடுகிறேன்.. பரிந்துரைக்கவும்]

..

அவற்றை இங்கே தனி தலைப்பாக பகிர்ந்து கொள்ளவும்.

[இதற்கு சரியான தலைப்பை தேடுகிறேன்.. பரிந்துரைக்கவும்]



தெரியுமா?தெரியாதா?


*தெரியாததை தெரியவையுங்களேன்

*தெரியுமா?தெரியாதா?தெளிவு கிடைக்குமே!

*தெரியாததை தெளிவாக்குங்களேன்!

*ஏன்?எதற்கு ?எப்படி?
இது எல்லாம் தலைப்பு வைக்க யோசித்தது.......தெரியுமா?தெரியாதா? தேர்வு செய்தேன்.இதுவே நல்லாயிருக்கா?


எல்லாருக்கும் எல்லாமே தெரிந்துருக்கும் சொல்ல முடியாது.."இது கூட தெரியாதா உனக்கு" என்று நினைப்பார்களோ என்று நினைத்தே பாதி கேக்காம இருந்திருக்கலாம்......எப்பவும் தெரியாததை தெரியாது சொல்லவே ஒரு தைரியம் வேணும்.....நினைக்கிறேன். அப்படி கேட்கும் போது அது ஏற்கனவே தெரிந்தால் விளக்கம் சொல்லனும் கேட்டு கொள்கிறேன். நமக்கு ஆலோசனை சொல்லவோ அல்லது நமக்கு தெரியாததை தைரியமாக கேட்டு தெரிஞ்சுக்க ஒரு குடும்பமே இருக்க்கே........அப்படி தெரியாத தெரிந்துகொள்ள தான் இந்த திரியில கேட்க நினைத்தேன்.
**********************************************************************************************
நான் கேள்வி
கேட்க.......தயார்!
நீங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்கககககககககககககககககககக பதில்
சொல்லலலல்லல்லலல்.....தயாரா?
***********************************************************************************************
சரி என்னோட முதல் கேள்வி வேலை வாய்ப்பு அலுவலகம் பத்தி தான்.....
எங்க பதிவு செய்யனும் ஏன் பதிவு செய்யனும் ?எதற்கு தனியார் இருக்கும்போது ...பதிவு செய்யனும் ?
அப்படி ஏற்கனவே பதிவு செய்தவங்க seniority என்று சொல்லுவது என்ன?
அப்பறம் இதுக்கும் tnpse exam க்கும் சம்மதம் இருக்கா?
எந்தெந்த மாவட்டம் எங்கு பதிவு செய்யனும்....
எந்த எந்த படிப்புக்கு எங்க பதிவு பதிவு செய்யனும் ?
எந்த வருஷம் வரை பதிவு செய்தவங்களுக்கு வேலை கிடைச்சுருக்கு?

ஒர் அலசல் செய்து தெளிவான பதில் தருவீங்களா?
 
அப்பளத்தில் சோடா உப்பு எனப்படும் சோடியம் பை கார்பனேட் எனப்படும் வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது.ஒன்று இரண்டு சாப்பிடுவதால் பாதகமில்லை.நல்ல தரமான தயாரிப்புகளை உபயோகப்படுத்தினால் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
 
பதம்- பக்குவம்
சோறு,உணவு,
தண்ணீர்,
ஏற்ற சமயம்
தரம்
வரிசை
ஓளி
 
பதம் - வார்த்தை, பாட்டு, பாதம், அர்த்தம், பக்குவம் என்றும் பொருள்படும்.
---------------------------------------------------------------------------------------


வேலை வாய்ப்பு பதிவு பற்றி


http://www.employment.tn.gov.in/

இந்த தளத்தில் உங்களுக்குத் தேவையாப அனைத்து விபரங்களும் கிடைக்கும்.

TNPSC பற்றி

http://www.tnpsc.gov.in/Docu/instns_tam_new.pdf

http://www.tnpsc.gov.in/



52 கல்வி முதுகலை பட்டம் பதிவு: வேலை வாய்ப்பு பதிவு குறித்து விளக்கம்
Friday, 12 June 2009
சென்னை, எம் ஏ, எம்எம்சி, எம்.காம். உள்ளிட்ட முதுநிலை கல்வித் தகுதி மற்றும் இவற்றுடன் பி.எட் தகுதியை தபால் மூலம் மாநில வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது எப்படி என்பது குறித்து சென்னை வேலை வாய்ப்புத் துறை உதவி இயக்குனர் ஆராவமுதன் விளக்கம் அளித்தார்.


பட்டப் படிப்பு வரையிலான கல்வித் தகுதியை அந்தந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். எம்.ஏ., எம்.எஸ்.சி., எம்.காம், மற்றும் பி.இ., எம்.பி.பி.எஸ்., பி.எஸ்.சி, விவசாயம், பி.வி. எஸ்.சி உள்ளிட்ட தொழிற் கல்வி கல்வித் தகுதியையும் சென்னை அல்லது மதுரையில் உள்ள மாநில தொழில் மற்றும் செயல் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

முன்பு சென்னையில் மட்டும் மாநில வேலை வாய்ப்பு அலுவலகம் இயங்கி வந்தது. தென் மாவட்டங்களைச் சேர்ந்த முதுநிலை பட்டதாரிகளின் வசதிக்காக தற்போது மதுரையில் மாநில வேலை வாய்ப்பு அலுவலகத்தின் புதிய கிளை தொடங்கப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மதுரை கே.புதூரில் உள்ள மாநில வேலை வாய்ப்பு அலுவலக கிளையிலும் பதிவு செய்ய வேண்டும்.

இதேபோல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த முதுநிலை பட்டதாரிகள் தங்கள் கல்வித் தகுதியை சென்னை சாந்தோமில் உள்ள மாநில வேலை வாய்ப்பு அலவலகத்திலும் பதிய வேண்டும்.

மாநில வேலை வாய்ப்பு அலுவலகத்தில் முதுநிலை கல்வித் தகுதியை நேரில் மட்டுமின்றி தபால் மூலமாகவும் பதிவு செய்யலாம். இந்த முறை பற்றி நிறைய மாணவ, மாணவிகள் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். தபால் மூலம் பதிவு செய்வது குறித்து சென்னை சாந்தோமில் உள்ள மாநில வேலை வாய்ப்பு அலவலக உதவி இயக்குனர் ஆராவமுதனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

முதநிலை பட்டதாரிகள் தங்கள் கல்வித் தகுதி சான்றிதழ்களை (புரவிஷன்ஸ்) சாதிச்சான்று, எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்று (பிறந்த தினத்திற்காக) ரேஷன் கார்டு ஆகியவற்றின் நகல்களை சான்றொப்பம் (அட்டஸ்டேஷன்) பெற்று மாநில வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு ரிஜிஸ்டர் தபாலில் அனுப்ப வேண்டும்.

(முகவரி- உதவி இயக்குனர், மாநில தொழில் மற்றும் செயல் வேலை வாய்ப்பு அலுவலகம், 56, குயில் தோட்டம், ஜெயபிரகாஷ் நாராயணன் மாளிகை, சாந்தோம், சென்னை-4 தொலைபேசி எண்: 044- 24642740).

பதிவு தபால் பெறப்பட்ட தேதியில் பதிவு மூப்பு கொடுத்து வேலை வாய்ப்பு பதவி அட்டை வீட்டு முகவரிக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும். பதிவு தபால் அனுப்பியதற்கான ஒப்புதல் அட்டையை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வேளை தபால் பெறுவதில் பிரச்சனை ஏற்பட்டால் கூட ஒப்புதல் அட்டையை அடிப்படை வைத்து பதிவு மூப்பு அளிக்கப்படும்.
(மதுரை கிளை அலுவலகத்திற்கு உட்பட்ட மாட்டங்களைச் சேர்ந்தவர்கள் பதிவு தபாலை அந்த அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். முகவரி -மாவ்ட வேலை வாய்ப்பு அலுவலர், மாநில தொழில் மற்றும் செயல் வேலை வாய்ப்பு அலுவலக கிளை, அரசினர் ஐ.டி.ஐ.வளாகம், கே.புதூர், மதுரை-7 தொலைபேசி எண்.0452-2564343).

எக்காரணம் கொண்டும் அசல் சான்றிதழ்களை அனுப்பக் கூடாது. சான்றொப்பம் பெறப்பட்ட சான்றிதழ்களின் நகல்களை மட்டுமே அனுப்ப வேண்டும். இதே போல், முறையில் கூடுதல் கல்வித்தகுதியை இதே முறையில் விளக்கக் கடிதம் அனுப்பி பதிவு செய்து கொள்ளலாம். மூன்று ஆண்டுகள் கழித்த பிறகு பதிவை புதுப்பிக்க நேரில் வர வேண்டும் என்ற அவசியமில்லை.

வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணையதளத்தின் www.employoment.tn.gov.in மூலம் ஆன்லைனிலேயே புதுப்பித்து பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், முகவரி மாற்றத்தை ஆன்லைனில் பதிவு செய்ய முடியாது. முகவரி மாற்றும் செய்ய விரும்புவோர் தங்கள் வேலை வாய்ப்பு அட்டை நகல், ரேஷன் கார்டு நகல் ஆகியவற்றில் சான்றொப்பம் பெற்று பதிவு தபாலில் விளக்கக் கடிதத்துடன் அனுப்ப வேண்டும்.

இவ்வாறு ஆராவமுதன் கூறினார்.


நன்றி : சங்கமம்.

http://sangamamlive.in/index.php?/content/view/3022/31/
 
Last edited:
பதம் - வார்த்தை, பாட்டு, பாதம், அர்த்தம், பக்குவம் என்றும் பொருள்படும்.
---------------------------------------------------------------------------------------


வேலை வாய்ப்பு பதிவு பற்றி


http://www.employment.tn.gov.in/

இந்த தளத்தில் உங்களுக்குத் தேவையாப அனைத்து விபரங்களும் கிடைக்கும்.

TNPSC பற்றி

[media]http://www.tnpsc.gov.in/Docu/instns_tam_new.pdf[/media]

http://www.tnpsc.gov.in/



52 கல்வி முதுகலை பட்டம் பதிவு: வேலை வாய்ப்பு பதிவு குறித்து விளக்கம்
Friday, 12 June 2009
சென்னை, எம் ஏ, எம்எம்சி, எம்.காம். உள்ளிட்ட முதுநிலை கல்வித் தகுதி மற்றும் இவற்றுடன் பி.எட் தகுதியை தபால் மூலம் மாநில வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது எப்படி என்பது குறித்து சென்னை வேலை வாய்ப்புத் துறை உதவி இயக்குனர் ஆராவமுதன் விளக்கம் அளித்தார்.


பட்டப் படிப்பு வரையிலான கல்வித் தகுதியை அந்தந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். எம்.ஏ., எம்.எஸ்.சி., எம்.காம், மற்றும் பி.இ., எம்.பி.பி.எஸ்., பி.எஸ்.சி, விவசாயம், பி.வி. எஸ்.சி உள்ளிட்ட தொழிற் கல்வி கல்வித் தகுதியையும் சென்னை அல்லது மதுரையில் உள்ள மாநில தொழில் மற்றும் செயல் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

முன்பு சென்னையில் மட்டும் மாநில வேலை வாய்ப்பு அலுவலகம் இயங்கி வந்தது. தென் மாவட்டங்களைச் சேர்ந்த முதுநிலை பட்டதாரிகளின் வசதிக்காக தற்போது மதுரையில் மாநில வேலை வாய்ப்பு அலுவலகத்தின் புதிய கிளை தொடங்கப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மதுரை கே.புதூரில் உள்ள மாநில வேலை வாய்ப்பு அலுவலக கிளையிலும் பதிவு செய்ய வேண்டும்.

இதேபோல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த முதுநிலை பட்டதாரிகள் தங்கள் கல்வித் தகுதியை சென்னை சாந்தோமில் உள்ள மாநில வேலை வாய்ப்பு அலவலகத்திலும் பதிய வேண்டும்.

மாநில வேலை வாய்ப்பு அலுவலகத்தில் முதுநிலை கல்வித் தகுதியை நேரில் மட்டுமின்றி தபால் மூலமாகவும் பதிவு செய்யலாம். இந்த முறை பற்றி நிறைய மாணவ, மாணவிகள் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். தபால் மூலம் பதிவு செய்வது குறித்து சென்னை சாந்தோமில் உள்ள மாநில வேலை வாய்ப்பு அலவலக உதவி இயக்குனர் ஆராவமுதனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

முதநிலை பட்டதாரிகள் தங்கள் கல்வித் தகுதி சான்றிதழ்களை (புரவிஷன்ஸ்) சாதிச்சான்று, எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்று (பிறந்த தினத்திற்காக) ரேஷன் கார்டு ஆகியவற்றின் நகல்களை சான்றொப்பம் (அட்டஸ்டேஷன்) பெற்று மாநில வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு ரிஜிஸ்டர் தபாலில் அனுப்ப வேண்டும்.

(முகவரி- உதவி இயக்குனர், மாநில தொழில் மற்றும் செயல் வேலை வாய்ப்பு அலுவலகம், 56, குயில் தோட்டம், ஜெயபிரகாஷ் நாராயணன் மாளிகை, சாந்தோம், சென்னை-4 தொலைபேசி எண்: 044- 24642740).

பதிவு தபால் பெறப்பட்ட தேதியில் பதிவு மூப்பு கொடுத்து வேலை வாய்ப்பு பதவி அட்டை வீட்டு முகவரிக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும். பதிவு தபால் அனுப்பியதற்கான ஒப்புதல் அட்டையை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வேளை தபால் பெறுவதில் பிரச்சனை ஏற்பட்டால் கூட ஒப்புதல் அட்டையை அடிப்படை வைத்து பதிவு மூப்பு அளிக்கப்படும்.
(மதுரை கிளை அலுவலகத்திற்கு உட்பட்ட மாட்டங்களைச் சேர்ந்தவர்கள் பதிவு தபாலை அந்த அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். முகவரி -மாவ்ட வேலை வாய்ப்பு அலுவலர், மாநில தொழில் மற்றும் செயல் வேலை வாய்ப்பு அலுவலக கிளை, அரசினர் ஐ.டி.ஐ.வளாகம், கே.புதூர், மதுரை-7 தொலைபேசி எண்.0452-2564343).

எக்காரணம் கொண்டும் அசல் சான்றிதழ்களை அனுப்பக் கூடாது. சான்றொப்பம் பெறப்பட்ட சான்றிதழ்களின் நகல்களை மட்டுமே அனுப்ப வேண்டும். இதே போல், முறையில் கூடுதல் கல்வித்தகுதியை இதே முறையில் விளக்கக் கடிதம் அனுப்பி பதிவு செய்து கொள்ளலாம். மூன்று ஆண்டுகள் கழித்த பிறகு பதிவை புதுப்பிக்க நேரில் வர வேண்டும் என்ற அவசியமில்லை.

வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணையதளத்தின் www.employoment.tn.gov.in மூலம் ஆன்லைனிலேயே புதுப்பித்து பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், முகவரி மாற்றத்தை ஆன்லைனில் பதிவு செய்ய முடியாது. முகவரி மாற்றும் செய்ய விரும்புவோர் தங்கள் வேலை வாய்ப்பு அட்டை நகல், ரேஷன் கார்டு நகல் ஆகியவற்றில் சான்றொப்பம் பெற்று பதிவு தபாலில் விளக்கக் கடிதத்துடன் அனுப்ப வேண்டும்.

இவ்வாறு ஆராவமுதன் கூறினார்.


நன்றி : சங்கமம்.

http://sangamamlive.in/index.php?/content/view/3022/31/

மிக அருமையான தகவல்கள் தாமரை அவர்களே இதைபோன்ற அத்தியாவசியமான தகவல்களை தொடர்ந்து கொடுங்கள் பாராட்டுகள்
 
நன்றி
தாமரை அவர்களே.....
சாந்தோம் பதிவு செய்ததிற்கு கொடுத்த ஆவணத்தை தொலைத்துவிட்டால் மாற்று வழி இருக்கிறதா/ என்று சொல்லவும்..
 
உங்கள் பதிவு எண் உங்களிடம் இருக்கிறதா?

பதிவு எண்ணும் உங்கள் பிறந்த நாளும் இருந்தால், இணையதளத்திற்குச் சென்று புதுப்பித்துக் கொள்ளலாம். புதுப்பித்த பின்னால் அது தரும் தவலை பிரிண்ட் செய்து கொள்ளலாம்.

http://www.employment.tn.gov.in/ucanrenew.asp


Registration No format : 4 digit Year, followed by Sex ( M/F), followed by 5 digit running serial no.

for ex: PE/890/90 has to be logged in as 1990M00890, WPE/1120/92 has to be logged in as 1992F01120.

நீங்கள் பதிவு செய்த வருடம் 2004 என வைத்துக் கொள்வோம்..

PE/xxxxx/04 உங்க பதிவு எண்ணாக இருக்கும்.

இந்த xxxxx தெரியாவிட்டால் நீங்கள் பதிவு செய்த வருடம் மாதம் நாள் இந்தத் தகவல்களோடு சென்று சாந்தோம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உங்கள் பதிவு எண்ணை மீட்டெடுக்க முயற்சிக்கலாம்.

நீங்கள் உங்கள் பதிவை புதுப்பிக்கவே இல்லை காலாவதி ஆகி விட்டது என்றாலும் தண்டத்தொகை செலுத்தி புதுப்ப்பிக்கலாம்


Renewal of Registration
Candidates should renew their registrations with the Employment Exchanges once in three years. Candidates who fail to renew registrations in due time could apply for renewal up to 18 months from the month during which the renewal falls due. This concession can be availed only once.

The registrants of the Professional and Executive Employment Office, Chennai, can renew their registrations online through the web at
http://www.employment.tn.gov.in/ucanrenew.asp

புதுப்பிக்க பதிவு எண் இருந்தால் போதும்.
 
அருமையான பதில். தெளிந்தேன். இக்கேள்வியை இளசு அண்ணாவிடமும் கேட்டு மேலும் பல மருத்துவ செய்தியை அறிய விரும்புகிறேன். பொறுப்பாளர்கள் கவனத்தில் எடுத்து இக்கேள்வியை தகுந்த இடத்துக்கு பதிவாக்க என் விண்ணப்பம்.

நன்றிகள் தாமரை அண்ணா. :)
==========
கேள்வி
சமீபத்தில் மிக முக்கியமான தலைப்பு பற்றி ஒரு மருத்துவருடன் உரையாட நேர்ந்தது. இதை உங்களிடம் கேட்பது எத்தனை சரி என்று தெரியவில்லை.. காரணம், இளசு அண்ணா மட்டுமே இக்கேள்விக்கு இன்னும் ஆழ்ந்து விடையளிக்க இயலுமென நினைக்கிறேன். அவரிடமும் இக்கேள்வியை எழுப்ப என் வேண்டுகோளுடன் கேட்கத் துவங்குகிறேன்.

--
"Hygiene hypothesis" - "ஹைஜீன் ஹைப்போதீசிஸ்" என்றால் என்ன? அதைப் பற்றி சற்று விரிவாகவும் எளிமையாகவும் சொல்ல இயலுமா?

கேள்வி வந்ததன் பின்புலம் பின்னர் சொல்கிறேன்.
 
Last edited by a moderator:
என்னிடம் நிறைய புகைப்படங்கள் கணினியில் உள்ளது .(500 கும் மேல்) அதை பல வருடங்கள் பாதுகாக்க சிறப்பான வழி கூறுங்கள். அதே போல் வீடியோ கிளிப்பிங்கும் உள்ளது.
 
நண்பர்களே,
இந்திய அரசின் தகவல் அறியும் உரிமைச்சட்டம் பற்றிய விரிவான விளக்கமான தெளிவான பதில் தேவை.அது குறித்து தெரிந்த நண்பர்கள் இங்கு ஒரு விளக்கமான பதிவிடுங்கள் அல்லது அதுபற்றிய மென்னூல் அல்லது வலைபதிவு,வலைமனை இருப்பின் அதன் சுட்டியை இணைக்கவும்.அது தமிழில் இருத்தல் நலம்
 
தகவல் அறியும் உரிமைச் சட்டம்

ஆசிரியர்:
தியாகச் செம்மல்


வெளியீடு:
Aazhi


விலை:ரூ. 30.00
பக்கங்கள்:
56


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிறப்பு, வளர்ப்பு, சாதனை என அனைத்தையும் எளிமையாக விவரிக்கிறது இச்சிறுநூல். தகவல் அறியும் சட்டத்தை பயன்படுத்துவது தொடர்பாக எழும் அனைத்து கேள்விகளுக்கும் இந்நூல் பதில் அளிக்கிறது. இந்த சட்டத்தைப் பயன்படுத்தி பெறப்பட்ட பல முக்கியமான தகவல்களும் இணைக்கப்பட்டுள்ளது நூலின் கூடுதல் பலம்.

தமிழகத்தின் எல்லா புத்தக நிலையங்களிலும் கிடைக்கும். உங்களுக்குத் தேவையான எல்லாத்தகவலும்....உங்கள் கைகளில் இருக்கும். வாங்கிப் பயனடையுங்கள் வெங்கடேசன்.
 
நன்றி நன்றி தகவலுக்கு நன்றி நண்பரே
 
Last edited by a moderator:
நண்பர்களே, நம் உடலிலுள்ள நாளமில்லா சுரப்பிகளைப் பற்றி அவை எங்கெங்கு உள்ளன? ஒவ்வொன்றின் வேலை என்ன? அவற்றை கட்டுப்படுத்துவது எது? முழு விளக்கம் தேவை
 
ஏற்கனவே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முது நிலை பட்டப் படிப்பை பதிவு செய்துவிட்டேன். 2012 ல் தான் ரினீவல் செய்ய வேண்டும்.தற்போது முடித்துள்ள பி.எச் டி பட்டத்தை அத்துடன் பதிவு செய்ய என்ன செய்ய வேண்டும்.? ஆன்லைனில் பதிய முடியுமா?.
 
Back
Top